jumma bayan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
jumma bayan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21 ஏப்ரல், 2026

பிறர் தேவைக்கு முன்னுரிமை part 2 - முன்னோர்களின் வரலாறுகள்

  نماذِجُ من الإيثارِ عِندَ السَّلَفِ


-
خرَج عبدُ اللهِ بنُ جَعفَرٍ إلى ضَيعةٍ له، فنَزَل على نخيلِ قومٍ، وفيه غلامٌ أسوَدُ يعمَلُ فيه، إذ أتى الغلامُ بقوتِه فدَخَل الحائِطَ كَلبٌ ودنا من الغلامِ، فرمى إليه الغلامُ بقُرصٍ فأكَله، ثمَّ رمى إليه الثَّانيَ والثَّالِثَ فأكلَه، وعبدُ اللهِ ينظُرُ إليه، فقال: يا غُلامُ، كم قُوتُك كُلَّ يومٍ؟ قال: ما رأيتَ. قال: فلِمَ آثَرْتَ به هذا الكَلْبَ؟! قال: ما هي بأرضِ كِلابٍ، إنَّه جاء من مسافةٍ بعيدةٍ جائِعًا، فكَرِهْتُ أن أشبَعَ وهو جائِعٌ! قال: فما أنت صانِعٌ اليومَ؟! قال: أطوي يومي هذا! فقال عبدُ اللهِ بنُ جَعفَرٍ: أُلامُ على السَّخاءِ! إنَّ هذا الغلامَ لأسخى منِّي! فاشترى الحائِطَ والغُلامَ وما فيه من الآلاتِ، فأعتَقَ الغُلامَ ووَهَبَه منه  !


-
عن أبي الحَسَنِ الأنطاكيِّ: أنَّه اجتمع عِندَه نَيِّفٌ وثلاثون رجُلًا بقريةٍ مِن قُرى الرَّيِّ، ومعهم أرغِفةٌ معدودةٌ لا تُشبِعُ جَميعَهم، فكَسَّروا الرُّغْفانَ، وأطفَؤوا السِّراجَ، وجَلَسوا للطَّعامِ، فلمَّا رُفِع فإذا الطَّعامُ بحالِه، لم يأكُلْ منه أحدٌ شيئًا إيثارًا لصاحِبِه على نفسِه  !


-
قال الهَيثَمُ بنُ جَميلٍ: جاء فُضَيلُ بنُ مَرزوقٍ -وكان من أئمَّةِ الهُدى زُهدًا وفَضلًا- إلى الحَسَنِ بنِ حُيَيٍّ، فأخبَرَه أنْ ليس عِندَه شيءٌ، فقام الحَسَنُ، فأخرج سِتَّةَ دراهِمَ، وأخبره أنَّه ليس عِندَه غيرُها، فقال: سُبحانَ اللهِ أليس عِندَك غيرُها وأنا آخُذُها؟! فأخَذَ ثلاثةً وتَرَك ثلاثةً  .


-
ورُوِيَ أنَّ مسروقًا ادَّانَ دَينًا ثقيلًا، وكان على أخيه خَيثمةَ دَينٌ، قال: فذَهَب مسروقٌ فقضى دَينَ خيثمةَ وهو لا يَعلَمُ، وذَهَب خَيثمةُ فقضى دَينَ مَسروقٍ وهو لا يَعلَمُ  !


-
وقال عبَّاسُ بنُ دِهقانَ: ما خرَج أحدٌ من الدُّنيا كما دخَلها إلَّا بِشرُ بنُ الحارِثِ؛ فإنَّه أتاه رجُلٌ في مَرَضِه، فشكا إليه الحاجةَ، فنَزَع قميصَه وأعطاه إيَّاه، واستعار ثوبًا فمات فيه  !


-
عن أبي جَعفَرٍ محمَّدِ بنِ عبدِ الرَّحمنِ الصَّيرفيِّ، قال: (بَعَث إليَّ الحَكَمُ بنُ موسى في أيَّامِ عيدٍ أنَّه يحتاجُ إلى نَفَقةٍ، ولم يَكُ عِندي إلَّا ثلاثةُ آلافِ دِرهَمٍ، فوَجَّهْتُ إليه بها، فلمَّا صارت في قبضتِه وَجَّه إليه خلَّادُ بنُ أسلَمَ أنَّه يحتاجُ إلى نَفَقةٍ، فوَجَّه بها كُلِّها إليه، واحتَجْتُ أنا إلى نَفَقةٍ فوَجَّهْتُ إلى خَلَّادٍ: إنِّي أحتاجُ إلى نَفَقةٍ، فوَجَّه بها كُلِّها إليَّ، فلمَّا رأيتُها مصرورةً في خِرقتِها وهي الدَّراهِمُ بعَيْنِها أنكَرْتُ ذلك، فبعَثْتُ إلى خلَّادٍ: حَدِّثْني بقِصَّةِ هذه الدَّراهِمِ؟ فأخبَرَني أنَّ الحكَمَ بنَ موسى بعَث بها إليه، فوَجَّهْتُ إلى الحَكَمِ منها بألفٍ، ووَجَّهْتُ إلى خلَّادٍ منها بألفٍ، وأخذْتُ أنا منها ألفًا!)  .


-
عن محمَّدِ بنِ داودَ قال: (سمِعتُ أبا بكرٍ الفُوطيَّ وأبا عَمرِو بنَ الأدميِّ يقولانِ، وكانا يتواخيانِ في اللهِ تعالى: خرَجْنا من بغدادَ نريدُ الكوفةَ، فلمَّا صِرْنا في بعضِ الطَّريقِ إذا نحن بسَبُعينِ رابِضَينِ على الطَّريقِ، فقال أبو بكرٍ لأبي عَمرٍو: أنا أكبَرُ سِنًّا منك، دَعْني حتَّى أتقَدَّمَك، فإنْ كانت حادثةٌ اشتَغَلوا بي عنك ونجَوتَ أنت! فقال أبو عَمرٍو: نفسي ما تسامِحُني بهذا، ولكِنْ نكونُ جميعًا في مكانٍ واحدٍ، فإن كانت حادِثةٌ كُنَّا جميعًا، فجازا جميعًا في وَسَطِ السَّبُعينِ فلم يتحَرَّكا، ومَرَّا سالِمَينِ!)  

.
-
و(خرَج إبراهيمُ بنُ أدهَمَ رَحِمه اللهُ في سَفَرٍ ومعه ثلاثةُ نَفَرٍ، فدَخَلوا مسجدًا في بعضِ المفاوِزِ والبَردُ شديدٌ، وليس للمسجِدِ بابٌ، فلمَّا ناموا قام إبراهيمُ فوَقَف على البابِ إلى الصَّباحِ، فقيل له: لمْ تَنَمْ؟ فقال: خَشِيتُ أن يصيبَكم البَرْدُ، فقُمتُ مقامَ البابِ.


إيثارُ أحمدَ بنِ حَنبَلٍ:
 (
قال هارونُ المُستَملي: لقيتُ أحمدَ بنَ حَنبَلٍ، فقُلتُ: ما عِندَنا شيءٌ. فأعطاني خمسةَ دراهِمَ، وقال: ما عِندَنا غيرُها. قال المَرُّوذي: رأيتُ أبا عبدِ اللهِ قد وَهَب لرجُلٍ قميصَه، وقال: ربَّما واسى مِن قُوتِه


அபூல் ஹஸன் அல்-அந்தாக்கி பற்றி கூறப்படுகிறது: ரய்ய் பகுதியிலுள்ள ஒரு கிராமத்தில், அவரிடம் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் கூடியிருந்தனர். அவர்களிடம் சில ரொட்டிகள் மட்டுமே இருந்தன; அவை அனைவருக்கும் போதுமானதாக இல்லை. அவர்கள் அந்த ரொட்டிகளை துண்டித்தார்கள், விளக்கை அணைத்தார்கள், உணவிற்கு அமர்ந்தார்கள். பின்னர் பாத்திரம் எடுக்கப்பட்டபோது, உணவு இருந்தபடியே இருந்தது; தம்மைவிட மற்றவருக்கே முன்னுரிமை கொடுத்து யாரும் எதையும் சாப்பிடவில்லை!

அல்-ஹைதம் பின் ஜமீல் கூறினார்: ஃபுதைல் பின் மர்ஸூக் — அவர் துறவியிலும் நற்பண்பிலும் முன்னோடி — ஹசன் பின் ஹுயய்யிடம் வந்து, தன்னிடம் எதுவும் இல்லை என்று சொன்னார். உடனே ஹசன் எழுந்து ஆறு திர்ஹம்களை எடுத்துவந்து, “என்னிடம் இதைத்தவிர வேறில்லை” என்றார். அதற்கு அவர், “சுப்ஹானல்லாஹ்! உன்னிடம் இதைத்தவிர வேறில்லை என்றபோது, அதை முழுவதும் நான் எப்படித் எடுத்துக் கொள்வேன்?” என்று கூறி, மூன்றை மட்டும் எடுத்துக் கொண்டு, மூன்றை விட்டுச் சென்றார்.

மஸ்ரூக் என்பவருக்கு பெரிய கடன் இருந்தது. அவருடைய சகோதரர் கைதமாவுக்கும் கடன் இருந்தது. மஸ்ரூக் சென்று கைதமாவின் கடனை அவர் அறியாமல் செலுத்தினார். அதேபோல் கைதமா சென்று மஸ்ரூக்கின் கடனை அவர் அறியாமல் செலுத்தினார்!

அப்பாஸ் பின் திஹ்கான் கூறினார்: “உலகத்திலிருந்து, உலகில் வந்தபடியே வெளியேறியவர் பிஷ்ர் பின் அல்-ஹாரித் மட்டுமே. அவருடைய இறுதி நோயில் ஒருவர் வந்து தன் வறுமையைச் சொன்னபோது, அவர் தன் சட்டையை கழற்றி அவனுக்குக் கொடுத்தார். பிறகு வேறொருவரிடமிருந்து ஆடை கடன் வாங்கி அதிலேயே மரணமடைந்தார்.”

அபூ ஜஃபர் முஹம்மத் பின் அப்துர் ரஹ்மான் அஸ்-ஸைரஃபி கூறினார்:
“ஈத் நாட்களில் ஹகம் பின் மூசா எனக்கு செய்தி அனுப்பி, செலவிற்குப் பணம் தேவை என்று கூறினார். என்னிடம் மூவாயிரம் திர்ஹம்கள் மட்டுமே இருந்தன; அவற்றை அனைத்தையும் அவரிடம் அனுப்பினேன். அவர் பெற்றதும், கல்லாத் பின் அஸ்லம் அவரிடம் செலவிற்குப் பணம் தேவை என்று செய்தி அனுப்பினார்; உடனே ஹகம் அவற்றை அனைத்தையும் அவரிடம் அனுப்பிவிட்டார். பின்னர் எனக்கே செலவிற்குப் பணம் தேவைப்பட்டதால், கல்லாதிடம் செய்தி அனுப்பினேன்; அவர் அதே பணத்தை முழுவதுமாக மீண்டும் எனக்கு அனுப்பினார். அந்தப் பணப்பை அதே துணியிலும் அதே நாணயங்களுடனும் இருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். பின்னர் கல்லாதிடம் கேட்டேன்; அவர், ஹகம் அதைப் அனுப்பியதாகச் சொன்னார். அதனால் ஆயிரம் திர்ஹம்களை ஹகமுக்கும், ஆயிரத்தை கல்லாதுக்கும் அனுப்பி, ஆயிரத்தை நான் வைத்துக் கொண்டேன்.”

முஹம்மத் பின் தாவூத் கூறினார்:
“நான் அபூபக்ர் அல்-ஃபூத்தியும் அபூஅம்ர் பின் அல்-அதமியும் பேசுவதை கேட்டேன். அவர்கள் அல்லாஹ்வுக்காக சகோதரர்களாக இருந்தனர். நாங்கள் பக்தாதிலிருந்து கூஃபாவிற்கு பயணம் செய்தோம். வழியில் இரு  சிங்கங்கள் பாதையில் படுத்திருந்தன. அபூபக்ர், அபூஅம்ரிடம், ‘நான் வயதில் பெரியவன்; நான் முன்னால் செல்வேன். ஏதாவது ஆபத்து வந்தால், அவை என்னைத் தாக்கும்; நீ தப்பிப்பாய்’ என்றார். அதற்கு அபூஅம்ர், ‘என் மனம் இதை ஏற்காது. நாம் இருவரும் ஒன்றாக இருப்போம்; ஏதாவது நடந்தால் இருவருக்கும் ஒன்றாகவே நடக்கட்டும்’ என்றார். அவர்கள் இருவரும் அந்த இரு சிங்கங்களின் நடுவே சென்றார்கள்; அவை அசையவே இல்லை. அவர்கள் பாதுகாப்பாகச் சென்றார்கள்.”

இப்ராஹீம் பின் அத்ஹம் رحمه الله பயணத்தில் மூவருடன் இருந்தார். அவர்கள் ஒரு வெறிச்சோடிய இடத்தில் உள்ள பள்ளிவாசலுக்குள் சென்றார்கள். கடும் குளிர்; அந்த பள்ளிவாசலுக்கு கதவு இல்லை. அவர்கள் தூங்கியபோது, இப்ராஹீம் எழுந்து கதவு இருக்கும் இடத்தில் காலை வரை நின்றார். அவரிடம், “ஏன் தூங்கவில்லை?” என்று கேட்டபோது, “உங்களுக்கு குளிர் தாக்கிவிடுமோ என்று பயந்தேன்; அதனால் கதவாக நின்றேன்” என்றார்.

இமாம் அஹ்மத் பின் ஹன்பலின் தன்னலமின்மை:

ஹாரூன் அல்-முஸ்தம்லி கூறினார்: “நான் அஹ்மத் பின் ஹன்பலை சந்தித்து, ‘எங்களிடம் எதுவும் இல்லை’ என்றேன். அவர் எனக்கு ஐந்து திர்ஹம்கள் கொடுத்து, ‘எங்களிடம் இதைத்தவிர வேறில்லை’ என்றார்.”

அல்-மர்ரூதி கூறினார்: “அபூ அப்தில்லாஹ் (இமாம் அஹ்மத்) ஒருவருக்கு தன் சட்டையை அன்பளிப்பாக வழங்கியதை நான் கண்டேன். அவர் தன் உணவிலிருந்தே பகிர்ந்து உதவுவார்.”

26 செப்டம்பர், 2025

ஸலவாத்து சிறப்புகள் - ஆதாரங்கள் - அனுபவங்கள்



فضائل الصلاة على النبي ﷺ - بالأدلة والتجارب

நபிகள் நாயகம் ﷺ அவர்கள் மீது  ஸலவாத்து கூறுவதின் சிறப்புகள் -

ஆதாரங்கள் மற்றும் அனுபவ நிகழ்வுகள்.

1- புனித குர்ஆனிலிருந்து

சர்வவல்லமையுள்ள அல்லாஹ் கூறுகிறான்:

“நிச்சயமாக, அல்லாஹ்வும் அவனது வானவர்களாகிய அமரர்களும்  நபி (ஸல்) அவர்கள் மீது  ஸலவாத்து பொழிகின்றனர்.   விசுவாசிகளே நீங்களும் அவர் மீது ஸலவாத்தும் ஸலாமும் கூறுங்கள், (அல்-அஹ்ஸாப்: 56)

ஹதீஸ்களில்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “யார் என் மீது ஒரு முறை  ஸலவாத்து மொழிகிறாரோ, அல்லாஹ் அவர் மீது பத்து மடங்கு அருள்புரிகிறான் . அவரிடமிருந்து பத்து பாவங்களை அழித்து, அவரது அந்தஸ்தில் பத்து பதவிகளை உயர்த்துவான்.” (அல்-நஸாயி 1297)


"உயிர்த்தெழுதல் நாளில் உங்களில் எனக்கு மிக நெருக்கமானவர் என் மீது அதிக சலவாத்து உரைப்பவர் ஆவார்." (திர்மிதி 484)


உபை இப்னு கஅப் ( ரலி) அவர்கள், நாயகமே உங்கள் மீது ஸலவாத்து ஓதுவதில் என் நேரம் முழுவதையும் அர்ப்பணிக்கட்டுமா? என்று என்று ஆர்வத்துடன் கேட்ட பொழுது,

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நீ அவ்வாறு செய்தால்  உங்கள் கவலைகள் தீர்க்கப்படும், உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படும்." (திர்மிதி  2457)


2- மேதைகளின் அறிக்கைகள், வாக்குமூலங்கள் :

இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தி (அல்லாஹ் அவர் மீது கருணை காட்டட்டும்) அவர்கள் கூறினார்கள்:

"  எனது தேவைகளை நிறைவேற்றுகிற ஒரு மந்திர திறவுகோலாக நபியின் மீது ஸலவாத்து சொல்லுவதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.” 

“எனக்கு எந்த ஒரு நெருக்கடி பிரச்சினை என்றாலும் ஸலவாத்து சொல்வதை வழக்கமாக்கினேன் என்றால் உடனடி தீர்வு கிடைக்காமல் இருந்ததில்லை.”

இமாம் அஷ்-ஷாஃபிஈ (ரஹ்) அவர்களின் கவிதைகள்

இவ்வுலகில் எனக்கு ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டால், நான் உடனே செல்வது ஸலவாத்து தான். 

3- சமகால அனுபவங்கள் (உண்மை நிகழ்வுகள்)

சிரியாவிலிருந்து ஒரு மூதாட்டியின் வாக்குமூலம்: 

85 வயதுடைய நல்லொழுக்கமுள்ள ஒரு பாட்டி. அந்த பாட்டியிடம் ஒரு சகோதரி பேட்டி எடுத்தாள்:

நீங்கள் 85 வயதை அடைந்த பிறகும் உங்களிடம் சில அதிசயங்களை பார்க்கிறோம்.

நீங்கள் கண்ணாடி அணியாமலே குர்ஆனை சரளமாக ஓதுகிறீர்கள். மற்றவரின் உதவி இல்லாமலேயே உங்கள் அனைத்து தேவைகளையும் நீங்களாகவே பூர்த்தி செய்கிறீர்கள். உங்கள் முகத்தில் ஒரு ஆச்சரியமான பிரகாசம் தென்படுகிறது இதன் ரகசியம் என்ன?

அவள் பதிலளித்தாள்:

நான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீது இந்த வார்த்தைகளை வைத்து ஸலவாத்து அதிகம் அதிகம் ஓதுகிறேன்: 

“இறைவனே,  நீ திருப்தி படுகிற அளவுக்கு, வானங்கள் பூமி நிறைய, உன் தூதர் முஹம்மது நபி ﷺ அவர்கள் மீது ஸலவாத்தும் சாந்தியும் நிரப்புவாயாக!”

நான் அதை பல முறை மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.

நான் ஒவ்வொரு நாளும் சூரா யாசீன், சூரா அல்-பகரா மற்றும் சூரா அத்-துகான் ஆகியவற்றை ஓதி வருகிறேன்.

அதன் அபிவிருத்தி தான் நீங்கள் பார்க்கிற அதிசயம் என்றாள் அந்த மூதாட்டி.

2- கடனில் மூழ்கிய ஒரு நபர்:

நபி (ஸல்) அவர்கள் மீது தினமும் 1,000 ஸலவாத்துகளை தவறாமல்  சமர்ப்பணம் செய்தார். ஆச்சரியமான முறையில் அவரது கடன்களெல்லாம் தீருகிற அளவுக்கு இறைவன் அவருக்கு வசதி அளித்தான். 

(சில இஸ்லாமிய பத்திரிகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.)

3- விமானப் பயணி:

விமானம் பழுதடைந்தபோது, மற்ற பயணிகள் எல்லாம் பதற்றத்தில் கத்திக் கதறிக் கொண்டிருந்த பொழுது இந்த பயணி மாத்திரம் பதட்டம் இல்லாமல் அமைதியாக அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அதிகமான சலவாத்துகளை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார். 

சிறிது நேரத்தில் பழுது தானாகவே சரியாகி பத்திரமாக தர இறங்கியது. 

4- புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்:

மருத்துவ சிகிச்சைகள் பெரிய பலனைத் தராமல் மருத்துவர்கள் கைவிட்ட பொழுது வர் நம்பிக்கை இழக்காமல், மனவலிமையுடன் நபி (ஸல்) அவர்கள் மீது தினமும் 1,000  ஸலவாத்துகளை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தார், ஆச்சரியமான முறையில் அவரது நிலை மேம்பட்டது. அதன் பிறகு டெஸ்ட் செய்து பார்த்த பொழுது இயல்பு நிலை திரும்பி இருந்தது. 

(நவீன தஃவா ஏடுகளில் வந்த உண்மை தகவல்)

6- மினாவில் தொலைந்து போன யாத்ரீகர் ஒருவர் லட்சக்கணக்கான கூட்டத்திற்கு மத்தியில் தன் கூட்டத்தை தேடி அலைந்தார். உடனே ஸலவாத்தை கையில் எடுத்தார். தொடர்ந்து ஓதிக் கொண்டே இருந்தார் திடீரென யாரோ ஒருத்தர் வந்து அவரை அழைத்துச் சென்று அவருடைய கூட்டத்தாருடன் சேர்த்து விட்டு மறைந்து விட்டார். 

6- வேலை தேடுபவர்: அவர் நபி (ஸல்) அவர்களிடம் தினமும் 100  ஸலவாத்து ஓதுவதை வழக்கமாக கொண்டார் அவர் எதிர்பார்த்த நல்ல வேலை வாய்ப்பு கிடைத்த அனுபவத்தை அவர் சொல்லுகிறார்.

சுருக்கமாக

ஸலவாத்து ஓதினால்,

  • பாவங்கள் மன்னிக்கப்படும்
  • கவலைகள் நீங்கும்
  • கஷ்டங்கள் மாறும்
  • அந்தஸ்து உயரும்
  • அல்லாஹ்வுடைய பிரத்திகமான அருள் அவருக்கு கிடைக்கும் என்கிற கருத்து குர்ஆன் வசனங்களிலும் ஹதீஸ் நபி மொழிகளிலும் ஆதாரத்துடன் கிடைக்கின்றன. 

நடப்பு நிகழ்வுகளும் அனுபவபூர்வமான உண்மைகளும் அரபு பத்திரிகைகளிலும் இணையதளங்களிலும் ஆயிரக்கணக்கில் கொட்டி கிடக்கின்றன. அதில் ஒரு சில நிகழ்வுகளை மாத்திரம் இங்கு மொழிபெயர்த்து சொல்லப்பட்டிருக்கிறது.

மேற்கூறிய குறிப்புகள் அனைத்திற்குமான அரபு மூலம்

١- الأدلة من القرآن الكريم والحديث الشريف

قال الله تعالى:
﴿إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ ۚ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا﴾ (الأحزاب: 56)

ومن الأحاديث:
قال النبي ﷺ: «من صلّى عليّ صلاةً واحدة صلّى الله عليه بها عشرًا، وحطّ عنه عشر خطيئات، ورفع له عشر درجات» (رواه النسائي 1297).

«إنَّ أقربَكم منِّي يومَ القيامةِ أكثَرُكم عليَّ صلاةً»

(رواه الترمذي، رقم 484

: أبي بن كعب
وقال ﷺ: «إذًا تُكفى همّك ويُغفر لك ذنبك» (رواه الترمذي 2457).

٢- أقوال العلماء

قال الإمام جلال الدين السيوطي رحمه الله في بعض رسائله:

«جرَّبتُ الصلاة على النبي ﷺ فوجدتُها مفتاحًا لقضاء الحوائج، وما لازمتُها في أمرٍ إلا ورأيتُ الفرجَ عاجلًا


شعر الإمام الشافعي رحمه الله

قال الإمام محمد بن إدريس الشافعي رحمه الله في أبيات مشهورة:


إذا ضاقتْ بي الدنيا وما رحُبتْ

ناديتُ: يا سيِّدي يا خيرَ مَبعوثِ

فصلِّ يا ربِّ على المختارِ ما بَلَغَتْ

حَياتيَ الروحُ أو أبقى بتنفيسِ

٣- تجارب معاصرة (قصص واقعية)


قصة في فضل الصلاة على النبي صلى الله عليه وسلم من سوريا 

١- أخت فاضلة عمرها 85 عام 

سألتها أحد الأخوات ما هو سر هذا النور في وجهك ، وأنك بلغتي من العمر ما بلغتي 

وأنت تقرأين القرآن بدون الحاجة إلى نظارات وتقضي حوائجك دون حاجة أحد 

فأجابتها وقالت :

أني أصلي على رسول الله صلى الله عليه وسلم بهذه الصيغة :

(اللهم صل وسلم على نبينا محمد ملء السموات والأرض حتى يرضى الله)

وأكثر منها بأعداد كبيرة ، وأقرأ سورة يس   كل يوم ، وسورة البقرة والدخان 

هذه بركات الصلاة على حبيبنا محمد صلى الله عليه وسلم فأكثروا من الصلاة عليه 



٢- رجل غارق في الديون: بعد المداومة على 1000 صلاة على النبي ﷺ يوميًا، فتح الله له أبواب الرزق حتى سدد دينه. (ذكر في بعض المجلات الإسلامية).

٣-  مسافر في طائرة: عندما تعطلت الطائرة أخذ يكثر من الصلاة على النبي ﷺ حتى هبطت بسلام. (قصص مروية في خطب ودروس معاصرة).

٤ - امرأة مريضة بالسرطان: لازمت 1,000 صلاة على النبي ﷺ يوميًا، ثم تحسنت حالتها وظهرت نتائج الفحوصات سليمة. (مذكور في نشرات دعوية حديثة).

٥ - حاج تائه في منى: قرأ الصلاة على النبي ﷺ حتى دلّه رجل غريب على مكان حملته، فلما التفت لم يجده. (قصة منتشرة بين الحجاج، نُشرت في مجلات دعوية).

٦ - باحث عن عمل: واظب على 100 صلاة على النبي ﷺ يوميًا، فجاءه عرض عمل لم يكن في حسبانه. (قصص منتشرة في كتب الرقائق المعاصرة).