இறைத்தூதர்களின் பெருங்கருணை:
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"ஒரு இறைத்தூதரை அவருடைய சமூகத்தினர் அடித்து காயம் ஏற்படுத்தியபோது, அவர் தன் முகத்தில் வழிந்த இரத்தத்தைத் துடைத்துக் கொண்டே, 'இறைவா! என் சமூகத்தினரை மன்னிப்பாயாக! நிச்சயமாக அவர்கள் அறியாதவர்களாக இருக்கிறார்கள்' என்று பிரார்த்தித்த ஒரு இறைத்தூதரின் வரலாற்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விவரித்துக் கூறியது இப்போதும் என் கண்முன்னே நிழலாடுகிறது."
நபித்தோழர்களின் பண்பு பற்றிய குர்ஆன் வசனம்:
"முஹம்மது அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள் எதிரிகளிடம் கடுமையானவர்களாகவும், தங்களுக்குள் ஒருவருக்கொருவர் கருணையுடையவர்களாகவும் இருக்கின்றார்கள்." (அல்-ஃபதஹ்: 29)
2. முன்னோர்களின் (ஸலஃபுகளின்) கருணைக்குச் சில சான்றுகள்:
அலி இப்னுல் ஹுஸைன் (ஸைனுல் ஆபிதீன்) அவர்களின் கருணை:
அம்ரு இப்னு தாபித் அவர்கள் கூறுகிறார்கள்: "அலி இப்னுல் ஹுஸைன் அவர்கள் மரணித்து, அவர்களுக்கு ஜனாஸா குளியல் (தஜ்ஹீஸ்) செய்தபோது, அவருடைய முதுகில் கருமையான தழும்புகள் இருப்பதைக் கண்டார்கள். 'இது என்ன?' என்று கேட்டதற்கு, 'அவர் இரவோடு இரவாகத் தன் முதுகில் மாவு மூட்டைகளைச் சுமந்து சென்று, மதீனாவின் ஏழை எளியவர்களுக்கு விநியோகம் செய்து வந்தார். அதனால் ஏற்பட்ட தழும்புகள் என்று கூறப்பட்டது."
உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்களின் கருணை (விலங்கினங்கள் மீதான இரக்கம்):
உமர் இப்னு அப்துல் அஸீஸ் அவர்கள் எகிப்தின் ஆளுநர் ஹய்யானுக்கு இவ்வாறு கடிதம் எழுதினார்கள்: "எகிப்தில் ஆயிரம் ரத்தல் (எடை) வரை சுமக்கும் பார வண்டிகள்/ஒட்டகங்கள் இருப்பதாக எனக்குச் செய்தி கிடைத்துள்ளது. எனது இந்தக் கடிதம் உமக்குக் கிடைத்தால், ஒரு ஒட்டகத்தின் மீது அறுநூறு ரத்தலுக்கு மேல் சுமை ஏற்றப்படுவதை நான் அறியக் கூடாது (சுமையைக் குறைப்பீராக)."
மேலும், சாலைகளைப் பராமரிக்கும் அதிகாரிக்கு எழுதும்போது: "மிருகங்களுக்குக் கடுமையான, பாரமான கடிவாளங்களைப் பூட்டக் கூடாது என்றும், அடியில் இரும்பு முனைக் கொண்ட சாட்டைகளால் அவற்றை அடிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டார்கள்."
பிஷ்ர் அல்-ஹாஃபி அவர்களின் இரக்கம்:
கடுமையான குளிர்கால ஒரு நாளில், பிஷ்ர் அல்-ஹாஃபி அவர்கள் உடம்பில் ஆடைக் குறைவாகக் குளிரில் நடுங்கிக் கொண்டிருப்பதை மக்கள் கண்டு, "அபூ நஸ்ர்! இது என்ன நிலை?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்: ("ஏழைகளையும் அவர்களின் குளிரையும் நினைத்துப் பார்த்தேன். அவர்களுக்குக் கொடுக்க என்னிடம் எதுவும் இல்லை. எனவே, என் உடலால் அவர்களின் குளிரைப் பகிர்ந்துகொள்ள ஆசைப்பட்டேன்") என்றார்.
இமாம் ஷுஃபா இப்னுல் ஹஜ்ஜாஜ் அவர்களின் ஏழைகள் மீதான இரக்கம்:
நழ்ர் இப்னு ஷுமைல் கூறுகிறார்கள்: "ஏழைகளிடம் ஷுஃபாவை விட அதிகக் கருணை காட்டுபவரை நான் கண்டதில்லை. அவர் ஒரு ஏழையைக் கண்டால், அந்த ஏழை தன் கண்ணிலிருந்து மறையும் வரை அவரையே பார்த்துக் கொண்டிருப்பார்."
முஸ்லிம் இப்னு இப்ராஹீம் கூறுகிறார்கள்: "ஷுஃபா அவர்களின் கல்விச் சபையில் ஏதேனும் ஒரு ஏழை உதவி கேட்டு நின்றால், அவருக்குத் தர்மம் செய்யும் வரை ஷுஃபா அவர்கள் பாடம் நடத்த மாட்டார்..."
ஷுஃபா அவர்களே கூறுவதைச் செவியுற்றுள்ளேன்: ("இந்த ஏழைகள் மட்டும் இல்லையென்றால் நான் ஹதீஸ்களைக் கற்பித்திருக்க மாட்டேன். அவர்களுக்குத் தர்மம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே நான் பாடம் நடத்துகிறேன்").
யஹ்யா இப்னு ஸயீத் கூறுகிறார்கள்: "ஷுஃபா மனிதர்களில் மிகவும் இளகிய மனம் படைத்தவராக இருந்தார். ஒரு ஏழை அவரைக் கடந்து சென்றால், உடனே தன் வீட்டுக்குள் சென்று தம்மால் இயன்றதைக் கொடுப்பார்."
3. அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களின் தர்மமும் அவர்களுக்குக் கிடைத்த நற்செய்தியும்
"எனவே, எவர் (அல்லாஹ்வின் பாதையில் தர்மம்) கொடுத்து, (அவனுக்குப்) பயந்து, நன்மையானவற்றை உண்மைப் படுத்துகின்றாரோ, அவருக்கு நாம் (நற்கருமங்கள் செய்வதை) எளிதாக்குவோம்." (அல்-லைல்: 5-7)
அபூபக்கர் (ரலி) அவர்களின் தந்தை அபூ குஹாஃபா (அப்போது இஸ்லாத்தை ஏற்காத நிலையில்) அவரிடம் கூறினார்: "மகனே! நீ பலவீனமான, (நோஞ்சான்) தகுதியற்ற அடிமைகளையே விலை கொடுத்து விடுதலை செய்வதைப் பார்க்கிறேன். நீ செய்யும் இந்தச் செயலுக்குப் பகரமாக, உன்னைப் பாதுகாக்கும் அளவுக்கு வலிமையான மனிதர்களை விடுதலை செய்யக் கூடாதா?"
அதாவது நல்ல பலம் வாய்ந்த அடிமைகளை விலைக்கு வாங்கி உரிமையிட்டால் நாளைக்கு அவர்கள் உனக்கு உதவியாக இருப்பார்கள். மேன்பவர் கிடைக்கும்.
அதற்கு அபூபக்கர் (ரலி): "என் தந்தையே! நான் எதை நாடுகிறேன் (அல்லாஹ்வின் திருப்தியை) என்பதை நான் அறிவேன்" என்றார். (அதாவது என் லாபத்திற்கு அல்ல; அல்லாஹ்வின் திருப்திக்காக மட்டுமே நான் இதை செய்கிறேன். பலவீனர்கள் சிரமம் நீங்க வேண்டும்.) அப்போதுதான் மேற்கண்ட திருக்குர்ஆன் வசனங்கள் அவர் விஷயத்தில் இறங்கின.
4. உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்களின் பெருங்கருணை
குழந்தைகள் மீதான இரக்கம்:
ஒரு நாள் உயைனா இப்னு ஹிஸ்ன் என்ற அரபி, உமர் (ரலி) அவர்கள் தன் குழந்தைகளில் ஒருவரை மடியில் வைத்து அணைத்து முத்தமிடுவதைக் கண்டார். உடனே உயைனா: "நீங்கள் அமீருல் முஃமினீனாக (தலைவராக) இருந்துகொண்டே முத்தமிடுகிறீர்களா?! நான் தலைவராக இருந்தால் என் பிள்ளைகளில் ஒருவரையும் முத்தமிட மாட்டேன்" என்றார்.
அதற்குக் கோபமுற்ற உமர் (ரலி), "அல்லாஹ்வின் மீது ஆணையாகவா?" என்று மூன்று முறை சத்தியம் வாங்கிக் கேட்டுவிட்டு இவ்வாறு கூறினார்கள்:
"அல்லாஹ் உமது உள்ளத்திலிருந்து கருணையைப் பறித்துவிட்டான் என்றால் நான் என்ன செய்ய முடியும்? நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் கருணையுள்ளவர்களுக்கே கருணை காட்டுகிறான்."
விலங்குகள் மீதான இரக்கம், ஜீவகாருண்யம்
ஒரு நாள் உமர் (ரலி) அவர்களுக்குப் புதிய மீன் (Fresh Fish) சாப்பிட ஆசை ஏற்பட்டது. "புதிய மீன் சாப்பிட வேண்டும் என்று என் உள்ளத்தில் ஆசை தோன்றுகிறது" என்றார்கள்.
உடனே அவருடைய பணியாளர் 'யர்ஃபா' ஒரு வாகனத்தில் ஏறி, இரண்டு நாட்கள் பயணம் செய்து, ஒரு கூடை நிறைய புதிய மீன்களை வாங்கிக் கொண்டு உமர் (ரலி) அவர்களிடம் வந்தார்.
வந்த பிறகு, யர்ஃபா அந்த வாகன மிருகத்தைக் கழுவிக் கொண்டிருந்தார். அப்போது உமர் (ரலி) அந்த மிருகத்தின் காதுக்குக் கீழே வியர்வை வழிந்திருப்பதைக் கண்டுவிட்டு அவரிடம் கூறினார்கள்:
"உமருடைய ஒரு ஆசைக்காக அல்லாஹ்வின் படைப்புகளில் ஒரு விலங்கை இந்த அளவு துன்புறுத்திவிட்டாயே! அல்லாஹ்வின் மீது ஆணையாக, இந்த மீனை உமர் ஒருபோதும் சுவைக்க மாட்டான். இந்தக் கூடையை நீயே எடுத்துச் செல்!" (மிருகம் சிரமப்பட்டதால் அந்த மீனை உண்ண மறுத்துவிட்டார்கள்)
## 1. الرحمة النبوية والقرآنية
من رحمة الأنبياء
عَنِ ابنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْه قَالَ: كأنِّي أنظُرُ إلى النَّبيِّ صلَّى اللهُ عليه وسلَّم يحكي نبيًّا من الأنبياءِ ضَرَبه قومُه فأدْمَوه، فهو يمسَحُ الدَّمَ عن وَجهِه، ويقولُ:
(( رَبِّ اغفِرْ لقَومي؛ فإنَّهم لا يَعلَمونَ ))
وصف الصحابة مع النبي:
﴿ مُحَمَّدٌ رَسُولُ اللهِ وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاءُ عَلَى الْكُفَّارِ رُحَمَاءُ بَيْنَهُمْ ﴾[الفتح: 29]
## 2. نماذِجُ من الرَّحمةِ عِندَ السَّلَفِ الصالح
### رحمةُ عَليِّ بنِ الحُسَينِ (زَينِ العابِدينَ)
* عن عَمرِو بنِ ثابتٍ قال: (لمَّا مات عليُّ بنُ الحُسَينِ فغَسَّلوه جعَلوا ينظُرون إلى آثارٍ سوداءَ بظَهرِه، فقالوا: ما هذا؟ فقيل: كان يحمِلُ جُرُبَ الدَّقيقِ (أكياس الدقيق) ليلًا على ظهرِه يعطيه فُقَراءَ أهلِ المدينةِ**).
### رحمةُ عُمَرَ بنِ عبدِ العزيزِ (حتى بالحيوان)
* كَتَب عُمَرُ بنُ عبدِ العزيزِ رحمه اللهُ إلى حيَّانَ بمِصرَ: (إنَّه بلغني أن بمصرَ إبِلًا نقَّالاتٍ، يُحمَلُ على البعيرِ منها ألفُ رِطلٍ، فإذا أتاك كتابي هذا **فلا أعرِفَنَّ أنَّه يُحمَلُ على البعيرِ أكثَرُ من ستِّمائةِ رِطلٍ**).
* وكتب إلى صاحِبِ السِّكَكِ: (**أن لا يحمِلوا أحَدًا بلِجامٍ ثقيلٍ من هذه الرستنيَّةِ، ولا يُنخَسَ بمِقرَعةٍ في أسفَلِها حديدةٌ).
### رحمةُ بِشرٍ الحافي
* دخَلوا عليه في يومٍ شديدِ البردِ، وقد تجرَّد وهو ينتَفِضُ، فقالوا: ما هذا يا أبا نَصرٍ؟ فقال: (**ذكَرْتُ الفُقَراءَ وبَرْدَهم وليس لي ما أواسيهم به، فأحبَبتُ أن أواسِيَهم في بَردِهم).
### رحمةُ الإمام شُعبة بن الحجّاج بالمساكين
* عن النَّضرِ بنِ شُمَيلٍ قال: (ما رأيتُ أرحَمَ بمسكينٍ مِن شُعبةَ، وكان إذا رأى المسكينَ لا يزال ينظُرُ إليه حتَّى يغيبَ عن وَجهِه).
* وعن مُسلِمِ بنِ إبراهيمَ قال: (كان شُعبةُ إذا قام في مجلِسِه سائِلٌ لا يحَدِّثُ حتَّى يُعطَى...).
* وسمِعتُ شُعبةَ يقولُ: (**لولا المساكينُ ما حدَّثتُ؛ فإنِّي أحَدِّثُ ليُعطَوا**).
* وقال يحيى بنُ سعيدٍ: (كان شُعبةُ من أرقِّ النَّاسِ، كان ربَّما مرَّ به السَّائِلُ، فيدخُلُ إلى بيتِه فيُعطيه ما أمكَنَه).
## 3. رحمة الصديق أبو بكر والتيسير له
* قال أبو قُحافةَ لأبي بَكرٍ: أراك تُعتِقُ رِقابًا ضِعافًا، فلو أنَّك إذ فعَلْتَ ما فعَلْتَ أعتَقْتَ رِجالًا جُلدًا (أقوياء) يمنعونَك ويقومون دونَك.
* فقال أبو بكرٍ: **يا أبتِ إنِّي إنما أريدُ ما أريدُ (أي يبتغي وجه الله ورأفة بالضعفاء)**. فنزلت هذه الآيات الكريمات فيه تنويهاً برحمته وعطائه : فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى * وَصَدَّقَ بِالْحُسْنَى * فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى ﴾** [الليل: 5-7]
## 4. رحمةُ عُمَرَ بنِ الخطَّابِ رَضِيَ اللهُ عنه
رحمته بالأطفال والعيال
* رآه عُيَينةُ بنُ حِصنٍ يومًا يُقَبِّلُ أحَدَ أبنائِه، وقد وضَعَه في حِجرِه وهو يحنو عليه، فقال عُيَينةُ: (أتُقَبِّلُ وأنت أميرُ المُؤمِنين؟! لو كنتُ أميرَ المُؤمِنينَ ما قبَّلْتُ لي ولَدًا).
* فقال عُمَرُ: آللهِ؟ آللهِ؟ (حتى استحلفه ثلاثًا) ثم قال:
(فما أصنَعُ إن كان اللهُ نَزَع الرَّحمةَ من قَلبِك، إنَّ اللهَ إنَّما يرحَمُ مِن عبادِه الرُّحَماءَ)
### رحمته بالدواب والحيوان (قصة السمك الطري)
اشتهى عمر الحوتَ (السمك) يومًا، فقال: (لقد خَطَر على قلبي شهوةُ الطَّرِيِّ من حيتانٍ).
فخرج غلامه "يرفأ" في طَلَبِ الحوتِ لعُمَرَ، ورَحَل راحلَتَه، فسار ليلتينِ مُدبِرًا، وليلتينِ مُقبِلًا، واشترى مِكتَلًا (زبيلاً)، وجاء بالحوت.
ثمَّ غَسَل يرفَأُ الدَّابَّةَ، فنظر إليها عُمَرُ فرأى عَرَقًا تحتَ أُذُنِها، فقال:
(عذَّبْتَ بهيمةً من البهائِمِ في شهوةِ عُمَرَ! لا واللهِ لا يذوقُه عُمَرُ، عليك بمِكتَلِك)[فرفض أكله رحمةً بالناقة التي أُجهِدت من أجله].
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்