கூச்ச சுபாவம் தவறில்லை
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَى رَجُلٍ يَعِظُ أَخَاهُ فِي الْحَيَاءِ فَقَالَ دَعْهُ فَإِنَّ
الْحَيَاءَ مِنْ الْإِيمَانِ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வெட்கப்படுவது குறித்து (அதிகம் வெட்கப்படுவதாகக் கருதி) தன் சகோதரனுக்கு அறிவுரை கூறிக்கொண்டிருந்த ஒரு மனிதரைக் கடந்து சென்றார்கள். அவர்கள் கூறினார்கள்: "அவரை விட்டுவிடுங்கள், ஏனெனில் வெட்கம் ஈமானின் ஒரு பகுதியாகும்."
நபிமார்களின் நல்ல நடைமுறை
قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم
أَرْبَعٌ مِنْ سُنَنِ الْمُرْسَلِينَ الْحَيَاءُ وَالتَّعَطُّرُ وَالسِّوَاكُ وَالنِّكَاحُ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நான்கு காரியங்கள் தூதர்களின் வழிமுறைகளில் (ஸுனன்களில்) அடங்கும்: வெட்கம் (அல்-ஹயாஃ), நறுமணம் பூசுதல், மிஸ்வாக் பயன்படுத்துதல் (பல் துலக்குதல்) மற்றும் திருமணம்."
உஸ்மான் அவர்களின் குளியல்
وَذَكَرَ عُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ وَشِدَّةَ حَيَائِهِ فَقَالَ إِنْ كَانَ لَيَكُونُ فِي الْبَيْتِ وَالْبَابُ عَلَيْهِ مُغْلَقٌ فَمَا يَضَعُ عَنْهُ الثَّوْبَ لِيُفِيضَ عَلَيْهِ الْمَاءَ يَمْنَعُهُ الْحَيَاءُ أَنْ يُقِيمَ صُلْبَهُ.
அல்-ஹசன் அவர்கள் உஸ்மான் (ரழி) அவர்களின் அதீத வெட்கத்தைப் பற்றிக் கூறினார்கள்:
"அவர்கள் வீட்டிற்குள் இருப்பார்கள்; கதவு தாழிடப்பட்டிருக்கும். (அவர் தனிமையில் இருக்கும்போதும்) அவர் குளிப்பதற்காகத் தன் ஆடையைக் கழற்றி, தன் மீது தண்ணீர் ஊற்றிக்கொள்ள மாட்டார். வெட்கம் அவரை நிமிர்ந்து நிற்க விடாது (அதாவது, அவர் குனிந்த நிலையிலேயே இருப்பார்)." முஸ்னது அஹ்மத் : 543
வானவர்களே வெட்கப்படும் தோழர் உஸ்மான் (ரலி)
أَنَّ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعُثْمَانَ حَدَّثَاهُ أَنَّ أَبَا بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ اسْتَأْذَنَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُضْطَجِعٌ عَلَى فِرَاشِهِ لَابِسٌ مِرْطَ عَائِشَةَ فَأَذِنَ لِأَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ وَهُوَ كَذَلِكَ فَقَضَى إِلَيْهِ حَاجَتَهُ ثُمَّ انْصَرَفَ
ثُمَّ اسْتَأْذَنَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ فَأَذِنَ لَهُ وَهُوَ عَلَى تِلْكَ الْحَالِ فَقَضَى إِلَيْهِ حَاجَتَهُ ثُمَّ انْصَرَفَ
قَالَ عُثْمَانُ رَضِيَ اللَّهُ عَنْهُ ثُمَّ اسْتَأْذَنْتُ عَلَيْهِ فَجَلَسَ وَقَالَ لِعَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا اجْمَعِي عَلَيْكِ ثِيَابَكِ فَقَضَى إِلَيَّ حَاجَتِي ثُمَّ انْصَرَفْتُ
قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا يَا رَسُولَ اللَّهِ مَا لِي لَمْ أَرَكَ فَزِعْتَ لِأَبِي بَكْرٍ وَعُمَرَ كَمَا فَزِعْتَ لِعُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ عُثْمَانَ رَجُلٌ حَيِيٌّ وَإِنِّي خَشِيتُ إِنْ أَذِنْتُ لَهُ عَلَى تِلْكَ الْحَالِ أَنْ لَا يَبْلُغَ إِلَيَّ فِي حَاجَتِهِ
و قَالَ اللَّيْثُ وَقَالَ جَمَاعَةُ النَّاسِ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِعَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَلَا أَسْتَحْيِي مِمَّنْ يَسْتَحْيِي مِنْهُ الْمَلَائِكَةُ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஆயிஷா (ரழி) அவர்களின் மேலாடையைப் போர்த்திக்கொண்டு தமது படுக்கையில் படுத்திருந்தபோது, அபூபக்ர் (ரழி) அவர்கள் (உள்ளே வர) அனுமதி கேட்டார்கள். அவர்கள் அதே நிலையில் இருந்தவாறே அபூபக்ர் (ரழி) அவர்களுக்கு அனுமதி அளித்தார்கள். அவர் தமது தேவையை நிறைவேற்றிக்கொண்டு பின்னர் சென்றுவிட்டார்கள்.
பின்னர் உமர் (ரழி) அவர்கள் (உள்ளே வர) அனுமதி கேட்டார்கள். அவர்கள் அதே நிலையில் இருந்தவாறே அவருக்கு அனுமதி அளித்தார்கள். அவர் தமது தேவையை நிறைவேற்றிக்கொண்டு பின்னர் சென்றுவிட்டார்கள்.
உஸ்மான் (ரழி) அவர்கள் கூறினார்கள்: பின்னர் நான் (உள்ளே வர) அனுமதி கேட்டேன். அவர்கள் எழுந்து அமர்ந்து ஆயிஷா (ரழி) அவர்களிடம், 'உன்னைச் சரியாகப் போர்த்திக்கொள்' என்று கூறினார்கள். நான் எனது தேவையை நிறைவேற்றிக்கொண்டு பின்னர் சென்றுவிட்டேன்.
ஆயிஷா (ரழி) அவர்கள் கேட்டார்கள்: "அல்லாஹ்வின் தூதரே, உஸ்மான் (ரழி) அவர்களுக்காகத் தாங்கள் (உடனே) எழுந்து அமர்ந்ததைப் போல அபூபக்ர் (ரழி) அவர்களுக்கும் உமர் (ரழி) அவர்களுக்கும் ஏன் தாங்கள் (அவ்வாறு) எழுந்து அமரவில்லை?"
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உஸ்மான் (ரழி) அவர்கள் வெட்கம் மிகுந்த மனிதர். நான் அந்த நிலையில் இருக்கும்போது அவருக்கு அனுமதி கொடுத்தால், அவர் தமது தேவையை என்னிடம் கூறமாட்டார் என்று நான் அஞ்சினேன்."
அல்-லைஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (இந்த ஹதீஸை அறிவித்த) சிலர் கூறினர்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரழி) அவர்களிடம், "வானவர்கள் வெட்கப்படும் ஒரு மனிதருக்கு முன்னால் நான் வெட்கப்பட வேண்டாமா?" என்று கேட்டார்கள். (முஸ்னது அஹ்மத் : 514, 515
வெட்கம் அழகு! ஆபாசம் இழிவு!
عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: مَا كَانَ الْحَيَاءُ فِي شَيْءٍ إِلاَّ زَانَهُ، وَلاَ كَانَ الْفُحْشُ فِي شَيْءٍ إِلا شَانَهُ.
அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எந்தவொரு விஷயத்தில் வெட்கம் இருக்கிறதோ, அது அதை அழகுபடுத்துகிறது. எந்தவொரு விஷயத்தில் ஆபாசம் இருக்கிறதோ, அது அதை இழிவுபடுத்துகிறது." அல்-அதப் அல்-முஃபரத் : 601
வெட்கம் இல்லையென்றால்…?
قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ إِنَّ مِمَّا أَدْرَكَ النَّاسُ مِنْ كَلاَمِ النُّبُوَّةِ الأُولَى إِذَا لَمْ تَسْتَحِي فَاصْنَعْ مَا شِئْتَ .
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: “முந்தைய நபித்துவத்தின் (போதனைகளிலிருந்து) மக்கள் கற்றுக்கொண்ட வார்த்தைகளில் ஒன்று: ‘உனக்கு வெட்கம் இல்லையென்றால், நீ விரும்பியதைச் செய் (இது ஒரு எச்சரிக்கை கூற்று, அனுமதி அல்ல).’ அதாவது வெட்கம் இல்லையென்றால் எதுவுமே தவறாகத் தெரியாது. பெரும்பாவம் கூட பாவமாகவே நினைக்கத் தோன்றாது
சுனன் இப்னுமாஜா : 4183
✨ நாணம் நல்லது💥
1. நல்லொழுக்கமுள்ள பெண்ணின் நாணம்
அல்லாஹ் கூறுகிறான்:
﴿فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلَى اسْتِحْيَاءٍ...﴾
"அந்த இரு பெண்களில் ஒருவர் *மிகுந்த நாணத்துடன் நடந்து வந்து*, 'நீங்கள் எங்களுக்காக (ஆடுகளுக்கு) தண்ணீர் புகட்டியதற்குக் கூலியாக உங்களுக்கு வழங்குவதற்காக என் தந்தை உங்களை அழைக்கிறார்' என்று கூறினார்..."
(ஸூரத்துல் கஸஸ் 28:25)
விளக்கம்:
மூஸா (அலை) அவர்களிடம் வந்த அந்தப் பெண்:
✨ மிகுந்த நாணத்துடனும் அடக்கத்துடனும் நடந்துவந்தார்.
✨ தனது அழகை வெளிப்படுத்தாமல், கண்ணியத்துடன் நடந்தார்.
✨ வெட்கத்தை இழந்த நடை, அலங்காரக் காட்சி அல்லது ஆடம்பரம் எதுவும் அவரிடம் இல்லை.
✨ தந்தையின் அழைப்பை மட்டும் மரியாதையுடன் தெரிவித்தார்.
உமர் (ரலி) அவர்களின் விளக்கம்:
"அந்தப் பெண் வெட்கமற்ற பெண்களைப் போல் வரவில்லை; அடிக்கடி வெளியே சுற்றுபவளாகவும் இல்லை; தனது ஆடையால் முகத்தை மறைத்தபடி வந்தார்."
கற்றுக்கொள்ளும் பாடம்:
பெண்களின் அழகிய அணிகலன் நாணமே.
அடக்கமும் கண்ணியமும் ஒரு முஸ்லிம் பெண்ணின் உயர்ந்த பண்பாகும்.
---
2. ஜாஹிலிய்யா கால அரபுகளின் நாணம்
இஸ்லாத்திற்கு முன்பே அரபுகளிடம் சில தீய பழக்கங்கள் இருந்தாலும், நாணம் என்ற பண்பு சிலரிடம் இருந்தது.
ஹிரக்லியஸ் (Heraclius) மன்னர், அபூ சுஃப்யான் (ரலி) அவர்களிடம் நபி ﷺ குறித்து கேட்டபோது, அவர் கூறினார்:
"என்னுடன் இருந்தவர்கள் என்னை பொய்யன் என்று கூறிவிடுவார்களோ என்ற நாணம் இல்லையெனில், நிச்சயமாக நான் முஹம்மத் ﷺ குறித்து பொய் கூறியிருப்பேன்."
(ஸஹீஹுல் புகாரி)
அதாவது, அப்போது இன்னும் இஸ்லாத்தை ஏற்காதவராக இருந்தபோதும், பொய்யன் என்ற பெயர் வந்துவிடுமோ என்ற நாணம், அவரை பொய் பேசவிடாமல் தடுத்தது.
நாணம் மனிதனைப் பொய், அநீதி போன்றவற்றிலிருந்து தடுக்கிறது.
நாணம் ஒரு மனிதனின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் உயர்ந்த பண்பாகும்.
---
3. அந்தரா (عنترة) என்ற அரபுக் கவிஞரின் நாணம்
அவர் கூறுகிறார்:
وأغُضُّ طَرْفي إن بدَتْ لي جارتي
حتَّى يواريَ جارتي مأواها
"என் அண்டை வீட்டு பெண் மகள் என் பார்வைக்கு வந்தால்,
அவர் தனது வீட்டிற்குள் நுழையும் வரை நான் என் பார்வையைத் தாழ்த்திக் கொள்வேன்."
பார்வையைத் தாழ்த்துவதும் நாணத்தின் ஓர் அங்கமாகும்.
பிறரின் கண்ணியத்தை மதிப்பது உயர்ந்த ஒழுக்கமாகும்.
"الحياء شعبة من الإيمان"
"நாணம் ஈமானின் ஒரு கிளையாகும்." (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
நாணம் அவசியம்தான். ஆனால்
மார்க்கம் கற்றுக்கொள்ள வெட்கம் தேவை இல்லை
وَقَالَتْ عَائِشَةُ نِعْمَ النِّسَاءُ نِسَاءُ الأَنْصَارِ لَمْ يَكُنْ يَمْنَعُهُنَّ الْحَيَاءُ أَنْ يَسْأَلْنَ عَنِ الدِّينِ وَيَتَفَقَّهْنَ فِيهِ .
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: 'பெண்களிலேயே சிறந்தவர்கள் அன்சாரிப் பெண்கள்தான். மார்க்கத்தைப் பற்றிக் கேட்பதிலிருந்தும், அதில் மார்க்க விளக்கத்தைப் பெறுவதிலிருந்தும் வெட்கம் அவர்களைத் தடுத்ததில்லை.'
சுனன் அபூதாவூத் : 316
.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!