25 அக்டோபர், 2021

அல்லாஹ்வின் நினைவை விட்டும் கணப்பொழுதும் நீங்குவதா?

 

وفي الرسالة القشيرية عن بعضهم أنه دخل غيضة فوجد رجلاً يذكر الله تعالى وعنده سبع عظيم فقال ما هذا قال سألت الله أن يسلط علي كلباً من كلابه إذا غفلت عن ذكره

ஒரு இறை நேசர் ஒரு தோட்டத்தில் நுழைந்தார். அங்கே ஒரு வணக்கசாலி அல்லாஹ்வை விடாமல் திக்ரு செய்துகொண்டே இருந்தார்.

ஆனால் அவருக்கு அருகில் ஒரு பிரமாண்டமான வன விலங்கு ஒன்று இருக்கிறது.

 

 இது என்ன என்று இவர் கேட்டார். அவர் சொன்னார் : "நான் அல்லாஹ்வை அனுதினமும் தியானித்து வருகிறேன். சிறிது நேரம் அவனுடைய நினைவை விட்டு நான் மறந்துவிட்டால் கூட அல்லாஹ்வுடைய விலங்குகளில் ஒரு விலங்கை என்மீது சாட்டுமாறு அவனிடத்தில் கேட்டிருக்கிறேன் அதுதான் இது.

 

حكاية: قال بعض الصالحين رأيت صياداً بالهند كلما صاد سمكة دفعها إلى ابنة له فترسلها في الماء وهو لا يعلم فلما فرغ جاء فلم يجد شيئاً فسألها عن ذلك قالت سمعتك تقول عن النبي صلى الله عليه وسلم لا تقع سمكة في شبكة إلا إذا غفل عن ذكر الله فكرهت أن تأكل شيئاً غفل عن ذكر الله وقيل أنها كانت السمكة تسبح في يدها فقالت البنت ما دفعت إلي سمكة إلا وسمعتها تقول سبحان الله فقطع الشبكة وتاب عن الصيد

 

 

ஒரு இறை நேசரின் வாக்குமூலம் இது:

 

இந்தியாவில் ஒரு  நான் மீனவரைப்பார்த்தேன். அவர் மீன் பிடித்து தன் மகளுக்கு அருகில் போடுகிறார். ஆனால் அவள் அதை கூடையில் சேகரிப்பதற்குப் பதிலாக கடலிலே மறுபடியும் தூக்கி தூக்கிப் போட்டுக் கொண்டிருந்தாள்.

 இதை அவர் கவனிக்கவில்லை மீன் பிடித்து முடிந்ததும் திரும்பிப்பார்த்துமீன் எல்லாம் எங்கே என்று கேட்டார் 

அதற்கு அவள் சொன்னாள் : எந்த ஒரு மீன் வலையில் அகப்பட்டாலும் அந்த வினாடியில் அல்லாஹ்வுடைய திக்ரை விட்டு அது மறந்து இருக்கும்பொழுது தான் வலையில் அல்லது தூண்டிலில் அகப்படுகிறது  என்று ஏந்தல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக நீங்கள் தானே எனக்கு ஹதீஸ் அறிவித்தீர்கள்? அல்லாஹ்வுடைய திக்ரை விட்டும்- நினைவை விட்டும்- மறந்திருந்த நிலையில் பிடிபட்ட ஒரு மீனை நான் சாப்பிடுவதா அதனால்தான் மறுபடியும் அதை கடலிலேயே விட்டேன் என்று கூறினாள்.

இது அல்லாஹ் மீது இருக்கிற பிரியத்தின் உச்சகட்டம்.

 மற்றபடி மீன் சாப்பிடுவது மார்க்கத்தில் ஒன்றும் தடையில்லை.

 

 ஆனால் சிலர் அல்லாஹ் மீது இருக்கிற அளவிலா அன்பின் காரணமாக பக்தியின் உச்சத்தில் இப்படி செய்வார்கள் அது நமக்கு பொதுவான சட்டம் இல்லை.

 

உதாரணமாக ஒரு தோழர் மதினாவிற்கு வந்தார்.

 மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை கண்டார்.

 அதற்குப் பிறகு இப்படி பிரார்த்தித்தார். " அல்லாஹ்வே அண்ணல் நபி அவர்களை கண்ட இந்த கண்ணால் இனி வேறெதையும் காணக்கூடாது எனவே என் கண்களை குருடாக்கி விடு !"  

 

அந்த வினாடியே அவரது பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதை வரலாற்றில் பார்க்கிறோம்.

 

20 ஜூலை, 2021

உழ்ஹிய்யா )குர்பானியின் சட்டங்கள் ஷாஃபிஈ - ஹனஃபி

 உழ்ஹிய்யா )குர்பானியின் சட்டங்கள் 

         ஷாஃபிஈ - ஹனஃபி 

===========================

       உழ்ஹிய்யா சுன்னத்தா ? வாஜிபா ?


       ஷாஃபிஈ மத்ஹப் : *சுன்னத் முஅக்கதா* 

    ( வலியுறுத்தப்பட்ட சுன்னத் ) 

       ஹனஃபி மத்ஹப் : *வாஜிப்*

            (கடமை)

       ஷாஃபிஈ மத்ஹபில் *யாருக்கு சுன்னத்?

       பெருநாள் தினத்தன்று ஒருவருக்கு தனக்கும் தன் பொறுப்பில் உள்ளவர்களுக்கும் உணவு மற்றும் உடைக்குப் போக வசதியிருந்தால் *உழ்ஹிய்யா கொடுப்பது சுன்னத்து

       ( பொறுப்பில் உள்ளவர்கள் : மனைவி ,பிள்ளைகள் மற்றும் பெற்றோர். )


       ஹனஃபி மத்ஹபில் யாருக்கு வாஜிப்*? 

       பெருநாள் தினத்தன்று ஜகாத்துடைய அளவு செல்வம் யாரிடம் உள்ளதோ அவருக்கு *உழ்ஹிய்யா கொடுப்பது வாஜிப்*.


       (ஜகாத்துடைய அளவு :

*85 கிராம் தங்கம்* அல்லது *612 கிராம் வெள்ளி* அல்லது *612 கிராம் வெள்ளியின் மதிப்புள்ள பணம்* .)


       ( ஜகாத் கடமையாவதற்கு ஒரு வருடம் ஆகி இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இங்கு இல்லை. )



        *தகுதி உள்ள பிராணிகள்*

=================

       உழ்ஹிய்யா கொடுக்க தகுதியுள்ள பிராணிகள்: *மூன்று*. 


        1. *ஒட்டகம்*

        2. *மாடு* 

        3. *ஆடு* 


     இம்மூன்றிலும் *ஆணினம்* *பெண்ணினம்* இரண்டினத்தையும் உழ்ஹிய்யா கொடுக்கலாம் .


       இம்மூன்றிலும் *எல்லா வகையையும்* உழ்ஹிய்யா கொடுக்கலாம் .

       *எருமை மாட்டையும்* உழ்ஹிய்யா கொடுக்கலாம் .




           *வயது வரம்பு*  

           =============     


      *ஒட்டகம்* : *ஐந்து வயது* முழுமை பெற்றிருக்க வேண்டும்.


      *மாடு* : *இரண்டு வயது* முழுமை பெற்றிருக்க வேண்டும்.


       ஆனால் *ஆட்டின் வயதில்* மட்டும் கொஞ்சம் வித்தியாசம் உண்டு.


           *ஹனஃபி மத்ஹப்*:

      *வெள்ளாடாக* இருந்தாலும் *செம்மறி ஆடாக* இருந்தாலும் *ஒரு வருடம்* முழுமை பெற்றிருக்க வேண்டும் .


      அதே நேரத்தில் *செம்மறி ஆடு ஆறுமாதம்* முழுமை அடைந்து *ஒரு வருடத்திற்குண்டான* வளர்ச்சியை பெற்றிருந்தால் அதை உழ்ஹிய்யா கொடுக்கலாம். 



              *ஷாஃபிஈ மத்ஹப்*: 

        *செம்மறி ஆடாக* இருந்தால் *ஒரு வருடமும்*

 *வெள்ளாடாக* இருந்தால் *இரண்டு வருடங்களும்* முழுமை பெற்றிருக்க வேண்டும். 



                *கூட்டு குர்பானி*

                ===============


       *ஆட்டை ஒருவருக்காக* உழ்ஹிய்யா கொடுக்க வேண்டும்.


        ஆனால் *ஒட்டகத்திலும் மாட்டிலும் ஏழு பேர் சேர்ந்து* உழ்ஹிய்யா கொடுக்கலாம் .


       ஏழு பேர் சேர்ந்துதான் கொடுக்க வேண்டும் என்று கட்டாயமில்லை .

      ஏழுக்குக் குறைவானவர்களும் ஒட்டகத்தையும் மாட்டையும் உழ்ஹிய்யா கொடுக்கலாம். 

     ஒரு தனிநபர் ஒட்டகம் மற்றும் மாட்டை உழ்ஹிய்யா கொடுக்கலாம்.


       அந்த ஏழு பங்கில் குழந்தைகளுக்காக கொடுக்கக்கூடிய *அகீகாவையும்* சேர்த்துக்கொள்ளலாம்.



             *பங்கீடு செய்தல்*

             ================


       உழ்ஹிய்யா பிராணியின் மாமிசத்தை *மூன்று பங்குகளாக* பிரித்து வழங்குவது சிறந்தது. 


      ஒரு பங்கு : 

     *தன் குடும்பத்தினற்கு*.  

    

      இன்னொரு பங்கு : 

      *உறவினர்களுக்கு*


       இன்னொரு பங்கு :

       *ஏழை எளிய மக்களுக்கு*


=============================   

        உழ்ஹிய்யா கறியை *முஸ்லிம் அல்லாதவர்களுக்கு கொடுக்கக் கூடாது*.


        *ஏனென்றால் இது முஸ்லிம்களுடைய ஹக்காகும்*


         அக்கம்பக்கத்தில் மாற்றுமத சகோதரர்கள் இருந்து அவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் கடையில் தேவையான கறியை விலைக்கு வாங்கி அவர்களுக்கு வழங்கலாம்.


============================

 


      *உழ்ஹிய்யாவின் நேரம்*:   

      ======================


        *ஹனஃபி மத்ஹப்* :

        ஆரம்பம் :

         *பெருநாள் தொழுகை நடந்ததற்குப் பிறகு*.


        முடிவு :

       *பிறை 12 - மஃக்ரிப் நேரம் வரும் வரை* 

  ( அதாவது சூரியன் மறையும் வரை. ) 


         *ஷாஃபிஈ மத்ஹப்* : 

         ஆரம்பம்:

         *சூரியன் உதித்து 20 நிமிடங்கள் கழித்து - இரண்டு ரக்அத் தொழுகை மற்றும் இரண்டு ஃகுத்பாக்கள் - இதற்குண்டான நேரம் முடிந்ததற்குப்பிறகு*.

     ( தொழுகை நடந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் தொழுகைக்குப் பிறகு உழ்ஹிய்யா கொடுப்பதே சிறந்தது.)


        முடிவு: 

         *பிறை 13 - மஃக்ரிப் நேரம் வரும் வரை*.

         ( அதாவது சூரியன் மறையும் வரை )


        *இரவிலும்* கொடுக்கலாம்.

*பகலிலும்* கொடுக்கலாம் .

        ஆனால் இரவில் கொடுப்பது ( மக்ரூஹ் ) வெறுக்கத்தக்கது.


         *குர்பானி தோலின் சட்டம்*   

         ======================= 

      குர்பானி தோலை *தனக்காக* உபயோகித்துக்கொள்ளலாம்.


      *பிறருக்கும்* கொடுக்கலாம்.   

 (ஏழையாக இருந்தாலும் சரி. செல்வந்தராக இருந்தாலும் சரி.)


      ஆனால் *விற்கக்கூடாது*.  

  

       *அறுப்புக் கூலியாகவும் வழங்கக்கூடாது*.


       *பள்ளிவாசல்* மற்றும் *மத்ரஸாவின்* *கட்டிடப்பணிக்கோ* அல்லது *நிர்வாக செலவிற்கோ* கொடுக்கக்கூடாது. 


       பள்ளிவாசலில் *பைத்துல்மால்* இருந்தால் அதற்கு *கொடுக்கலாம்*.


        பள்ளிவாசலின் *இமாம்* மற்றும் *முஅத்தின் சாகிபுக்கு* கொடுக்கலாம். 

மத்ரஸாவின் *ஆசிரியர்களுக்கும்* *கொடுக்கலாம்*. 

        ஆனால் இவர்களுக்கு *சம்பளம்* அல்லது *போனஸ்* கொடுப்பதற்கு *குர்பானி தோலை பயன்படுத்தக்கூடாது*.


       மத்ரஸாவில் கல்வி பயிலும் *மாணவர்களுக்கு கொடுக்கலாம்*.


       *தகுதியற்ற பிராணிகள்*

       =====================

      *கால்கள் முடமாகி ஊனமுற்றவை*

      *கடுமையான நோய்வாய்ப்பட்டவை* 

       *எலும்பும் தோலுமாய் மெலிந்தவை*

        *கண் குருடாகி போனவை*

       *காது அறுந்து துண்டிக்கப்பட்டவை*


மேற்கூறப்பட்ட பிராணிகளை உழ்ஹிய்யா கொடுப்பது அறவே கூடாது.


   *குறிப்பு*:  

       *கொம்பு முளைக்காத* அல்லது *கொம்பு உடைந்த* பிராணியை உழ்ஹிய்யா கொடுப்பது *கூடும்*.

        *அறுக்கும் ஒழுங்குகள்*

         ===================

          *அறுப்பவர் முஸ்லிமாக இருக்க வேண்டும்* .

         ( *ஆணும்* அறுக்கலாம் *பெண்ணும்* அறுக்கலாம் )


       *கத்தியை கூர்மையாக்கிக் கொள்ள வேண்டும்* .


      *உழ்ஹிய்யா கொடுப்பவரே அறுப்பது சிறந்தது*.


        அறுக்கத் தெரியவில்லையென்றால் பிறர் அறுக்கலாம்.

        அப்போது இவர் அந்த பிராணியை *பார்த்துக்கொண்டிருப்பது* சுன்னத்.


         *அறுப்பதற்கு முன்பாக உழூ செய்துகொள்வது*.

          *கிப்லாவை முன்னோக்குவது*.

        *வஜ்ஜஹ்து வஜ்ஹிய.....*

 *என்பதை ஓதிக் கொள்வது*. 

   (தெரியவில்லை என்றால் பரவாயில்லை.)


         *உழ்ஹிய்யாவின் நிய்யத் செய்துகொள்ள வேண்டும்*.


        *பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்* என்று கூறி அறுக்க வேண்டும்.

        உழ்ஹிய்யா கொடுக்க நாடியவர் *துல்ஹஜ் மாதம் பிறை ஒன்றிலிருந்து உழ்ஹிய்யா கொடுக்கும் வரை* *நகம்* மற்றும் *முடியை* வெட்டாமல் இருப்பது *சுன்னத்தாகும்*.


        வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு இந்த சட்டம் இல்லை .

         உழ்ஹிய்யா கொடுப்பவர் 

*நகத்தையோ* அல்லது *முடியையோ* அகற்றி விட்டால் அதனால் உழ்ஹிய்யாவிற்கு எந்த *பாதிப்பும் இல்லை* .

        ஆனால் இந்த *சுன்னத்தின் நன்மையை* அவர் இழந்து விடுவார் .

                 கவனிக்க

                 ===========

 பல ஹதீஸ்களின் அடிப்படையில் *இறந்து போனவர்களுக்கு உழ்ஹிய்யா* கொடுப்பது நன்மைகளைப் பெற்றுத்தரும் *நற்செயலாகும்*. 

   

         மௌலவி - டாக்டர் 

   M. *ஷைகு அப்துல்லாஹ்* *ஜமாலி* MA ,Ph.D.


   சுன்னத் ஜமாஅத் பேரியக்கம்*   

                      *சென்னை*