15 அக்டோபர், 2020

என்றும் நாயகம் புகழ் தீராதே! |

 பாடல்: A.முஹம்மது மஃரூஃப்

ராகம்: சின்னத் தாயவள் தந்த ராசாவே

-----------

என்றும் நாயகம் புகழ் தீராதே!

என்ன பாடினும் தமிழ் போதாதே!

என்றும் நாயகம் புகழ் தீராதே!

என்ன பாடினும் தமிழ் போதாதே!

சொல் வளம் தாராயோ,

என் எண்ணத்தில் வாராயோ,

எந்தன் ரப்பே, அருள்வாய் நீயோ!

என்றும் நாயகம் புகழ் தீராதே!

என்ன பாடினும் தமிழ் போதாதே!


வார்த்தைகள் யாவும் நீ தர

வார்த்திட மையில் நான் வர

தேன் குரல் கொண்டவர் பாடிட

தேனிசை தென்றல் வீசிட

விண்ணைத் தாண்டியும் இசை கேட்டிட

என்னைப் பாசத்தில் நபி பார்த்திட

ஆசை தீராதோ

என்றும் நாயகம் புகழ் தீராதே!

என்ன பாடினும் தமிழ் போதாதே!

சொல் வளம் தாராயோ,

என் எண்ணத்தில் வாராயோ,

எந்தன் ரப்பே, அருள்வாய் நீயோ!


பாரினில் எங்கும் கேட்கணும்

பாடலில் மனமும் ஏங்கணும்

ஆண்டவன் நீயும் தா வரம்

ஆயுள் முழுதும் என் கரம்

நபி நாதரைப் பாட வேண்டுமே

இன்னும் வார்த்தைகள் தமிழ் தேடுமே!

சொற்கள் வாராதோ!

என்றும் நாயகம் புகழ் தீராதே

என்ன பாடினும் தமிழ் போதாதே!

சொல் வளம் தாராயோ,

என் எண்ணத்தில் வாராயோ,

எந்தன் ரப்பே, அருள்வாய் நீயோ!

என்ன பாடினும் தமிழ் போதாதே!

என்றும் நாயகம் புகழ் தீராதே!

சித்தீக் நாயகம் சிறப்பினையே.. | Islamic Tamil Lyrics

 பாடல்:A.முஹம்மது மஃரூஃப்

ராகம்: சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து


சித்தீக் நாயகம் சிறப்பினையே

சிந்தனை செய்திடுவோம்

செல்லமகள் ஆய்ஷாவின்  தந்தையைப் புகழ்ந்திடுவோம்

(2 முறை)

அண்ணல் நபியின் அருந்தோழர் அவர் புகழைப் பாடிடுவோம்

அல்லாஹ்வுமே அருள் மறையில் உரைப்பதைக் கூறிடுவோம்

சித்தீக் நாயகம் சிறப்பினையே

சிந்தனை செய்திடுவோம்

செல்லமகள் ஆய்ஷாவின்  தந்தையைப் 

புகழ்ந்திடுவோம்


ஆ....ஆ (ஹம்மிங்)

படைத்தவனே இணைத்து வைத்தான் தோழரை நபியுடனே

பயகம்பரும் மணமுடித்தார்

அவர்கள் மகளுடனே

(2 முறை)

பகைவர்களை பயந்திருந்தார் 

குகையில் அவருடனே

பயம் வேண்டாம் நபியுரைத்தார் 

இறைவன் நம்முடனே....ஹோ

(சித்தீக் நாயகம்)


ஆ....ஆ(ஹம்மிங்)

அடிமைகளின் விடுதலையில் அனைத்தையும் வழங்கி நின்றார்

அதன் விளைவால் இறையவனின் 

பொருத்தமும் அடைந்து கொண்டார்

நாற்பதுவாம் வயதினலே வேண்டியதை இறைவன்

நாமும் நிதம் ஓதிவர வேத்தித்தில் பதிவு செய்தான்.....ஹோ

(சித்தீக் நாயகம்)

அண்ணல் நபி உம்மைத் தேடுதே ! | Islamic Tamil Lyrics

 பாடல் எண் :6

எழுதியவர்: A. முஹம்மது மஃரூஃப்


அண்ணல் நபி உம்மைத் தேடுதே !

ஆனந்தம் கொண்டு ஆரத்தழுவ 

ஆவலால் என் மனமும் நாடுதே!    


அண்ணல் நபி உம்மைத் தேடுதே !

ஆனந்தம் கொண்டு ஆரத்தழுவ 

ஆவலால் என் மனமும் நாடுதே! 


அரபு மண்ணில் பிறந்தீர்  

அவணி எங்கும் சிறந்தீர் 

அகிலமெல்லாம் படைக்குமுன்னே 

அவன் ஒளியில்  இருந்தீர்  

அருட்கொடையே..(2 முறை) திருநபியே 

அழகிய முன்மாதிரியே 

அடியேன் என் பிழை பொறுக்க 

அவனிடம் பரிந்துரைப்பீரே 


அண்ணல் நபி உம்மைத் தேடுதே !

ஆனந்தம் கொண்டு ஆரத்தழுவ 

ஆவலால் என் மனமும் நாடுதே! 


ஆதம் நபி முதலாய் 

அனைவரும் முன் மொழிந்தார்

ஆண்டவனை அறியவைக்க 

அஹமதவர்  வருவார்

ஆதரித்தே..(2 முறை) அரவணைப்பீர் 

அவன் பொருத்தம் பெறுவதற்கே 

ஆண்டுகள் பல ஆனாலும் 

அழிவதில்லை உம்  புகழே!


அண்ணல் நபி உம்மைத் தேடுதே !

ஆனந்தம் கொண்டு ஆரத்தழுவ 

ஆவலால் என் மனமும் நாடுதே! 


வியக்கவைக்கும் மறையின் 

விளக்கமென வாழ்ந்தீர் 

விரல்தானையே அசைத்து  

விண்ணில்  நிலவதனைப் பிளந்தீர் 

விரும்புகிறேன்…(2 முறை) மனதினிலே 

விழியில் உம்மைக்  காண்பதற்கே

விண்ணிலேறி விரைந்து சென்றே 

விளித்தவனை அடைந்தீரே!


அண்ணல் நபி உம்மைத் தேடுதே !

ஆனந்தம் கொண்டு ஆரத்தழுவ 

ஆவலால் என் மனமும் நாடுதே! 


எம்பெருமான் நபியே 

என் கண்ணின் மணியே 

என்னுடைய ஈமான் நீர் 

ஏற்றிவைத்த ஒளியே

என்றென்றுமே..(2முறை) உமை மறவா 

நினைவுடன் நான் வாழ்வதற்கே 

எவனொருவன் படைத்தானோ

அவனிடமே கேட்பேனே!  


அண்ணல் நபி உம்மைத் தேடுதே !

ஆனந்தம் கொண்டு ஆரத்தழுவ 

ஆவலால் என் மனமும் நாடுதே!

11 அக்டோபர், 2020

முப்பது மில்லியன் கூட வேணாம்.. முகத்திரை கழற்ற மாட்டேன்!

 (Face Caver) முகத்திரைக்காக அல்குர்ஆன் போட்டியின் 30 மில்லியன் ரூபா பணப் பரிசையும் விட்டுக் கொடுத்த இந்தோனேசியப் பெண்மணி

-------=------------------------------------

இந்தோனேஷியாவில் ஷரீஆ பல்கலைக்கழகத்தின் 2 ஆம் வருடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தேசிய  அல்குர்ஆன் மனனப் போட்டியில் பங்குபற்றுகிறார்.

இறுதிச் சுற்றிற்கு (Final Round) தெரிவாகிறார்.

வெற்றியீட்டுபவருக்கு 30 மில்லியன் ரூபா பணப்பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.

இறுதிச் சுற்றிற்கு...... தனது  முகத்தை மறைத்த நிலையில் மாணவி மேடைக்கு வந்தவுடன் மத்தியஸ்தர்கள்,

உங்கள் முகத்திரையை நீக்குங்கள்!

மன்னித்துக் கொள்ளுங்கள் உஸ்தாத்! எனக்கு இதை (ஹிஜாபை) திறக்க முடியாது.

தயவு செய்து உங்கள் ஹிஜாபை நீக்குங்கள்.

இது போட்டியின் நிபந்தனைகளில் ஒன்று.

ஒலிவாங்கியை (Mic) ஹிஜாபுக்குள்ளே  வைத்து ஓத முடியாதா?

முடியாது! முடியாது! இதுதான் சட்டம்

உஸ்தாத்! கவலையாக இருக்கிறது.

நான் போட்டியிலிருந்து வெளியேறுகிறேன். 

உஸ்தாத்!

எனக்கு ஹிஜாபை கலட்ட முடியாது.....

என்று கூறிவிட்டு மேடையிலிருந்து வெளியேறுகிறார்.

இந்த ஈமானியப் பெண்மணி தனது ரப்பின் இறைக் கட்டளைதான் எனக்கு 30 மில்லியன் ரூபாவை விட மிக மேலானது என நினைக்கிறாள்.

கவலையுடன் போட்டியிலிருந்து வெளியேறுகிறாள்.

இந்தப் பெண்மணியின் ஆச்சரியமான செய்தி முழு இந்தோனேஷியாவிலும் வைரலாகத் தொடங்கியது.

போட்டி நடைபெற்று 5 நாட்களில் இந்தப் பெண்மணியின் அதீத  ஈமானிய உணர்வைப் பார்த்து 100 மில்லியன் ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டாள்.

முழு உலகத்திலும் இந்தப் பெண்மணியின் ஈமானிச் செயலை ஊடகங்கள் பகிர்ந்தன.

அல்லாஹ்விற்காக 30 மில்லியன் ரூபாவை விட்டுக் கொடுத்தாள். அதனைவிட 3 மடங்கு (💯 மில்லியன் ரூபாவை) அல்லாஹ் அந்தப் பெண்மணிக்கு கொடுத்தான்.

அதுமட்டுமல்லாமல் முழு உலகத்திற்கும் அந்தப் பெண்மணியின் இதய சுத்தியை (இஹ்லாஸை) அல்லாஹ் வெளிப்படுத்தினான்.

 "நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் அல்லாஹ்விற்காக ஒரு விடயத்தை விட்டுவிடுகிறாறோ அதை விட சிறந்ததை அல்லாஹ் அவருக்கு கொடுப்பான்" 

அல்லாஹ்வின் கட்டளைகளை நிலைநிறுத்தியவர்களை அல்லாஹ் ஒருநாளும் வீனாக்க மாட்டான்.