21 மே, 2013

என்னை நீங்கள் நினையுங்கள்; உங்களை நான் நினைக்கிறேன்

மலடி கூட மன்றாடிக் கேட்டால் மழலைச் செல்வம் உண்டு:
மூஸா அலை அவர்களிடம் ஒரு பெண் வந்து குழந்தைக்காக துஆ செய்யும்படி வேண்டினாள். நபி துஆ செய்தார்கள் அல்லாஹ் கூறினான் : அவள் ஒரு மலடி என்று நான் ஏற்கனவே எழுதிவிட்டேன் என்றான். ஒரு ஆண்டு கழிந்து மீண்டும் வந்து துஆ செய்யும்படி வேண்டினாள் . மீண்டும் அதே பதில் இறைவனிடம்.
அடுத்த ஆண்டு அதே பெண் கையில் குழந்தையோடு வந்தபோது இது யாருடைய குழந்தை என்று கேட்டார்கள். என்னுடையதுதான் என்றாள்.

''யா அல்லாஹ் இது எப்படி'' என்று ஆச்சரியத்துடன் நபி கேட்க அல்லாஹ் கூறினான் : ''என்ன செய்வது நபியே... அவளைப் பார்த்து '' நீ அகீம் அகீம் (மலடி மலடி) என்று நான் கூறியபோதெல்லாம் அவள் என்னைப் பார்த்து யா அல்லாஹ் நீ ரஹீம் ரஹீம் என்றாள் எனவே என் அருள் என் ஆற்றலை விதியை வென்று விட்டது 1

ஒரு ரொட்டிக் கடைக் காரனின் ஆவலை நிறைவேற்ற அகிலம் போற்றும் அறிஞர் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்களை அவனது இல்லத்திற்கே கொண்டு வந்த அல்லாஹ்வின் அற்புதத்தை என்னவென்று சொல்வது  :
 كان الشيخ احمد مسافراً فمر بمسجد يصلي فيه ولم يكن يعرف احداً في تلك المنطقة وكان وقت النوم قد حان فافترش الشيخ أحمد مكانه في المسجد واستلقى فيه لينام وبعد لحظات إذا بحارس المسجد يطلب من الشيخ عدم النوم في المسجد ويطلب منه الخروج وكان هذا الحارس لا يعرف الشيخ احمد ، فقال الشيخ احمدلا أعرف لي مكان أنام فيه ولذلك أردت النوم هنا فرفض الحارس أن ينام الشيخ وبعد تجاذب أطرافالحديث قام الحارس بجر الشيخ احمد إلى الخارج جرا 
والشيخ متعجب حتى وصل إلى خارج المسجد . وعند وصولهم للخارج إذا بأحد الاشخاص يمر بهم والحارس يجر الشيخ فسأل ما بك ؟
فقال الشيخ أحمد لا أجد مكانا أنام فيه والحارس يرفض أن أنام في المسجد فقال الرجل تعال معي لبيتي لتنام هناك ، فذهب الشيخ أحمد معه وهناك تفاجأ الشيخ بكثرة تسبيح هذا الرجل وقد كان خبازاً وهو يعد العجين ويعمل في المنزل كان يكثرمن الاستغفار فأحس الشيخ بأن أمرهذا الرجل عظيم من كثرة استغفاره فنام الشيخ وفي الصباح سأل الشيخ
الخباز سؤالاً  قال له : هل رأيت أثر الاستغفار عليك؟ 
فقال الخباز نعم ووالله إن كل ماأدعو الله دعاءاً يستجاب لي ، إلادعاءاً واحدا لم يستجاب حتى الآن ، فقال الشيخ وما ذاك الدعاء ؟ فقالالخباز أن أرى الإمام أحمد بن حنبل
فقال الشيخ أنا الإمام أحمد بن حنبل فوالله إنني كنت أجرّ إليك جراً ، وها قد أستجيبت دعواتك كلها
இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ் என்றால் அகிலமே அதிசயித்த காலம் அவர்களைச் சந்திக்க அனைவருமே ஆவல் கொண்டிருந்த காலம் அது.
ஒருநாள் அவர்கள் ஒருவழியாகப் பயணம் சென்றுகொண்டிருக்கும்போது வழியில் ஒரு பள்ளி அதில் தொழுதுவிட்டு ஒரு ஓரமாக படுக்க துண்டு விரித்தார்கள். பள்ளி காவலாளி வந்து இங்கு யாரும் தூங்கக் கூடாது எனவும் உடனே வெளியேறுமாறும் கூறினான் அவனுக்குத் தெரியாது இவர்கள்தான் இமாம் அஹ்மத் ரஹ் என்று.
நான் ஒரு வழிப்போக்கன் நான் இளைப்பாறுவதற்கு வேறு இடம் எனக்குத் தெரியவில்லை என்று இமாம் அவர்கள் கூற அதெல்லாம் முடியாது என்று கடுமையாக பேசி கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினான் இமாம் அவர்கள் வெளியே வந்துவிழ, அந்த வழியாகக் கடந்து சென்ற ஒரு மனிதர் விபரம் கேட்டார் இமாம் அவர்கள் விபரம் கூற அவ்வாறானால் நீங்கள் இன்று என் இல்லத்திலேயே தங்கலாம் என்று அழைத்துச் சென்றார். அங்கே சென்ற இமாம் அவர்கள் ஒரு விநோதத்தைக் கண்டார்கள் அவர் ஒரு ரொட்டிக் கடைக்காரர். அது அதிசயமல்ல அவர் மாவு பிசைந்துகொண்டிருந்தார் திக்ரு செய்துகொண்டிருந்தார் ரொட்டி சுட்டுக் கொண்டிருந்தார் இச்திக்பார் ஓதிக்கொண்டிருந்தார் வீட்டு வேலை செய்து கொண்டிருந்தார் தஸ்பிஹ் ஓதிக்கொண்டிருந்தார் இவர் அதிகமாக திக்ரு செய்து கொண்டிருந்ததைக் கண்ட இமாம் அவர்கள்  ஆர்வத்துடன் வினவினார்கள் : நீ இதனால் பலன் அடைந்திருக்க்றாயா  '' 
''நிச்சயமாக! அல்லாஹ்வுடன் நான் என்ன கேட்டாலும் அது நிறைவேறாமல் இருந்ததில்லை என் அனைத்து தேவைகளையும் அவன் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறான் ஆனால் ஒன்றைத் தவிர ...''
'' அது என்ன ''
''அகிலமே போற்றும் இமாம் அஹ்மத் அவர்களை நான் பார்த்ததில்லை என் ஆயுளில் ஒரு முறையாவது அவர்களை நான் காணவேண்டும் அல்லாஹ்வே '' என்று நான் கேட்டு வருகிறேன் அதுமட்டும்தான் இன்னும் நிறைவேறவில்லை.''
இதைக் கேட்டதும் இமாம் அவர்கள் ஆச்சரியத்துடன் கூறினார்கள் '' ஓ அதுதானோ?  ஒரு பள்ளியில் படுத்திருந்த என்னை என் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளி உன் இல்லத்திற்கு கொண்டு வந்தானோ அந்த இறைவன் 
உன் ஒரு வேண்டுதல் கூட நிராகரிக்கப்படாமல் நிறைவேற்றத்தானோ இந்த ஏற்பாடு?

ஐந்து பிள்ளைகளோடு அவதிப்பட்ட ஒரு விதவைப் பெண்  இஸ்திக்பார் மூலம் சங்கடம் மாறி சந்தோசம் அடைந்த நிகழ்வு :

هناك امرأة قالت:
ما ت زوجي وأنا في الثلاثين من عمري وعندي منه خمسة أطفال بنين وبنات ، فأظلمت الدنيا في عيني وبكيت حتى خفت على بصري
وندبت حظي ..ويئست ..وطوقني الهم فأبنائي صغار وليس لنا دخل يكفينا وكنت أصرف باقتصاد من بقايا مال قليل تركه لنا أبونا وبينما أنا في غرفتي
فتحت المذياع على إذاعة القران الكريم
وإذا بشيخ يقول : قال رسول الله صلى الله عليه وسلم
((
من أكثر من الإستغفار جعل الله له من كل هم مخرجا ومن كل ضيق فرجا ))
فأكثرت بعدها الإستغفار
وأمرت أبنائي بذلك وما مر بنا والله سته اشهر
حتى جاء تخطيط مشروع على أملاك لنا قديمه فعوضت فيها بملايين
وصار أبني الأول على طلاب منطقته وحفظ القران كاملاً
وصار محل عناية الناس ورعايتهم
وأمتلأ بيتنا خيراً وصرنا في عيشه هنيئه
وأصلح الله لي كل أبنائي وبناتي
وذهب عني الهم والحزن والغم وصرت أسعد أمرأه
منقول للشيخ عائض القرني
نعم إنها أعجوبة الاستغفار التي غفلنا عنها

கணவன் மனைவி ஊடல் ஏற்பட்டு கணவன் கடும் கோபத்தில் வீட்டை விட்டு புறப்பட்ட வினாடி திடீரென மனம் அமைதி அடைந்து மனைவியிடம்  வந்து  சமரசம் அடைகிற அற்புத நிகழ்வு ;

يقول أحد الأزواج
كلما أغلظت على زوجتى أو تشاجرت أنا وهي أو صار بيني وبينها أي مشكلة أهم بالخروج من البيت من الغضب ....... ووالله لا أفارق باب العمارة إلا وتجتاحني رغبة شديدة في الذهاب للإعتذار منها
ومراضاتها............أخبرتها بذلك فقالت لي: أتعرف لماذا ؟؟
قال لها : ولماذا ؟
قالت بمجرد أن تخرج من الغرفة بعد شجارنا ألهج بالاستغفار ولا أزال أستغفر حتى تأتي وتراضيني
انه الاستغفار الذي قال عز وجل عنه (( وما كان الله معذبهم وهم يستغفرون ))
ألا يستحق أن يكون أعجوبة

روى الشيخ خالد الجبير استشاري امراض القلب هذه القصة التي حدثت له :
أنه كان معرض للتقاعد من عمله وهناك خمسة أطباء من اللذين يعملون معه في نفس المشفى
كانو يكنوا له العداوة وأرادو خروجه من العمل .. وعندما عرض له الخبر أصبح مهموما ضائقا شديد الكرب
ذهب للمسجد وقت صلاة العصر وعندما خرج تذكر شيئا ً ,,,قال في نفسه -- الأن كل الناس المرضى
يأتون إلي لأعالجهم وأنا الآن لا أستطيع أن أعالج نفسي من الهم الذي أصابني__ وتذكر الاستغفار
وجعل يردد (( استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه )) وعندما وصل لبيته يقول :
ما إن أمسكت مقبض باب المنزل حتى أحسست براحة واطمئنان عجيبين يسريان في داخلي ........ يقول
الدكتور... ولم تمض بعد ذلك سوى سنتين إلا وقد حدث للأطباء الخمسة ما حدث...
فقد مات أحدهم
ونقل الآخر من عمله
وتقاعد الرابع
واعتذر أحدهم من فعلته وفصل الأخير من الوظيفة .............!!!!
سبحان الله كل ذلك يفعله الاستغفار
أين نحن من قوله تعالى
فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا * ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ) سورة , نوح )


இதுபோல சமீபத்தில் நடைபெற்ற  அற்புத சம்பவம் ஒன்று  இணையத்தில் பரவலாக காணக் கிடைக்கறது :
டாக்டர் அஹ்மத் ஒரு பிரபலமான மருத்துவர். அவர் ஒரு தடவை ஒரு முக்கியமான மருத்துவ மாநாட்டுக்குப் புறப்பட்டார். அது இன்னொரு நகரத்தில் நடக்கவிருந்தது. அந்த மாநாட்டில் டாக்டர் அஹ்மதுக்கு ஒரு விருது வழங்கப்படவிருந்தது. அவர் அண்மையில் நடத்திய ஒரு நீண்ட நெடிய மருத்துவ ஆராய்ச்சிக்காக, அதனைப் பாராட்டும் விதமாக அந்த விருதை வழங்கி அவரை கௌரவிக்க இருந்தார்கள்.
  அந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கு பெரிதும் ஆர்வம் கொண்டிருந்தார் டாக்டர் அஹ்மத். அந்த ஆராய்ச்சிக்காக மிக நீண்ட காலமாக, கடினமாக உழைத்திருந்தார் அவர். ஆராய்ச்சிக்காக தான் பட்ட சிரமங்களுக்கெல்லாம் ஆறுதலாக இந்த விருது அமையும் என்று அவர் எண்ணினார். விமானம் புறப்பட்டது. புறப்பட்டு இரண்டு மணி நேரத்தில் விமான ஓட்டுனர் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். விமானத்தில் ஏதோ ஒரு கோளாறு இருக்கிறதென்றும், அருகிலுள்ள விமான நிலையத்தில் விமானத்தைத் தரையிறக்கப் போவதாகவும் அவர் அறிவிப்பு செய்தார்.
  தான் உரிய நேரத்தில் மாநாட்டை அடைவோமா என்று கவலை கொண்ட டாக்டர் அஹ்மத் விமானம் தரையிறங்கியதும் உடனடியாக உதவி மேடைக்கு ஓடினார். அங்கே இருந்த பெண்மணியிடம் அவரது நிலையை எடுத்துச் சொன்னார். தான் போக வேண்டிய இடத்திற்கு உடனடியாகக் கிளம்பக் கூடிய அடுத்த விமானத்தைப் பற்றிக் கூறுமாறு கேட்டுக்கொண்டார்.
  அந்தப் பெண்மணி அடுத்த குண்டைப் போட்டார். அடுத்த பத்து மணி நேரத்திற்கு அவர் செல்ல வேண்டிய இடத்திற்கு விமானமே இல்லை என்றும், அதனால் தன்னால் அவருக்கு உதவ முடியாது என்றும் வருத்தத்துடன் தெரிவித்தார். ஆனால் ஓர் ஆலோசனை கூறினார். ஒரு காரை வாடகைக்கு எடுத்து ஓட்டிச் சென்றால் நான்கு மணி நேரத்தில் சென்று விடலாம் என்று கூறினார்.
  வேறு வழியில்லாததால் அந்த ஆலோசனையை அவர் ஏற்றுக்கொண்டார். சாதாரணமாக நீண்டதூரப் பயணத்திற்கு கார் பயணத்தை அவர் விரும்ப மாட்டார்.
  ஒரு காரை வாடகைக்கு எடுத்து தன் பயணத்தைத் தொடர்ந்தார். சிறிது நேரத்தில் அவருக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. தட்பவெப்ப நிலை திடீரென்று மாறியது. கனமழையுடன், கடுமையான புயல் காற்று வீசத் தொடங்கியது. மழையின் அடர்த்தியில் அவரால் காரை ஓட்டிச் செல்ல முடியவில்லை. சாலையைச் சரியாகப் பார்க்க முடியவில்லை. இந்தக் குழப்பத்தில் அவர் போக வேண்டிய ஒரு வளைவைத் தவற விட்டார். அவரை அறியாமலேயே வண்டி வழி மாறிச் சென்று கொண்டிருந்தது.
  இரண்டு மணி நேரக் கடினப் பயணத்திற்குப் பின்னர் தான் வழி தவறி விட்டோம் என்பது அவருக்கு உறுதியானது. பாலைவனச் சாலையில், பயங்கர புயல் காற்றுக்கிடையில், பயமுறுத்தும் மழையினூடே அவரின் இந்த நீண்ட கடினமான பயணம் அவரை மிகவும் தளர்த்தி. கடும் களைப்பை ஏற்படுத்தியது. நல்ல பசியும் எடுத்தது. ஏதாவது வீடு தெரிகிறதா என்று பார்த்துக்கொண்டே சென்றார். ஒன்றும் தென்படவில்லை. சிறிது நேரப் பயணத்திற்குப் பிறகு, ஒரு சிறிய ஓட்டு வீடு கண்ணில் தென்பட்டது. காரை நிறுத்தி, அந்த வீட்டின் கதவைத் தட்டினார். ஒரு வயதான பெண்மணி கதவைத் திறந்தார். அந்தப் பெண்மணியிடம் தனது நிலையை விளக்கிய டாக்டர் அஹ்மத், தொலைபேசியைப் பயன்படுத்த அனுமதி கேட்டார்.
  அந்த வீட்டில் தொலைபேசியும், மின்சாரமும் இல்லை என்று தெரிவித்த அந்த வயதான பெண்மணி அவரை உள்ளே வருமாறு அழைத்தார். மிகவும் களைத்துப் போய் இருப்பதால் தேநீரும், உணவும் அருந்திவிட்டுச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார். டாக்டர் போக வேண்டிய இடத்திலிருந்து வழி தவறி நீண்ட தூரம் வந்துவிட்டதாகவும், சரியான பாதையை அடைவதற்கே இன்னும் நிறைய நேரம் பிடிக்கும் என்றும் அந்தப் பெண்மணி கூறினார்.  
பசியும், களைப்பும், குளிரும் அவரை யோசிக்க விடவில்லை. அந்தப் பெண்மணியின் அழைப்பை ஏற்று உள்ளே சென்றார். மேசையில் சூடான தேநீரும், உணவும் இருக்கிறது என்றும், அதனை அருந்துமாறும் கேட்டுக்கொண்ட அந்தப் பெண்மணி தான் தொழுது விட்டு வருவதாகக் கூறிச் சென்றார்.
  தேநீரை உறிஞ்சிய டாக்டர் அஹ்மத் அப்பொழுதுதான் அதனைக் கவனித்தார். மெழுகுவர்த்தியின் மங்கலான வெளிச்சத்தில் தொழுது கொண்டிருந்த அந்தப் பெண்மணியின் அருகில் ஒரு குழந்தை தொட்டிலில் படுத்துக் கிடந்தது.
  ஒரு தொழுகை முடிந்ததும், கையேந்தி பன்னிப் பன்னி மன்றாடிப் பிரார்த்தனை புரியும் அந்தப் பெண்மணி அடுத்த தொழுகையை ஆரம்பித்து விடுவார். மீண்டும் பிரார்த்தனை. மீண்டும் மன்றாட்டம். இதனைக் கவனித்துக்கொண்டிருந்த டாக்டர் அந்தப் பெண்மணிக்கு ஏதோ ஓர் அவசியத் தேவை இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டார்.
  தொழுகையை முடித்து அந்தப் பெண்மணி எழுந்ததும் டாக்டர் மெல்ல பேச்சு கொடுத்தார். அவரது தேவைகளை அல்லாஹ் பூர்த்தி செய்வான் என்ற நம்பிக்கையும், ஆறுதலும் கூறினார்.
  அவர் நிறைய பிரார்த்தனைகளைச் செய்ததையும், மிக நீண்ட நேரம் தொழுததையும் தான் கவனித்ததாகவும், ஏதாவது தன்னாலான உதவிகள் வேண்டுமென்றால் தான் செய்து தருவதாகவும் டாக்டர் அந்தப் பெண்மணியிடம் கூறினார். அந்தப் பெண்மணி புன்முறுவல் பூத்தார். அல்லாஹ் தன் அனைத்துப் பிரார்த்தனைகளையும் ஏற்றுக்கொண்டதாகவும், ஒரே ஒரு பிரார்த்தனை மட்டும் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருப்பதாகவும் கூறினார்.
  அந்தக் குறிப்பிட்ட பிரார்த்தனைக்கு மட்டும் அல்லாஹ் ஏன் இன்னும் பதில் தரவில்லை என்று தனக்குத் தெரியவில்லை என்றும், தனது பலஹீனமான ஈமான் அதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார். சொல்லத் தடையில்லையென்றால் அந்தத் தேவை என்னவென்று தன்னிடம் கூறும்படி டாக்டர் கேட்டுக்கொண்டார்.
  அதனைச் சொல்வதாக ஆமோதித்து தலையாட்டிய அந்த அம்மையார் சொன்னார்:
  “அந்தத் தொட்டிலில் இருக்கும் குழந்தை என் பேரன். அவனுடைய பெற்றோர்கள் அண்மையில் நடந்த விபத்து ஒன்றில் பலியாகிவிட்டார்கள். இந்தக் குழந்தைக்கு அரிய வகை புற்றுநோய் உள்ளது. நான் போகாத மருத்துவமனை இல்லை. பார்க்காத டாக்டர்கள் இல்லை. குழந்தைக்கு சிகிச்கை அளிக்க முடியாது என்று எல்லோரும் கையை விரித்துவிட்டனர். என் பேரனுக்கு உள்ள அரிய வகை புற்றுநோயைக் குணப்படுத்துவதற்கு ஒரே ஒரு மருத்துவரால்தான் முடியுமாம். அவர் பெயர் டாக்டர் அஹமதாம். ஆனால் அவர் இருக்குமிடம், நான் இருக்குமிடத்திலிருந்து வெகு தூரத்தில் இருக்கிறது. அவரை நான் காண்பதற்கு வாய்ப்பே இல்லை. ஆதலால்தான் நான் அல்லாஹ்விடம் அல்லும், பகலும் டாக்டர் அஹமதுவைச் சந்திப்பதற்கும், அவர் என் பேரனுக்குச் சிகிச்சை அளிப்பதற்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு மன்றாடிப் பிரார்த்தித்துக்கொண்டிருக்கிறேன்.” இதனைக் கேட்ட டாக்டர் அஹ்மதின் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தோடியது. “அல்லாஹ் மிகப் பெரியவன். விமானத்தில் கோளாறு, பயங்கரப் புயல், பாதை தவறியது… இவையெல்லாம் ஏற்பட்டது எதற்கு என்று இப்பொழுதுதான் எனக்கு நன்றாகப் புரிகிறது. அல்லாஹ் டாக்டர் அஹ்மதுவைச் சந்திப்பதற்கு உங்களுக்கு வழியை ஏற்படுத்தித் தரவில்லை. மாறாக, டாக்டர் அஹ்மதுவையே உங்களிடம் நேரடியாக அனுப்பி வைத்திருக்கிறான். ஆம்! நான்தான் டாக்டர் அஹ்மத்…” என்று கூறினார் டாக்டர்.
  திடுக்கிட்ட அந்த அம்மையாரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர். உடனே தன் கைகளை உயர்த்தி இவ்வாறு கூறினார்: “யா அல்லாஹ்! நீ மகா பெரியவன், மகா கருணையாளன்…!”
-----------------------------------------------

1-جاءت امرأة الى سيدنا موسى عليه السلام (كليم الله) وقالت له: يا نبي الله ادعو لي ربك ان يرزقني بولد صالح يفرح قلبي فدعا سيدنا موسى عليه السلام ربه ان يرزق تلك المرأة طفلا
فاجابه الله عز وجل:اني كتبتها عقيم فقال سيدنا موسى عليه السلام يقول الله عز وجل:اني كتبتها عقيم
فذهبت المرأة وعادت بعد سنة فقالت يانبي الله ادعو ربك ان يرزقني بطفل صالح مرة اخرى دعا سيدنا موسى عليه السلام ربه ان يرزقها بولد فقال له عز وجل:اني كتبتها عقيم
فقال لها نبي الله موسى عليه السلام:يقول الله عز وجل اني كتبتها عقيم
وبعد سنة رأى سيدنا موسى عليه السلام تلك المرأة وهي تحمل طفل في ذراعيها
فقال لها:من هذا الطفل قالت:هو ابني
فكلم سيدنا موسى عليه السلام ربه وقال لهكيف يكون لهذه المرأة طفل وانت كتبتها عقيم
فقال له تعالى:كلما قلت عقيم هي تقول رحيم فطغت رحمتي على قدرتي

4 கருத்துகள்:

  1. அல்லாஹூ அக்பர்
    அதிசயமான தகவல்
    படித்ததும் கண்கள் குளமாகிவிட்டது
    ﺑﺎﺭﻙ ﺍﻟﻠﻪ ﻓﻲ حياتك

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் மஸ்லஹி,
      என் உள்ளத்தையும் உருக்கிய சம்பவம் இது
      இந்த சம்பவத்தை இணையத்தில் வாசித்ததற்குப் பிறகு
      திக்றை அதிகமாக சுவாசிக்கிறேன்
      துஆ செய்யுங்கள்

      நீக்கு
  2. பதில்கள்
    1. உங்கள் வருகைக்கும்
      கருத்துக்கும் ஆழமான நன்றி.

      நீக்கு

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள் Part - 2

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள்  part 2 தனித்து இயங்குவதை விட கூட்டு முயற்சி  Team Work நல்ல பலனையும் வெற்றியையும் ...