உலாவும் தென்றல் காற்றலையே..
சலாத்தை ஏந்திச் செல்வாய் நீ
நபியின் பாத மலரடிக்கே..
தவழ்ந்தே போகும் மேகங்களே..
என் தூதை கொண்டு செல்வீரே..
நபியின் பாத மலரடிக்கே..
நபியைக் காண என் இதயம் துடிக்கும் ஓசை கேட்பீரே..
விடும் என் மூச்சுக் காற்றினிலே நபியின் நாமம் கேட்பீரே..
மதீனா காண ஏங்கி நிற்கும் என் ஆவலை ஏந்திச் செல்வீரே-2
நபியின் பாத மலரடிக்கே..
ரசூலுல்லாஹ் என் கண்மணியாம்! ஹபீபுல்லாஹ் என் அக ஒளியாம்!!
அண்ணல் மஹ்மூதைக் காணாமல் என் கண்கள் இருந்தென்ன லாபம்?
நபியுல்லாஹ்வின் சமூகத்திலே என் ஆவலை ஏந்திச் செல்வீரே!-2
நபியின் பாத மலரடிக்கே..
நான் உலகில் வாழும் காலமெல்லாம் நபியின் காதல் வாழ்த்திடுவேன்
நான் செய்த பாக்கியம்தானே நபியின் உம்மத்தாய்ப் பிறந்தேன்
ரசூலுல்லாஹ்வின் சபைதனிலே என் ஆவலை ஏந்திச் செல்வீரே!
நபியின் பாத மலரடிக்கே..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்