04 பிப்ரவரி, 2012

நினைவாற்றல் அதிகரிக்க...


மனித ஆற்றலில் மகத்தான ஆற்றல் நினைவாற்றல். அது மனிதனின் மிகப் பெரும் சொத்து. அதைப் பாதுகாக்கவேண்டாமா?
பலரையும் பாதிக்கும் பிரச்னை ஞாபக மறதி. சரியான காரணத்தை கண்டறிந்து சரி செய்தால் மறதியில் இருந்து விடுபடலாம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
மறதி என்பது ஒரு நோய் அல்ல. இதற்கு பல காரணங்கள் உள்ளன۔
1.நேரத்தை திட்டமிடாமை:
காலையில் தாமதமாக எழுவதன் மூலம் அனைத்து வேலைகளையும் டென்ஷனுடன் செய்வதால் மனம் நிம்மதியற்று போகிறது. இந்த சூழலில் சாதாரண விஷயங்கள் கூட எளிதில் மறந்து விடுகிறது. நேரத்தை திட்டமிடுவதன் மூலம் டென்ஷனில் இருந்து விடுபட முடியும்.மனம் அமைதியாக இருக்கும் போது முக்கியமான விஷயங்களை திரும்பத் திரும்ப நினைவுக்குக் கொண்டு வந்து காலை நேரத்தை இனிமையாக்க மாற்றலாம். அப்படியே மறந்தாலும் ஒரு நிமிடம் நிதானித்து நினைவுக்கு கொண்டு வர முடியும்.


2. கவனச்சிதறல்: 
இதனால் முக்கிய விஷயங்கள் நினைவில் பதியாமல் போகிறது. ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளை செய்வது மற்றும் வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவது போன்ற பழக்கங்களை உடனடியாக கைவிட வேண்டும்.இவர்கள் ஒரு சமயத்தில் ஒரே ஒரு வேலையில் முழு கவனம் வைப்பதன் மூலம் மறதியை தடுக்க முடியும். மறக்கும் பழக்கம் அடிக்கடி ஏற்பட்டால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.
3.மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவு
4. மற்றும் தலையில் அடிபடுவதால் நினைவாற்றலை இழக்கும் நிலை ஏற்படுகிறது.
5.குடிப்பழக்கம். 6. வலிப்பு.   7. பார்வை குறைபாடு போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கும் நினைவாற்றல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. 8.கர்ப்பிணிகளுக்கு குறுகிய கால, அண்மைக் கால நினைவாற்றலில் பாதிப்பு 
ஏற்படலாம்.இதன்றி
ஆர்வமின்மை, முயற்சியின்மை, தாழ்வுமனப்பான்மை, எதிர்மறை எண்ணம், பயம், அதிர்ச்சி, மனச்சோர்வு தப்பிக்கும் மனோபாவம், புகை மது போதைப் பழக்கங்கள்,உடல்னலக் குறைபாடுகள்,போன்ற சில காரணங்களும் 

நினைவாற்றல் பிரச்னையை பொதுவாக அல்சைமர் நோய் என்று அழைக்கிறோம். 


நினைவாற்றல் குறைபாடு மூன்று வகைப்படும். 
a.குறுகிய கால நினைவாற்றல் குறைபாடு:
பயன்படுத்திய தொலைபேசி எண்ணை உடனடியாக மறந்து விடுதல் இந்த வகை.
 b.அண்மைக் கால நினைவாற்றல் குறைபாடு:
இதில் சில மணி நேரங்களுக்கு முன்னர் நடந்ததை நினைவுக்குக் கொண்டு வருவதில் சிரமம் ஏற்படும்.
c.நீண்ட கால நினைவாற்றல் குறைபாடு:
சிறு வயதில் நடந்த விஷயங்களை மறந்து விடுவது நீண்ட கால நினைவாற்றல் குறைபாடு.


 பாதிப்புகள்:

  • முதலில் அண்மை கால நினைவுகளை படிப்படியாக இழக்கின்றனர்.
  • புதிய தகவல்களை கற்பது மற்றும் நினைவில் வைத்து கொள்வதிலும் பிரச்னை ஏற்படும். 
  • ஒன்றையே திரும்பத் திரும்பக் கூறுவது, பொருட்களை இடம்மாற்றி வைத்து விட்டு தேடுவது போன்ற குழப்பங்கள் காணப்படும்.
  • தனி மனித ஆளுமை, பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது, சமூக பழக்கங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதில் தாமதம் ஏற்படும். 
  • இதுபோன்ற காரணங்களால் பதற்றம், கடுப்பு, மனச்சோர்வு மற்றும் குழப்பம், அமைதியின்மை ஆகிய பிரச்னைகள் உண்டாகி நிம்மதியற்ற வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
இது போன்ற ஆரம்ப அறிகுறிகள் தெரியும் போதே சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம்.


 பாதுகாப்பு முறை: 
ஒரு குழந்தை லட்சக்கணக்கான மூளை செல்களுடன் பிறக்கிறது. மனிதனுக்கு வயதாகும்போது படிப்படியாக மூளை செல்களில் சில அழிகிறது. புதிதாக எதுவும் உருவாவதில்லை.வயதாகும் போது மூளை செயல்பாட்டுக்கு தேவையான வேதிப் பொருட்கள் உடலில் சரியாக உற்பத்தி செய்யப்படுவதில்லை. இதனால்தான் வயதாகும் போது நினைவாற்றல் பிரச்னை உருவாகிறது.
  • சிறு வயதில் இருந்தே பதற்றமான வாழ்க்கை சூழலை மாற்றி நேரத்தை திட்டமிட குழந்தைகளை பழக்க வேண்டும். இதன் மூலம் தேவையற்ற டென்ஷனை தவிர்க்கலாம்.
  • சத்தான உணவு, உடற்பயிற்சி ஆகியவை மனநிலையை உற்சாகமாக வைத்துக் கொள்ள உதவும். இதன் மூலம் நினைவாற்றல் பிரச்னையை தவிர்க்கலாம்.
  •  நேரத்தையும் வேலையையும் திட்டமிடுவதன் மூலம் மறதிக்கான வாய்ப்பை குறைக்கலாம்.
  • அடுத்ததாக நினைவாற்றலை அதிகரிக்க பயிற்சி அளிக்கலாம். புதிர் விளையாட்டு, வார்த்தை விளையாட்டு ஆகியவற்றில் ஈடுபடலாம். 
  • எப்போதும் பரபரப்பாக இருப்பதை விடுத்து மனதை அமைதியாக வைத்திருப்பது அவசியம்.அந்த நேரங்களில் மறக்கும் விஷயங்களை திரும்பத் திரும்ப நினைவுக்கு கொண்டு வருவதன் மூலம் முக்கியமான விஷயங்களை மனதில் பதிய வைக்கலாம்.
  • செய்ய வேண்டிய வேலை மற்றும் மறக்கும் விஷயம் குறித்து தாளில் எழுதி வைத்து நினைவுக்கு கொண்டுவரலாம்.
  •  முக்கியமாக, மறதிக்காக கவலைப்பட கூடாது. இதனாலும் பிரச்னை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
  • மனதை ஒரு நிலைப்படுத்துவது
மனிதனின் நினைவாற்றலுக்கும் மனதை ஒரு நிலைப்படுத்துவதற்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு உண்டு.உண்மையில் மனதை எந்தளவுக்கு ஒரு முகப்படுத்துகின்றோமா அந்தளவிற்கு நினைவாற்றலை அதிகரிக்க முடியும்.
     ஆம், மனதை ஒருமுனைப்படுத்துவதன் மூலம் மூளைக்கு குறியேற்றப்படும் தரவுகளின் அளவினை வெகுவாக அதிகரிக்க முடியும்.
      மனதை ஒருநிலைப்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமான, சக்தி வாய்ந்த மூளையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
        யோகா மற்றும் உடற்பயிற்சி மனதை ஒருநிலைப் படுத்துவதற்காக மிகச் சிறந்த வழிகளில் ஒன்றாகும். 
        • பத்து கோப்பை நீர் பருக வேண்டும்.
        • நாள் ஒன்றுக்கு 6-8 மணி நேரம் உறங்க வேண்டும்.
        • நினைவாற்றலை அதிகரிக்கக் கூடிய உணவுகளை வகைளை உட்கொள்ளல்.பழங்கள், காய்கறி வகைகள் நினைவாற்றலை அதிகரிக்கும் 
        • நினைவாற்றலை அதிகரிக்க இரவில் தூங்குவதற்குமுன் அன்று நடந்தவற்றை மனதில் வரிசையாக நினைவுக்கு கொண்டுவந்துவிட்டு உறங்கலாம்.
        சூஃபிகள் எனும் ஞானிகளிடத்தில் இந்த பயிற்சி உண்டு. அவர்கள் இதை 'முஹாசபா' (சுயபரிசோதனை) என அழைக்கின்றனர்.
         உமர் (ரலி) வரலாற்றில் ஒரு குறிப்பு உண்டு:
        அவர்கள் ஒவ்வொரு நாளும் தூங்குவதற்கு முன் தன்னை ஒரு தூணில் கட்டிவைத்துக்கொண்டு ஒரு கையில் சாட்டையைப் பிடித்துகொண்டு அன்று செய்தவற்றை நினைத்துப் பார்ப்பார்களாம். நன்மைகள் ஞாபகத்திற்கு வரும்போது இறைவனைப் புகழ்வார்களாம். ஏதேனும் தீமை நினைவுக்கு வந்தால் தன்னைத் தானே சாட்டையால் விளாசிக்கொள்வார்களாம். உமரே! இனிமேல் இப்படி செய்வாயா? என்று தன்னைத்தானே கடிந்துகொள்வார்களாம்.

          இந்த வழிமுறையில் இரண்டு பலன்களுண்டு. ஒன்று நினைவாற்றல் பெருகுகிறது. மற்றொன்று தவறுகள் குறைகிறது. 

          கருத்துகள் இல்லை:

          கருத்துரையிடுக

          படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
          பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
          அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

          முக்கியப் பதிவுகள்

          உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள் Part - 2

          உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள்  part 2 தனித்து இயங்குவதை விட கூட்டு முயற்சி  Team Work நல்ல பலனையும் வெற்றியையும் ...