20 ஜூலை, 2021

உழ்ஹிய்யா )குர்பானியின் சட்டங்கள் ஷாஃபிஈ - ஹனஃபி

 உழ்ஹிய்யா )குர்பானியின் சட்டங்கள் 

         ஷாஃபிஈ - ஹனஃபி 

===========================

       உழ்ஹிய்யா சுன்னத்தா ? வாஜிபா ?


       ஷாஃபிஈ மத்ஹப் : *சுன்னத் முஅக்கதா* 

    ( வலியுறுத்தப்பட்ட சுன்னத் ) 

       ஹனஃபி மத்ஹப் : *வாஜிப்*

            (கடமை)

       ஷாஃபிஈ மத்ஹபில் *யாருக்கு சுன்னத்?

       பெருநாள் தினத்தன்று ஒருவருக்கு தனக்கும் தன் பொறுப்பில் உள்ளவர்களுக்கும் உணவு மற்றும் உடைக்குப் போக வசதியிருந்தால் *உழ்ஹிய்யா கொடுப்பது சுன்னத்து

       ( பொறுப்பில் உள்ளவர்கள் : மனைவி ,பிள்ளைகள் மற்றும் பெற்றோர். )


       ஹனஃபி மத்ஹபில் யாருக்கு வாஜிப்*? 

       பெருநாள் தினத்தன்று ஜகாத்துடைய அளவு செல்வம் யாரிடம் உள்ளதோ அவருக்கு *உழ்ஹிய்யா கொடுப்பது வாஜிப்*.


       (ஜகாத்துடைய அளவு :

*85 கிராம் தங்கம்* அல்லது *612 கிராம் வெள்ளி* அல்லது *612 கிராம் வெள்ளியின் மதிப்புள்ள பணம்* .)


       ( ஜகாத் கடமையாவதற்கு ஒரு வருடம் ஆகி இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இங்கு இல்லை. )



        *தகுதி உள்ள பிராணிகள்*

=================

       உழ்ஹிய்யா கொடுக்க தகுதியுள்ள பிராணிகள்: *மூன்று*. 


        1. *ஒட்டகம்*

        2. *மாடு* 

        3. *ஆடு* 


     இம்மூன்றிலும் *ஆணினம்* *பெண்ணினம்* இரண்டினத்தையும் உழ்ஹிய்யா கொடுக்கலாம் .


       இம்மூன்றிலும் *எல்லா வகையையும்* உழ்ஹிய்யா கொடுக்கலாம் .

       *எருமை மாட்டையும்* உழ்ஹிய்யா கொடுக்கலாம் .




           *வயது வரம்பு*  

           =============     


      *ஒட்டகம்* : *ஐந்து வயது* முழுமை பெற்றிருக்க வேண்டும்.


      *மாடு* : *இரண்டு வயது* முழுமை பெற்றிருக்க வேண்டும்.


       ஆனால் *ஆட்டின் வயதில்* மட்டும் கொஞ்சம் வித்தியாசம் உண்டு.


           *ஹனஃபி மத்ஹப்*:

      *வெள்ளாடாக* இருந்தாலும் *செம்மறி ஆடாக* இருந்தாலும் *ஒரு வருடம்* முழுமை பெற்றிருக்க வேண்டும் .


      அதே நேரத்தில் *செம்மறி ஆடு ஆறுமாதம்* முழுமை அடைந்து *ஒரு வருடத்திற்குண்டான* வளர்ச்சியை பெற்றிருந்தால் அதை உழ்ஹிய்யா கொடுக்கலாம். 



              *ஷாஃபிஈ மத்ஹப்*: 

        *செம்மறி ஆடாக* இருந்தால் *ஒரு வருடமும்*

 *வெள்ளாடாக* இருந்தால் *இரண்டு வருடங்களும்* முழுமை பெற்றிருக்க வேண்டும். 



                *கூட்டு குர்பானி*

                ===============


       *ஆட்டை ஒருவருக்காக* உழ்ஹிய்யா கொடுக்க வேண்டும்.


        ஆனால் *ஒட்டகத்திலும் மாட்டிலும் ஏழு பேர் சேர்ந்து* உழ்ஹிய்யா கொடுக்கலாம் .


       ஏழு பேர் சேர்ந்துதான் கொடுக்க வேண்டும் என்று கட்டாயமில்லை .

      ஏழுக்குக் குறைவானவர்களும் ஒட்டகத்தையும் மாட்டையும் உழ்ஹிய்யா கொடுக்கலாம். 

     ஒரு தனிநபர் ஒட்டகம் மற்றும் மாட்டை உழ்ஹிய்யா கொடுக்கலாம்.


       அந்த ஏழு பங்கில் குழந்தைகளுக்காக கொடுக்கக்கூடிய *அகீகாவையும்* சேர்த்துக்கொள்ளலாம்.



             *பங்கீடு செய்தல்*

             ================


       உழ்ஹிய்யா பிராணியின் மாமிசத்தை *மூன்று பங்குகளாக* பிரித்து வழங்குவது சிறந்தது. 


      ஒரு பங்கு : 

     *தன் குடும்பத்தினற்கு*.  

    

      இன்னொரு பங்கு : 

      *உறவினர்களுக்கு*


       இன்னொரு பங்கு :

       *ஏழை எளிய மக்களுக்கு*


=============================   

        உழ்ஹிய்யா கறியை *முஸ்லிம் அல்லாதவர்களுக்கு கொடுக்கக் கூடாது*.


        *ஏனென்றால் இது முஸ்லிம்களுடைய ஹக்காகும்*


         அக்கம்பக்கத்தில் மாற்றுமத சகோதரர்கள் இருந்து அவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் கடையில் தேவையான கறியை விலைக்கு வாங்கி அவர்களுக்கு வழங்கலாம்.


============================

 


      *உழ்ஹிய்யாவின் நேரம்*:   

      ======================


        *ஹனஃபி மத்ஹப்* :

        ஆரம்பம் :

         *பெருநாள் தொழுகை நடந்ததற்குப் பிறகு*.


        முடிவு :

       *பிறை 12 - மஃக்ரிப் நேரம் வரும் வரை* 

  ( அதாவது சூரியன் மறையும் வரை. ) 


         *ஷாஃபிஈ மத்ஹப்* : 

         ஆரம்பம்:

         *சூரியன் உதித்து 20 நிமிடங்கள் கழித்து - இரண்டு ரக்அத் தொழுகை மற்றும் இரண்டு ஃகுத்பாக்கள் - இதற்குண்டான நேரம் முடிந்ததற்குப்பிறகு*.

     ( தொழுகை நடந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் தொழுகைக்குப் பிறகு உழ்ஹிய்யா கொடுப்பதே சிறந்தது.)


        முடிவு: 

         *பிறை 13 - மஃக்ரிப் நேரம் வரும் வரை*.

         ( அதாவது சூரியன் மறையும் வரை )


        *இரவிலும்* கொடுக்கலாம்.

*பகலிலும்* கொடுக்கலாம் .

        ஆனால் இரவில் கொடுப்பது ( மக்ரூஹ் ) வெறுக்கத்தக்கது.


         *குர்பானி தோலின் சட்டம்*   

         ======================= 

      குர்பானி தோலை *தனக்காக* உபயோகித்துக்கொள்ளலாம்.


      *பிறருக்கும்* கொடுக்கலாம்.   

 (ஏழையாக இருந்தாலும் சரி. செல்வந்தராக இருந்தாலும் சரி.)


      ஆனால் *விற்கக்கூடாது*.  

  

       *அறுப்புக் கூலியாகவும் வழங்கக்கூடாது*.


       *பள்ளிவாசல்* மற்றும் *மத்ரஸாவின்* *கட்டிடப்பணிக்கோ* அல்லது *நிர்வாக செலவிற்கோ* கொடுக்கக்கூடாது. 


       பள்ளிவாசலில் *பைத்துல்மால்* இருந்தால் அதற்கு *கொடுக்கலாம்*.


        பள்ளிவாசலின் *இமாம்* மற்றும் *முஅத்தின் சாகிபுக்கு* கொடுக்கலாம். 

மத்ரஸாவின் *ஆசிரியர்களுக்கும்* *கொடுக்கலாம்*. 

        ஆனால் இவர்களுக்கு *சம்பளம்* அல்லது *போனஸ்* கொடுப்பதற்கு *குர்பானி தோலை பயன்படுத்தக்கூடாது*.


       மத்ரஸாவில் கல்வி பயிலும் *மாணவர்களுக்கு கொடுக்கலாம்*.


       *தகுதியற்ற பிராணிகள்*

       =====================

      *கால்கள் முடமாகி ஊனமுற்றவை*

      *கடுமையான நோய்வாய்ப்பட்டவை* 

       *எலும்பும் தோலுமாய் மெலிந்தவை*

        *கண் குருடாகி போனவை*

       *காது அறுந்து துண்டிக்கப்பட்டவை*


மேற்கூறப்பட்ட பிராணிகளை உழ்ஹிய்யா கொடுப்பது அறவே கூடாது.


   *குறிப்பு*:  

       *கொம்பு முளைக்காத* அல்லது *கொம்பு உடைந்த* பிராணியை உழ்ஹிய்யா கொடுப்பது *கூடும்*.

        *அறுக்கும் ஒழுங்குகள்*

         ===================

          *அறுப்பவர் முஸ்லிமாக இருக்க வேண்டும்* .

         ( *ஆணும்* அறுக்கலாம் *பெண்ணும்* அறுக்கலாம் )


       *கத்தியை கூர்மையாக்கிக் கொள்ள வேண்டும்* .


      *உழ்ஹிய்யா கொடுப்பவரே அறுப்பது சிறந்தது*.


        அறுக்கத் தெரியவில்லையென்றால் பிறர் அறுக்கலாம்.

        அப்போது இவர் அந்த பிராணியை *பார்த்துக்கொண்டிருப்பது* சுன்னத்.


         *அறுப்பதற்கு முன்பாக உழூ செய்துகொள்வது*.

          *கிப்லாவை முன்னோக்குவது*.

        *வஜ்ஜஹ்து வஜ்ஹிய.....*

 *என்பதை ஓதிக் கொள்வது*. 

   (தெரியவில்லை என்றால் பரவாயில்லை.)


         *உழ்ஹிய்யாவின் நிய்யத் செய்துகொள்ள வேண்டும்*.


        *பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்* என்று கூறி அறுக்க வேண்டும்.

        உழ்ஹிய்யா கொடுக்க நாடியவர் *துல்ஹஜ் மாதம் பிறை ஒன்றிலிருந்து உழ்ஹிய்யா கொடுக்கும் வரை* *நகம்* மற்றும் *முடியை* வெட்டாமல் இருப்பது *சுன்னத்தாகும்*.


        வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு இந்த சட்டம் இல்லை .

         உழ்ஹிய்யா கொடுப்பவர் 

*நகத்தையோ* அல்லது *முடியையோ* அகற்றி விட்டால் அதனால் உழ்ஹிய்யாவிற்கு எந்த *பாதிப்பும் இல்லை* .

        ஆனால் இந்த *சுன்னத்தின் நன்மையை* அவர் இழந்து விடுவார் .

                 கவனிக்க

                 ===========

 பல ஹதீஸ்களின் அடிப்படையில் *இறந்து போனவர்களுக்கு உழ்ஹிய்யா* கொடுப்பது நன்மைகளைப் பெற்றுத்தரும் *நற்செயலாகும்*. 

   

         மௌலவி - டாக்டர் 

   M. *ஷைகு அப்துல்லாஹ்* *ஜமாலி* MA ,Ph.D.


   சுன்னத் ஜமாஅத் பேரியக்கம்*   

                      *சென்னை*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள் Part - 2

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள்  part 2 தனித்து இயங்குவதை விட கூட்டு முயற்சி  Team Work நல்ல பலனையும் வெற்றியையும் ...