பாடல் எண் :6
எழுதியவர்: A. முஹம்மது மஃரூஃப்
அண்ணல் நபி உம்மைத் தேடுதே !
ஆனந்தம் கொண்டு ஆரத்தழுவ
ஆவலால் என் மனமும் நாடுதே!
அண்ணல் நபி உம்மைத் தேடுதே !
ஆனந்தம் கொண்டு ஆரத்தழுவ
ஆவலால் என் மனமும் நாடுதே!
அரபு மண்ணில் பிறந்தீர்
அவணி எங்கும் சிறந்தீர்
அகிலமெல்லாம் படைக்குமுன்னே
அவன் ஒளியில் இருந்தீர்
அருட்கொடையே..(2 முறை) திருநபியே
அழகிய முன்மாதிரியே
அடியேன் என் பிழை பொறுக்க
அவனிடம் பரிந்துரைப்பீரே
அண்ணல் நபி உம்மைத் தேடுதே !
ஆனந்தம் கொண்டு ஆரத்தழுவ
ஆவலால் என் மனமும் நாடுதே!
ஆதம் நபி முதலாய்
அனைவரும் முன் மொழிந்தார்
ஆண்டவனை அறியவைக்க
அஹமதவர் வருவார்
ஆதரித்தே..(2 முறை) அரவணைப்பீர்
அவன் பொருத்தம் பெறுவதற்கே
ஆண்டுகள் பல ஆனாலும்
அழிவதில்லை உம் புகழே!
அண்ணல் நபி உம்மைத் தேடுதே !
ஆனந்தம் கொண்டு ஆரத்தழுவ
ஆவலால் என் மனமும் நாடுதே!
வியக்கவைக்கும் மறையின்
விளக்கமென வாழ்ந்தீர்
விரல்தானையே அசைத்து
விண்ணில் நிலவதனைப் பிளந்தீர்
விரும்புகிறேன்…(2 முறை) மனதினிலே
விழியில் உம்மைக் காண்பதற்கே
விண்ணிலேறி விரைந்து சென்றே
விளித்தவனை அடைந்தீரே!
அண்ணல் நபி உம்மைத் தேடுதே !
ஆனந்தம் கொண்டு ஆரத்தழுவ
ஆவலால் என் மனமும் நாடுதே!
எம்பெருமான் நபியே
என் கண்ணின் மணியே
என்னுடைய ஈமான் நீர்
ஏற்றிவைத்த ஒளியே
என்றென்றுமே..(2முறை) உமை மறவா
நினைவுடன் நான் வாழ்வதற்கே
எவனொருவன் படைத்தானோ
அவனிடமே கேட்பேனே!
அண்ணல் நபி உம்மைத் தேடுதே !
ஆனந்தம் கொண்டு ஆரத்தழுவ
ஆவலால் என் மனமும் நாடுதே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்