பாடல்: அல்ஹாஜ் முஹிப்புல் உலமா A.முஹம்மது மஃரூஃப்
ராகம்: சின்னத் தாயவள் தந்த ராசாவே
என்றும் நாயகம் புகழ் தேயாதே!
என்ன பாடினும் தமிழ் ஓயாதே!
என்றும் நாயகம் புகழ் தேயாதே!
என்ன பாடினும் தமிழ் ஓயாதே!
சொல் வளம் தாராயோ,
என் எண்ணத்தில் வாராயோ,
எந்தன் ரப்பே, கவிஞன் நீயோ!
என்றும் நாயகம் புகழ் தேயாதே!
என்ன பாடினும் தமிழ் ஓயாதே!
வார்த்தைகள் யாவும் நீ தர
வார்த்திட மையில் நான் வர
தேன் குரல் கொண்டவர் பாடிட
தேனிசை தென்றல் வீசிட
விண்ணைத் தாண்டியும் இசை கேட்டிட
என்னைக் காதலால் நபி பார்த்திட
ஆசை தீராதோ
என்றும் நாயகம் புகழ் தேயாதே!
என்ன பாடினும் தமிழ் ஓயாதே!
சொல் வளம் தாராயோ,
என் எண்ணத்தில் வாராயோ,
எந்தன் ரப்பே, கவிஞன் நீயோ!
பாரினில் எங்கும் கேட்கணும்
பாடலில் மனமும் ஏங்கணும்
ஆண்டவன் நீயும் தா வரம்
ஆயுள் முழுதும் என் கரம்
நபி நாதரைப் பாட வேண்டுமே
எந்தன் தாய் மொழி தமிழ் போதுமே
சொற்கள் தாராதோ!
என்றும் நாயகம் புகழ் தேயாதே!
என்ன பாடினும் தமிழ் ஓயாதே!
சொல் வளம் தாராயோ,
என் எண்ணத்தில் வாராயோ,
எந்தன் ரப்பே, கவிஞன் நீயோ!
என்ன பாடினும் தமிழ் ஓயாதே!
என்றும் நாயகம் புகழ் தேயாதே!
அருமையான வரிகள் இனிமையான குரல்..! அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக..!!!
பதிலளிநீக்கு