ஒவ்வொரு இல்லமும் இறையில்லமாக
மாறிய காலமிது
இல்லந்தோறும் பிள்ளைகள் கூட
இமாமாய் நிற்கின்றது
குடும்பத்துக்காக கூடுதல் நேரம்
ஒதுக்கும் காலம் இது ....
ஒதுக்கும் காலம் இது
மனம்விட்டுப் பேசி மனைவியும் கணவனும்
மகிழும் நேரமிது
Covid 19 பரவும் நிலையில்
கூட்டம் தேவையில்லை
ஒன்றுகூடல் தேவையில்லை
பரிசுத்தம் இருக்கும் இடத்தில் எந்தத்
தொற்றும் தொடர்வதில்லை
(Covid_19 பரவும் நிலையில் )
வாகன புகையால் வானத்தில் மாசு வரவே இல்லை அம்மா
இப்போ வரவே இல்லை அம்மா
விபத்தில் பலி என்ற பேச்சே இப்போ எங்கே போனதம்மா
பெற்றோர் முன்னால் குழந்தைகள் தினமும்
குர்ஆன் ஓதுதமமா ... குர்ஆன் ஓதுதமமா பாதிப்பு அதிகம் தான் ஆனால் கொஞ்சம் பலனும் இருக்குதம்மா..
பாதிப்பைக் கூட பலனாய் மாற்ற பக்குவம் வேணுமம்மா.. பக்குவம் வேணுமம்மா சோதனை நீங்கி வேதனை மாற பிரார்த்தனை தேவையம்மா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்