24 ஏப்ரல், 2026

ஆபத்தில் சிக்கியவருக்கு அபயம் வேண்டுமா ? அற்புதமான துஆ

 


🤲🤲🤲🤲🤲
🤲🤲🤲🤲🤲

حكاية: قال مالك بن دينار ﵁ خرجت إلى الحج فرأيت طيرا في منقاره رغيف فتبعته فجاء إلى شيخ موثوق وصار يلقمه لقمة لقمة ثم طار وجاء بماء في فمه فسكبه في فم الشيخ فقلت له من أنت قال من الحجاج أخذني اللصوص وربطوني هاهنا فصرت على الجوع خمسة أيام ثم قلت

 *يا من يجيب دعوة المضطر إذا دعاه فأنا مضطر فارحمي*

 فأرسل الله لي هذا الغراب قال مالك فحللته من وثاقه ومضينا .

மாலிக் பின் தீனார் (ரஹ்) கூறினார்கள்: 

நான் ஹஜ் பயணத்திற்கு புறப்பட்டேன். அப்போது ஒரு பறவையின் அலகில் ஒரு ரொட்டி துண்டு இருந்தது. இது எங்கே போகிறது?
அதைப் பின்தொடர்ந்தேன். அது ஒரு கட்டிவைக்கப்பட்ட முதியவரிடம் வந்து, அந்த ரொட்டியை சிறுசிறு துண்டுகளாக அவருக்கு ஊட்டியது. 

பின்னர் அது பறந்து சென்று, தனது அலகில் தண்ணீர் கொண்டு வந்து அந்த முதியவரின் வாயில் ஊற்றியது.

நான் அவரிடம் கேட்டேன்: “நீங்கள் யார்?”

அவர் கூறினார்: “நான் ஹஜ் பயணிகளில் ஒருவர். கள்வர்கள் என்னைப் பிடித்து இங்கே கட்டிவிட்டார்கள். நான் ஐந்து நாட்களாக பசியுடன் இருந்தேன். பின்னர் நான் கூறினேன்:

يَا مَنْ يُجِيبُ دَعْوَةَ الْمُضْطَرِّ إِذَا دَعَاهُ، فَأَنَا مُضْطَرٌّ فَارْحَمْنِي.

 ‘துன்பத்தில் இருப்பவர் உன்னை அழைக்கும் போது அவருக்கு பதிலளிப்பவனே! 
நான் ஒரு துன்பத்தில் இருப்பவன்; என்மேல் இரக்கம் புரிவாயாக.’' 

அப்போது அல்லாஹ் இந்தக் காகத்தை எனக்கு அனுப்பினான்.”

மாலிக் கூறினார்: பின்னர் நான் அவருடைய கட்டுகளை அவிழ்த்து, நாங்கள் இருவரும் தொடர்ந்து சென்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்