26 செப்டம்பர், 2025

ஸலவாத்து சிறப்புகள் - ஆதாரங்கள் - அனுபவங்கள்



فضائل الصلاة على النبي ﷺ - بالأدلة والتجارب

நபிகள் நாயகம் ﷺ அவர்கள் மீது  ஸலவாத்து கூறுவதின் சிறப்புகள் -

ஆதாரங்கள் மற்றும் அனுபவ நிகழ்வுகள்.

1- புனித குர்ஆனிலிருந்து

சர்வவல்லமையுள்ள அல்லாஹ் கூறுகிறான்:

“நிச்சயமாக, அல்லாஹ்வும் அவனது வானவர்களாகிய அமரர்களும்  நபி (ஸல்) அவர்கள் மீது  ஸலவாத்து பொழிகின்றனர்.   விசுவாசிகளே நீங்களும் அவர் மீது ஸலவாத்தும் ஸலாமும் கூறுங்கள், (அல்-அஹ்ஸாப்: 56)

ஹதீஸ்களில்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “யார் என் மீது ஒரு முறை  ஸலவாத்து மொழிகிறாரோ, அல்லாஹ் அவர் மீது பத்து மடங்கு அருள்புரிகிறான் . அவரிடமிருந்து பத்து பாவங்களை அழித்து, அவரது அந்தஸ்தில் பத்து பதவிகளை உயர்த்துவான்.” (அல்-நஸாயி 1297)


"உயிர்த்தெழுதல் நாளில் உங்களில் எனக்கு மிக நெருக்கமானவர் என் மீது அதிக சலவாத்து உரைப்பவர் ஆவார்." (திர்மிதி 484)


உபை இப்னு கஅப் ( ரலி) அவர்கள், நாயகமே உங்கள் மீது ஸலவாத்து ஓதுவதில் என் நேரம் முழுவதையும் அர்ப்பணிக்கட்டுமா? என்று என்று ஆர்வத்துடன் கேட்ட பொழுது,

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நீ அவ்வாறு செய்தால்  உங்கள் கவலைகள் தீர்க்கப்படும், உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படும்." (திர்மிதி  2457)


2- மேதைகளின் அறிக்கைகள், வாக்குமூலங்கள் :

இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தி (அல்லாஹ் அவர் மீது கருணை காட்டட்டும்) அவர்கள் கூறினார்கள்:

"  எனது தேவைகளை நிறைவேற்றுகிற ஒரு மந்திர திறவுகோலாக நபியின் மீது ஸலவாத்து சொல்லுவதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.” 

“எனக்கு எந்த ஒரு நெருக்கடி பிரச்சினை என்றாலும் ஸலவாத்து சொல்வதை வழக்கமாக்கினேன் என்றால் உடனடி தீர்வு கிடைக்காமல் இருந்ததில்லை.”

இமாம் அஷ்-ஷாஃபிஈ (ரஹ்) அவர்களின் கவிதைகள்

இவ்வுலகில் எனக்கு ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டால், நான் உடனே செல்வது ஸலவாத்து தான். 

3- சமகால அனுபவங்கள் (உண்மை நிகழ்வுகள்)

சிரியாவிலிருந்து ஒரு மூதாட்டியின் வாக்குமூலம்: 

85 வயதுடைய நல்லொழுக்கமுள்ள ஒரு பாட்டி. அந்த பாட்டியிடம் ஒரு சகோதரி பேட்டி எடுத்தாள்:

நீங்கள் 85 வயதை அடைந்த பிறகும் உங்களிடம் சில அதிசயங்களை பார்க்கிறோம்.

நீங்கள் கண்ணாடி அணியாமலே குர்ஆனை சரளமாக ஓதுகிறீர்கள். மற்றவரின் உதவி இல்லாமலேயே உங்கள் அனைத்து தேவைகளையும் நீங்களாகவே பூர்த்தி செய்கிறீர்கள். உங்கள் முகத்தில் ஒரு ஆச்சரியமான பிரகாசம் தென்படுகிறது இதன் ரகசியம் என்ன?

அவள் பதிலளித்தாள்:

நான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீது இந்த வார்த்தைகளை வைத்து ஸலவாத்து அதிகம் அதிகம் ஓதுகிறேன்: 

“இறைவனே,  நீ திருப்தி படுகிற அளவுக்கு, வானங்கள் பூமி நிறைய, உன் தூதர் முஹம்மது நபி ﷺ அவர்கள் மீது ஸலவாத்தும் சாந்தியும் நிரப்புவாயாக!”

நான் அதை பல முறை மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.

நான் ஒவ்வொரு நாளும் சூரா யாசீன், சூரா அல்-பகரா மற்றும் சூரா அத்-துகான் ஆகியவற்றை ஓதி வருகிறேன்.

அதன் அபிவிருத்தி தான் நீங்கள் பார்க்கிற அதிசயம் என்றாள் அந்த மூதாட்டி.

2- கடனில் மூழ்கிய ஒரு நபர்:

நபி (ஸல்) அவர்கள் மீது தினமும் 1,000 ஸலவாத்துகளை தவறாமல்  சமர்ப்பணம் செய்தார். ஆச்சரியமான முறையில் அவரது கடன்களெல்லாம் தீருகிற அளவுக்கு இறைவன் அவருக்கு வசதி அளித்தான். 

(சில இஸ்லாமிய பத்திரிகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.)

3- விமானப் பயணி:

விமானம் பழுதடைந்தபோது, மற்ற பயணிகள் எல்லாம் பதற்றத்தில் கத்திக் கதறிக் கொண்டிருந்த பொழுது இந்த பயணி மாத்திரம் பதட்டம் இல்லாமல் அமைதியாக அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அதிகமான சலவாத்துகளை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார். 

சிறிது நேரத்தில் பழுது தானாகவே சரியாகி பத்திரமாக தர இறங்கியது. 

4- புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்:

மருத்துவ சிகிச்சைகள் பெரிய பலனைத் தராமல் மருத்துவர்கள் கைவிட்ட பொழுது வர் நம்பிக்கை இழக்காமல், மனவலிமையுடன் நபி (ஸல்) அவர்கள் மீது தினமும் 1,000  ஸலவாத்துகளை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தார், ஆச்சரியமான முறையில் அவரது நிலை மேம்பட்டது. அதன் பிறகு டெஸ்ட் செய்து பார்த்த பொழுது இயல்பு நிலை திரும்பி இருந்தது. 

(நவீன தஃவா ஏடுகளில் வந்த உண்மை தகவல்)

6- மினாவில் தொலைந்து போன யாத்ரீகர் ஒருவர் லட்சக்கணக்கான கூட்டத்திற்கு மத்தியில் தன் கூட்டத்தை தேடி அலைந்தார். உடனே ஸலவாத்தை கையில் எடுத்தார். தொடர்ந்து ஓதிக் கொண்டே இருந்தார் திடீரென யாரோ ஒருத்தர் வந்து அவரை அழைத்துச் சென்று அவருடைய கூட்டத்தாருடன் சேர்த்து விட்டு மறைந்து விட்டார். 

6- வேலை தேடுபவர்: அவர் நபி (ஸல்) அவர்களிடம் தினமும் 100  ஸலவாத்து ஓதுவதை வழக்கமாக கொண்டார் அவர் எதிர்பார்த்த நல்ல வேலை வாய்ப்பு கிடைத்த அனுபவத்தை அவர் சொல்லுகிறார்.

சுருக்கமாக

ஸலவாத்து ஓதினால்,

  • பாவங்கள் மன்னிக்கப்படும்
  • கவலைகள் நீங்கும்
  • கஷ்டங்கள் மாறும்
  • அந்தஸ்து உயரும்
  • அல்லாஹ்வுடைய பிரத்திகமான அருள் அவருக்கு கிடைக்கும் என்கிற கருத்து குர்ஆன் வசனங்களிலும் ஹதீஸ் நபி மொழிகளிலும் ஆதாரத்துடன் கிடைக்கின்றன. 

நடப்பு நிகழ்வுகளும் அனுபவபூர்வமான உண்மைகளும் அரபு பத்திரிகைகளிலும் இணையதளங்களிலும் ஆயிரக்கணக்கில் கொட்டி கிடக்கின்றன. அதில் ஒரு சில நிகழ்வுகளை மாத்திரம் இங்கு மொழிபெயர்த்து சொல்லப்பட்டிருக்கிறது.

மேற்கூறிய குறிப்புகள் அனைத்திற்குமான அரபு மூலம்

١- الأدلة من القرآن الكريم والحديث الشريف

قال الله تعالى:
﴿إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ ۚ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا﴾ (الأحزاب: 56)

ومن الأحاديث:
قال النبي ﷺ: «من صلّى عليّ صلاةً واحدة صلّى الله عليه بها عشرًا، وحطّ عنه عشر خطيئات، ورفع له عشر درجات» (رواه النسائي 1297).

«إنَّ أقربَكم منِّي يومَ القيامةِ أكثَرُكم عليَّ صلاةً»

(رواه الترمذي، رقم 484

: أبي بن كعب
وقال ﷺ: «إذًا تُكفى همّك ويُغفر لك ذنبك» (رواه الترمذي 2457).

٢- أقوال العلماء

قال الإمام جلال الدين السيوطي رحمه الله في بعض رسائله:

«جرَّبتُ الصلاة على النبي ﷺ فوجدتُها مفتاحًا لقضاء الحوائج، وما لازمتُها في أمرٍ إلا ورأيتُ الفرجَ عاجلًا


شعر الإمام الشافعي رحمه الله

قال الإمام محمد بن إدريس الشافعي رحمه الله في أبيات مشهورة:


إذا ضاقتْ بي الدنيا وما رحُبتْ

ناديتُ: يا سيِّدي يا خيرَ مَبعوثِ

فصلِّ يا ربِّ على المختارِ ما بَلَغَتْ

حَياتيَ الروحُ أو أبقى بتنفيسِ

٣- تجارب معاصرة (قصص واقعية)


قصة في فضل الصلاة على النبي صلى الله عليه وسلم من سوريا 

١- أخت فاضلة عمرها 85 عام 

سألتها أحد الأخوات ما هو سر هذا النور في وجهك ، وأنك بلغتي من العمر ما بلغتي 

وأنت تقرأين القرآن بدون الحاجة إلى نظارات وتقضي حوائجك دون حاجة أحد 

فأجابتها وقالت :

أني أصلي على رسول الله صلى الله عليه وسلم بهذه الصيغة :

(اللهم صل وسلم على نبينا محمد ملء السموات والأرض حتى يرضى الله)

وأكثر منها بأعداد كبيرة ، وأقرأ سورة يس   كل يوم ، وسورة البقرة والدخان 

هذه بركات الصلاة على حبيبنا محمد صلى الله عليه وسلم فأكثروا من الصلاة عليه 



٢- رجل غارق في الديون: بعد المداومة على 1000 صلاة على النبي ﷺ يوميًا، فتح الله له أبواب الرزق حتى سدد دينه. (ذكر في بعض المجلات الإسلامية).

٣-  مسافر في طائرة: عندما تعطلت الطائرة أخذ يكثر من الصلاة على النبي ﷺ حتى هبطت بسلام. (قصص مروية في خطب ودروس معاصرة).

٤ - امرأة مريضة بالسرطان: لازمت 1,000 صلاة على النبي ﷺ يوميًا، ثم تحسنت حالتها وظهرت نتائج الفحوصات سليمة. (مذكور في نشرات دعوية حديثة).

٥ - حاج تائه في منى: قرأ الصلاة على النبي ﷺ حتى دلّه رجل غريب على مكان حملته، فلما التفت لم يجده. (قصة منتشرة بين الحجاج، نُشرت في مجلات دعوية).

٦ - باحث عن عمل: واظب على 100 صلاة على النبي ﷺ يوميًا، فجاءه عرض عمل لم يكن في حسبانه. (قصص منتشرة في كتب الرقائق المعاصرة).


6 கருத்துகள்:

  1. அல்ஹம்துலில்லாஹ் மிகவும் பயனுள்ள குறிப்புகள்
    அல்லாஹ் உங்களுக்கு ஈருலகிலும் வெற்றியை தொடர்ந்து தருவானாக

    பதிலளிநீக்கு
  2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ உங்களுடைய ஒவ்வொரு பதிவுகளும் பயனுள்ளதாக இருக்கிறது அல்ஹம்துலில்லாஹ் ஓதுவதற்கும் படிப்பதற்கும் ஆர்வமாக இருக்கிறது அல்லாஹுத்தஆலா இம்மை மறுமை வெற்றிகளை அல்லாஹ் உங்களுக்கு நிரந்தரமாக ஆக்கி தந்தருள் புரிவானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லது. அல்ஹம்து லில்லாஹ். உங்கள் துஆவிற்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  3. சுபஹானல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு மேலும் மேலும் இதுமாதிரி விசயங்களை மக்களுக்கு நல்ல விசயங்களை தெரிவிக்க உங்களுக்கு உடல் வலிமையை தந்துஅருள் புரிவானாஹ ஆமீன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். உடல்வலிமையும் மணவலிமையும்தான் அல்லாஹ்விடம் கேட்கிறேன் தங்களுடைய துஆவிற்கு மிக்க நன்றி

      நீக்கு

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்