29 செப்டம்பர், 2025

இழந்தவனுக்கும் மாளிகை ! அடைந்தவனுக்கும் மாளிகை!!

 வறுமை வந்தால் வாடாதே! வசதி வந்தால் ஆடாதே !!


حكاية: قال في العقائق أيضا: 

أن ملكين نزلا من السماء أحدهما بالمشرق والآخر بالمغرب ثم رجعا إلى آخر النهار 

فالتقيا في السماء فقال أحدهما لصاحبه أين كنت قال في المشرق أرسلي ربي إلى كنز رجل فخسف به الأرض 

فقال الآخر وأنا أرسلني ربي بأمر عجيب أمرني أن اخرج الكنز من قرار الأرض وأجعله بدار رجل فقير بالمغرب ليس له درهم ولا دينار 

فسمعهما رضوان خازن الجنة قال قصتي أعجب من ذلك إن الله تعالى أمرني أن أذهب إلى دار ذلك الفقير الذي صار الكنز في داره وأعد الكنز كم درهم وكم دينار ثم أمرني أن أبني قصورا في الجنة بعدد كل درهم ودينار لصاحب الكنز والفقير 


فقال الملكان ربنا أطلعنا على هذه الكرامة التي كرمت بها صاحب الكنز والفقير 

فقال الله تعالى لما خسف الكنز قال صاحبه الحمد لله الذي جعلني راضيا بقدره وأما الفقير فلم يفرح بالكنز بل قال إن في خزانته ما لا يحوجني إلى غيره



இரண்டு வானவர்கள் வானத்திலிருந்து இறங்கினர், ஒருவர் கிழக்கிலும் மற்றவர் மேற்கிலும். பின்னர் அவர்கள் நாள் முடிவில் திரும்பினர். அவர்கள் வானத்தில் சந்தித்தனர். அவர்களில் ஒருவர் தனது தோழரிடம், "நீ எங்கே இருந்தாய்?" என்று கேட்டார், அவர், "கிழக்கில், ஒரு மனிதனின் புதையலை நோக்கி என்னை இறைவன் அனுப்பினான். பூமி அந்தப் புதையலை விழுங்கியது. 


மற்றவர், "என் இறைவன் என்னை ஒரு அற்புதமான கட்டளையுடன் அனுப்பினான். பூமியின் ஆழத்திலிருந்து புதையலைப் பிரித்தெடுத்து, மேற்கில் ஒரு திர்ஹமோ அல்லது ஒரு தினார் கூட இல்லாத ஒரு ஏழையின் வீட்டில் அந்தப் புதையலை வைக்க கட்டளையிட்டான்” என்றார். 


சொர்க்கத்தின் பாதுகாவலரான ரிள்வான் அவற்றைக் கேட்டு, "என் கதை அதை விட அற்புதமானது. மிக உயர்ந்த அல்லாஹ், புதையல் யாருடைய வீட்டில் இருக்கிறதோ அந்த ஏழையின் வீட்டிற்குச் செல்லும்படி எனக்குக் கட்டளையிட்டான். நான் புதையலை எண்ணினேன், அதில் எத்தனை திர்ஹம்கள் மற்றும் எத்தனை தினார்கள் உள்ளன. 

பின்னர் அந்த எண்ணிக்கைக்கு சமமான மாளிகைகளை  சொர்க்கத்தில் புதையலின் உரிமையாளருக்கும் ஏழைக்கும் கட்டும்படி எனக்குக் கட்டளையிட்டான்." 


இரண்டு வானவர்களும் ஆச்சரியத்தில், "எங்கள் இறைவா, புதையலின் உரிமையாளருக்கும் ஏழைக்கும் நீர் அளித்த இந்த அற்புதத்தை  எங்களுக்கு விளக்கு" என்று கூறினர். 


அல்லாஹ் கூறினான்: "புதையல் விழுங்கப்பட்டபோது, ​​அதன் உரிமையாளர் என்னைப் பழிக்கவில்லை, 'தன் விதி குறித்து என்னைத் திருப்தி கொள்ள வைத்த  அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்' என்று கூறினார். 

ஏழை மனிதனைப் பொறுத்தவரை, அவர் திடீரென புதையல் வந்ததால்  ஆனந்த கூத்தாடவில்லை; மாறாக, இதுவரைக்கும் அவனல்லாத வேறு யாரிடத்திலும் என்னை தேவையாகாமல் வைத்திருக்கிறானே அதுவே அவனது பெரிய கருவூலம் தான் என்று எனக்கு நன்றி சொன்னார். 


—--


எனவே இருவருக்கும் மறுமையில் சொர்க்கத்தில் அந்த தீனார் திர்ஹம் எத்தனையோ அத்தனை அளவுக்கு வசந்த மாளிகை ! 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்