05 டிசம்பர், 2012

தவளை தரும் நன்மைகள்

டெங்கு


தவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் கொசுக்கள் கட்டுக்கடங்காமல் பெருகி டெங்கு உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவி வருவதாக தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொசுக்களால் பரவும் டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்கள் இந்திய முழுவதும் வேகமாக பரவி வருகின்றன. இதில் டெங்கு காய்ச்சலுக்கு ஏராளமானவர்கள் பலியாகிவிட்டனர். ஏழை, பணக்காரர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் டெங்கு பரவி வருகிறது.
இந்த அளவுக்கு டெங்கு பரவியதற்கு கரணம், ஏடிஸ் ஏஜிப்டி ரக கொசுக்கள் கட்டுகடங்காமல் பெருகியதுதான். இந்த நிலையில் ஆசிய டைகர் எனப்படும் புதிய ரக கொசுக்கள் டெங்குவை பரப்புவது கண்டுபிடிகபட்டுள்ளது. ஏடிஸ் ஏஜிப்டி ரக கொசுக்கள் வீட்டுக்குள் தேங்கி இருக்கும் தண்ணீரில் உருவாகும். ஆனால் ஆசிய டைகர் ரக கொசுக்கள் திறந்த வெளியில் தேங்கி இருக்கும் தண்ணீரில் முட்டையிட்டு பெருகுகிறது.

இதுபோல கொசுக்கள் அதிகமாக உற்பத்தி ஆவதற்கு காரணம் தவளைகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்ததுதான் என்று சுற்றுசுழல் ஆர்வலர்கள் கண்டுபிடித்துள்ளனர். தவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் கொசுக்கள் அதிகமாக பெருகிவருகிறது. தவளைகள் அதிகமாக இருந்தால் தண்ணீரில் மிதக்கும் கொசுக்களின் லார்வாக்களை அவை சாப்பிட்டுவிடும். அண்மையில் டெல்லியில் நடத்திய ஆய்வில் இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் தவளைகளே இல்லை என்று தெரியவந்துள்ளது. இதனால், தவளைகளை காப்பாற்ற வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நபி (ஸல்) அவர்கள் தவளையை கொள்வதை தடை செய்தார்கள்
நூல்:தாரமீ(1914)
தவளைகள் மனிதர்களுக்கு ஆற்றிய நன்மைகளை பட்டியலிடுகிறது பின்வரும் நபிமொழிகள்:

عن عائشة أن النبي صلى الله عليه و سلم قال كانت الضفدع تطفىء النار عن إبراهيم وكان الوزغ ينفخ فيه فنهي عن قتل هذا وأمر بقتل هذا
 عَنْ كَثِيرِ بْنِ عُبَيْدٍ قَالَ: إِنِّي لَجَالِسٌ عِنْدَ عَائِشَةَ إِذْ رَأَتْ وَزَغًا فَقَالَتْ: اقْتُلِ اقْتُلْ. قِيلَ: مَا شَأْنُهُ؟ فَقَالَتْ: إِنَّهُ كَانَ يَنْفُخُ النَّارَ يَوْمَ احْتَرَقَ بَيْتُ الْمَقْدِسِ وَكَانَ الضِّفْدَعُ يُطْفِئُ "
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عُثْمَانَ الْقُرَشِيِّ - رَضِيَ اللَّهُ عَنْهُ -، «أَنَّ طَبِيبًا سَأَلَ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - عَنْ الضِّفْدَعِ يَجْعَلُهَا فِي دَوَاءٍ، فَنَهَى عَنْ قَتْلِهَا» . أَخْرَجَهُ أَحْمَدُ، وَصَحَّحَهُ الْحَاكِمُ. وَأَخْرَجَهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيُّ" قال قَالَ الْبَيْهَقِيُّ: هُوَ أَقْوَى مَا وَرَدَ فِي النَّهْيِ عَنْ قَتْلِ الضِّفْدَع. وَأَخْرَجَ مِنْ حَدِيثِ ابْنِ عُمَرَو: «لَا تَقْتُلُوا الضَّفَادِعَ فَإِنَّ نَقِيقَهَا تَسْبِيحٌ وَلَا تَقْتُلُوا الْخُفَّاشَ فَإِنَّهُ لَمَّا خَرِبَ بَيْتُ الْمَقْدِسِ قَالَ: يَا رَبِّ سَلِّطْنِي عَلَى الْبَحْرِ حَتَّى أُغْرِقَهُمْ» قَالَ الْبَيْهَقِيُّ: إسْنَادُهُ صَحِيحٌ.
وَعَنْ أَنَسٍ «لَا تَقْتُلُوا الضَّفَادِعَ فَإِنَّهَا مَرَّتْ عَلَى نَارِ إبْرَاهِيمَ فَجَعَلَتْ فِي أَفْوَاهِهَا الْمَاءَ وَكَانَتْ تَرُشُّهُ عَلَى النَّارِ».
عند عبدالرزاق أيضا 8393 - قال أخبرنا أبو سعيد الشامي عن أبان عن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه و سلم أمنوا الضفدع فإن صوته الذي تسمعون تسبيح وتقديس وتكبير إن البهائم استأذنت ربها في أن تطفىء النار عن إبراهيم فأذن للضفادعفتراكبت عليه فأبدلها الله بحر النار الماء.


  • நபி இப்றாஹீம் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் நெருப்பில் தூக்கி வீசப்பட்டபொழுது அந்த நெருப்பை அணைக்க உதவி செய்துள்ளது.
  • பைத்துல் முகத்தஸ் தீக்கிரையாக்கப்பட்டபொழுது நெருப்பை அணக்க முயற்சித்துள்ளது.
  • அதிகமாக இறைவனைத் துதிக்கிற உயிரினம்.
  • ஒரு மருத்துவர் மருந்துக்காக அதைக் கொல்ல அனுமதி வேண்டியபொழுது கூட மாநபி அனுமதிக்கவில்லை. காரணம் இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத டெங்கு போன்ற கொடிய நோய்களின் கொசுக்களைக்கூட தவளைகள் தடுக்கும் என்பதை ஏந்தல் நபி அப்போதே புரிந்திருந்தார்களோ என்னவோ.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவளைகளை கொள்வதை தடை செய்துள்ளார்கள் என்று மேற்கொண்ட ஆதாரப்பூர்வமான செய்தி தெளிவுபடுத்துகின்றது.

அப்படியானால் தவளைகளின் காரணமாக ஏற்படும் நன்மைகளை கருத்தில் கொண்டுதான் அல்லாஹுடைய தூதர் அவர்கள் தவளையைக் கொள்ள வேண்டாம் என்று கட்டளையை பிறப்பித்துள்ளார்கள்.
தவளைகளால் எப்படிப்பட்ட நன்மைகள் விளைகின்றன என்பதை அப்போதுள்ள மக்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் தற்போது நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது.இஸ்லாம் இறைவனின் மார்க்கம்தான் என்பதை மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் உண்மைபடுத்துகின்றன.

சகோதரர்களே! இந்த பதிவைப் பற்றி உங்கள் கருத்தை இங்கே இடலாமே!

6 கருத்துகள்:

  1. maasha allah!

    arputham!

    athisayam!

    allaahu akpar!

    mikka nantri !
    asarath!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சீனி..
      உங்கள் வருகைக்கும்
      கருத்துரைக்கும்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. வ அலைக்குமுஸ் ஸலாம்.
      மனம் திறந்து பாராட்டும் மார்க்க அறிஞரே!
      நெஞ்சார்ந்த நன்றி தங்களுக்கு.

      நீக்கு
    2. முதலாவது ஹதீஸ் எந்த கிரந்தத்தில் உள்ளது ? எத்தனாவது நம்பர் ஹதீஸ் ?

      நீக்கு
  3. assalamu alaikkum ! hazrath ungkal bayankal arumiyaha ullathu,zazakallahu haira, by thayeep dawoody.erode, cell-9688708337.

    பதிலளிநீக்கு

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள் Part - 2

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள்  part 2 தனித்து இயங்குவதை விட கூட்டு முயற்சி  Team Work நல்ல பலனையும் வெற்றியையும் ...