03 டிசம்பர், 2025

பெற்றோரின் நண்பர்களைக் கூட மதித்தல் - நட்பு பாராட்டுதல்

 

باب في بر الوالدين

قال الله عز وجل {وَقَضَى رَبُّكَ أَلاَّ تَعْبُدُواْ إِلاَّ إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلاَهُمَا فَلاَ تَقُل لَّهُمَآ أُفٍّ وَلاَ تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلاً كَرِيمًا}

وقال {وَوَصَّيْنَا الإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا}

قَالَ : سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم : أَيُّ الْعَمَلِ أَحَبُّ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ ؟ قَالَ : الصَّلاةُ لِوَقْتِهَا ، قُلْتُ ، ثُمَّ أَيٌّ ؟ قَالَ : بِرُّ الْوَالِدَيْنِ ، قُلْتُ : ثُمَّ أَيٌّ ؟ قَالَ : الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ ، قَالَ : وَحَدَّثَنِي بِهَذِهِ وَلَوِ اسْتَزَدْتُهُ لَزَادَنِي

பெற்றோர்களுக்கு நற்செயல் புரிவதற்கான باب (அத்தியாயம்)

அல்லாஹ் கூறுகிறான் 

﴿ وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا ۚ إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُلْ لَهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا ﴾

 

"உங்கள் இறைவன் ஆணையிட்டான்: அவரைத் தவிர வேறு யாரையும் வணங்க வேண்டாம், பெற்றோருக்குச் நன்மை செயுங்கள். அவர்களில் ஒருவர் அல்லது இருவரும் உங்கள் அருகில் முதுமையடைந்தால், அவர்களுக்கு 'உஃப்' என்றும் கூறாதீர்கள்; அவர்களைத் தள்ளிப் பேசாதீர்கள்; அவர்களிடம் நன்றாகவும் கௌரவமாகவும் பேசுங்கள்."

மற்றொரு இடத்தில்:

﴿ وَوَصَّيْنَا الإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا ﴾

 

"நாம்  மனிதனை பெற்றோருக்கு நன்மை செய்யும்படி கட்டளையிட்டோம்."


ஹதீஸ்

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) கூறினார்கள் :

நான் நபி ﷺ அவர்களிடம் கேட்டேன்:
“அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்த செயலெது?”
நபி ﷺ பதிலளித்தார்கள் : “தொழுகையை அதன் நேரத்தில் நிறைவேற்றுதல்.”
நான் கேட்டேன்: “அதற்குப் பிறகு எது?”
அவர்கள்  ﷺ கூறினார்கள் : “பெற்றோருக்கு நன்மை செய்வது.”
நான் கேட்டேன்: “அதற்குப் பிறகு எது?”
அவர்கள்  ﷺ கூறினார்கள் : “அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்தல்.”

அப்துல்லாஹ் (ரழி) மேலும் கூறினார்:
“நான் தொடர்ந்து கேட்டிருந்தால், நபி ﷺ அவர்கள் தொடர்ந்து சொல்லி இருப்பார்கள்.”

ஆதாரம்:
 — ஸஹீஹ் புகாரி


عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ رَجُلٌ : يَا رَسُولَ اللَّهِ ، مَنْ أَحَقُّ مِنِّي بِحُسْنِ الصُّحْبَةِ ؟ قَالَ : أُمُّكَ ، قَالَ : ثُمَّ مَنْ ؟ قَالَ : ثُمَّ أُمُّكَ ، قَالَ : ثُمَّ مَنْ ؟ قَالَ : ثُمَّ أَبُوكَ وَرَوَاهُ وُهَيْبُ بْنُ خَالِدٍ ، عَنِ ابْنِ شُبْرُمَةَ ، وَقَالَ فِي الْحَدِيثِ : يَا نَبِيَّ اللَّهِ ، مَنْ أَبَرُّ ؟ قَالَ : أُمَّكَ قَالَ : ثُمَّ مَنْ ؟ قَالَ : أُمَّكَ ، قَالَ : ثُمَّ مَنْ ؟ قَالَ : أُمَّكَ ، قَالَ : ثُمَّ مَنْ ؟ قَالَ : أَبَاكَ


தாயின் நிலை பெற்றோரில் உன்னதமானது

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

ஒருவர் நபி ﷺ அவர்களிடம் கேட்டார்:

“அல்லாஹ்வின் தூதரே ﷺ!
நான்  நன்றாக நட்புறவு பேண  வேண்டியவர்கள் யார்?”

அதற்கு நபி ﷺ:    “உன் தாய்”

அவர் மீண்டும் கேட்டார்:  “அதற்குப் பிறகு யார்?”

நபி ﷺ:  “உன் தாய்”

அவர் மூன்றாவது முறை கேட்டார்:  “அதற்குப் பிறகு யார்?”

நபி ﷺ: “உன் தாய்”

அவர் நான்காவது முறை கேட்டார்: “அதற்குப் பிறகு யார்?”

நபி ﷺ: “உன் தந்தை”

இந்த ஹதீஸை வுஹைபு இப்னு காலித் அவர்கள் இப்னு ஷுப்ருமா அவர்களிடமிருந்து வர்ணிக்கும்போது, இவ்வாறு கூறப்பட்டுள்ளது:

அந்த நபர்:

“அல்லாஹ்வின் நபியே ﷺ! நான் யாருக்கு அதிகமாக சேவை செய்ய வேண்டும்?”

அதற்கு நபி ﷺ பதில்:

“உன் தாய்”
“பின்னர் யார்?” – “உன் தாய்”
“பின்னர் யார்?” – “உன் தாய்”
“பின்னர் யார்?” – “உன் தந்தை”

ஆதாரம்:
(ஸஹீஹ் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இந்த ஹதீஸ்:

📌 தாய் மேற்கொள்ளும் கஷ்டம் — கர்ப்பம், பிரசவம், பாலூட்டல், வளர்ப்பு — காரணமாக
📌 பெற்றோர்களில் தாயின் உரிமை மிக உயர்ந்தது என்பதை நிரூபிக்கிறது.


عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ، أَنَّ رَجُلا مِنَ الأَعْرَابِ لَقِيَهُ بِطَرِيقِ مَكَّةَ فَسَلَّمَ عَلَيْهِ عَبْدُ اللَّهِ ، وَحَمَلَهُ عَلَى حِمَارٍ كَانَ يَرْكَبُهُ ، وَأَعْطَاهُ عِمَامَةً كَانَتْ عَلَى رَأْسِهِ ، فَقَالَ ابْنُ دِينَارٍ : فَقُلْنَا لَهُ : أَصْلَحَكَ اللَّهُ ، إِنَّهُمُ الأَعْرَابُ يَرْضَوْنَ بِالْيَسِيرِ ، فَقَالَ عَبْدُ اللَّهِ : إِنَّ أَبَا هَذَا كَانَ وُدًّا لِعُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ ، وَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ، يَقُولُ : إِنَّ أَبَرَّ الْبِرِّ صِلَةُ الْوَلَدِ أَهْلَ وُدِّ أَبِيهِ ،


 وَفِي رِوَايَةٍ ، عَنِ ابْنِ عُمَرَ أَيْضًا ، أَنَّهُ إِذَا خَرَجَ إِلَى مَكَّةَ كَانَ لَهُ حِمَارٌ يَتَرَوَّحُ عَلَيْهِ إِذَا مَلَّ رُكُوبَ الرَّاحِلَةِ ، وَعِمَامَةٌ يَشُدُّ بِهَا رَأْسَهُ ، فَبَيْنَمَا هُوَ يَوْمًا عَلَى ذَلِكَ الْحِمَارِ إِذْ مَرَّ بِهِ أَعْرَابِيٌّ فَقَالَ ابْنُ عُمَرَ : أَلَسْتَ ابْنَ فُلانٍ ؟ قَالَ : بَلَى ، فَأَعْطَاهُ الْحِمَارَ ، فَقَالَ : ارْكَبْ هَذَا ، وَالْعِمَامَةَ ، وَقَالَ : اشْدُدْ بِهَا رَأْسَكَ ، فَلَمَّا أَدْبَرَ الأَعْرَابِيُّ ، قَالَ لَهُ بَعْضُ أَصْحَابِهِ : كَانَ هَذَا يَرْضَى بِدِرْهَمٍ أَوْ دِرْهَمَيْنِ ،

பெற்றோரின் நண்பர்களுடன் நன்றாக நடந்து கொள்ளுதல் 

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்:

மக்கா வழியில் ஒரு கிராமவாசியை  அவர்கள் சந்தித்தனர்.
அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அவரை நோக்கி சலாம் கூறினர்.
அவர்கள் தாங்களே சவாரிசெய்து கொண்டிருந்த கழுதைப்பின்னே அவர் ஏறிக் கொள்ளும்படி கொடுத்தார்கள்.
தம் தலையில் இருந்த தலைப்பாகையை அவருக்கு அளித்தார்கள்.

இப்னு தீனார் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்:

நாங்கள் அவரிடம் கேட்டோம்: “அல்லாஹ் உங்களை நல்ல நிலையில் வைத்தருளட்டும்!
கிராமவாசிகள் குறைவானதிலேயே திருப்தி அடையும் மக்கள்.
இவ்வளவு அதிகம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?”

அதற்கு அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்:

“இந்த மனிதரின் தந்தை,
என் தந்தையான உமர் இப்னு அல்கத்தாப் (ரழி) அவர்களுடைய நண்பர் ஆவார்.
நான் அல்லாஹ்வின் தூதர் ﷺ கூறக் கேட்டேன்:

‘பரிபூரணமான برّ (நன்மை) என்பது —
ஒரு பிள்ளை , தன் தந்தையின் நண்பர்களுடனும்  நன்றாக நடந்து கொள்வதாகும்.’


மற்றொரு அறிவிப்பில் :

இப்னு உமர் (ரழி) அவர்கள் மக்காவுக்கு சென்றால்:

• சவாரிக்காக ஓர் ஒட்டகமும்
• ஓய்வுக்காக ஒரு கழுதையும்
• தலையில் கட்டிக் கொள்ள ஒரு தலைப்பாகையும் வைத்துக் கொள்வார்கள்.

ஒரு நாள் அவர்கள் அந்த கழுதையில் இருந்தபோது
ஒரு கிராமவாசி  அங்குசென்றார்.
அப்துல்லாஹ் (ரழி) கேட்டார்கள்:

“நீ இன்னாரின்  மகனல்லவா ?”

அவர்: “ஆம்” என்றார்.

அப்துல்லாஹ் (ரழி) உடனே:

• அந்த கழுதையை அவருக்குக் கொடுத்து — “இதில்  ஏறிக்கொள்வீராக” என்றும்
• தமது தலைப்பாகையைக் கொடுத்து — “இதை உம் தலையில் கட்டிக்கொள்வீர் ” என்றும் கூறினர்.

அந்த கிராமவாசி  திரும்பிச் சென்றபோது
அவரின் தோழர்கள் (சஹாபாக்கள்):

“அவருக்கு ஒரு அல்லது இரண்டு திர்ஹம் கொடுத்திருந்தால் போதும் அல்லவா?” என்று கூறினர்.

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்:

“நான் அல்லாஹ்வின் தூதர் ﷺ கூறுவது கேட்டேன்:”

“மிகவும் உயர்ந்த நன்மை (برّ) என்பது
ஒரு மனிதன், அவன் தந்தையுடன் நெருக்கம் கொண்டவர்களுடன்
தந்தை மறைந்த பிறகும் தொடர்பு வைத்திருப்பதே.”


நபி ﷺ கூறினார்கள் :

“உன் தந்தையின் நட்பை காப்பாற்று; (அதாவது தந்தையின் நண்பர்களை மதித்து நட்பு பாராட்டு!)
அதைத் துண்டிக்காதே;
அப்படிச் செய்தால் அல்லாஹ் உன் பிரகாசத்தை அணைத்துவிடுவான்.”


இன்றைய நடைமுறை செயல்கள்

✔ தந்தை-தாயின் நண்பர்கள் வரும்போது மரியாதையாக நடத்தல்
✔ அவர்களுக்கு உதவுதல், விசாரித்தல்
✔ அவர்களை இகழாமல், புறக்கணிக்காமல் இருத்தல்
✔ பெற்றோருக்காக நற் செயல்கள் தொடர்வது



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்