10 ஜனவரி, 2026

இஸ்லாமியப் பார்வையில் இன்சூரன்ஸ், கடன், சீட்டு

 



இஸ்லாமிய பார்வையில் காப்பீடு, கடன், சீட்டு

மௌலவி அல்ஹாஃபிழ் அல்ஹாஜ் A. சதக்கத்துல்லாஹ் மஸ்லஹி ஃபாஜில் காசிமி 

இமாம், ஜாமியா பள்ளிவாசல், தூத்துக்குடி.

—------------

அறிமுகம்

التأمين: هو عقدٌ يلتزم فيه المؤمِّنُ بدفع مبلغٍ معين للمؤمَّن له عند وقوع خطرٍ مخصوص، مقابلَ مبلغٍ دوريٍّ يدفعه المؤمَّنُ له

காப்பீடு (Insurance) என்பது, ஒரு நபர் (பாலிசிதாரர்) மற்றும் காப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான சட்ட ஒப்பந்தமாகும்; பாலிசிதாரர் ஒரு குறிப்பிட்ட பிரீமியத்தைச் செலுத்துவதற்கு ஈடாக, எதிர்பாராத விபத்து, நோய், பொருள் இழப்பு போன்ற நிகழ்வுகளின் போது காப்பீட்டு நிறுவனம் குறிப்பிட்ட தொகை அளிப்பதாகும்.

இன்சூரன்ஸ் என்பது நவீன காலச் சட்டம் என்பதினால் கூடும் என்றோ கூடாது என்றோ குர்ஆன் மற்றும் ஹதீஸில் நேரடியான வார்த்தைகள் இல்லை. 

எனவே இன்சூரன்ஸில் இருக்கின்ற பொதுவான அம்சங்கள் என்ன என்பதை கண்டறிந்து அதை குர்ஆன், ஹதீஸ் இஜ்மாஃ, கியாஸ் மூலம் ஆய்வு செய்யலாம்.

 دار الإفتاء المصرية (எகிப்து ஃபத்வா மன்றம்) தரும் மார்க்கத் தீர்ப்பு :

 وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ﴾ المائدة: 2

“நன்மை மற்றும் இறையச்சத்தில் ஒருவருக்கொருவர் உதவுங்கள்;

பாவத்திலும் பகைமையிலும் உதவாதீர்கள்.”

(அல் குர்ஆன் -மாயிதா: 2)

«مَثَلُ الْمُؤْمِنِينَ فِي تَوَادِّهِمْ وَتَرَاحُمِهِمْ وَتَعَاطُفِهِمْ مَثَلُ الْجَسَدِ إِذَا اشْتَكَى مِنْهُ عُضْوٌ تَدَاعَى لَهُ سَائِرُ الْجَسَدِ بِالسَّهَرِ وَالْحُمَّى» رواه مسلم

நபி ﷺ கூறினார்கள்:

“முமின்கள் ஒருவரை ஒருவர் நேசிப்பதிலும் , இரக்கம் காட்டுவதிலும் , பரிவு கொள்வதிலும் 

ஒரே உடல் போலாகும். அதில் ஒரு அங்கம் வலித்தால் மற்ற அங்கங்களும்

துயரமும் காய்ச்சலும் கொண்டு அதற்குப் பங்கெடுக்கும்.”

(முஸ்லிம்)

இதுபோன்ற பல ஆதாரங்கள் ஒத்துழைப்பு மற்றும் உபகாரத்தை ஊக்குவிக்கின்றன.

எனவே இன்சூரன்ஸில் நல்ல அம்சங்கள் மட்டும் இருந்து, மார்க்கம் தடுத்த - மனிதனுக்கு நஷ்டம் விளைவிக்கின்ற அம்சங்கள் இல்லையென்றால் ஆகும். மார்க்கம் தடுத்த வட்டி, சூது, போன்றவை இருந்தால் (ஹராம்) கூடாது. இதை எவ்வாறு கண்டறிவது?

 இன்ஷூரன்ஸ் — மூன்று வகைகள்

1 . கூட்டுறவுக் காப்பீடு Mutual / Cooperative Insurance (تأمين التكافل/ التعاون )

சில நபர்கள் அல்லது சங்கங்கள் இணைந்து நன்கொடை அடிப்படையில் உறுப்பினர்களிடமிருந்து நிதி திரட்டி சேமிப்பார்கள். யாருக்கேனும் இழப்பு ஏற்பட்டால் அதிலிருந்து நிதியுதவி வழங்குவார்கள்.  

இங்கு லாப நோக்கம் இல்லை; வட்டி,சூதாட்டம் இல்லை

உறுப்பினர்கள் அனைவரும் நிதியில் பங்களிக்கிறார்கள்

தேவைப்படுபவருக்கு அந்நிதியிலிருந்து உதவி கிடைக்கிறது

பெரும்பாலான உலமாக்கள் கூறுவது: இது ஹலால். 

والنوع الأول من عقود التبرعات، فلا يقصد المشتركون فيه الربح من ورائه، ولكن يقصد منه المواساة والإرفاق، وهو من قبيل التعاون على البر، وهذا النوع جائز، وقليل من يفعله. (قرار المجمع الفقهي – الفتوي ٤٧٢) 

2. சமூக பாதுகாப்பு நலத் திட்டம் Government Social Scheme (التأمين الاجتماعي)

சமூக பாதுகாப்பு இன்ஷூரன்ஸ் என்பது தொழில் அல்லது வேலை செய்து வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பணியாளர்களை எதிர்பாராத அபாயங்களிலிருந்து காக்கும் வகையில் அரசு நடத்தும் சமூக பாதுகாப்பு திட்டம். உதாரணமாக, அரசு சுகாதார காப்பீடு, பென்ஷன் திட்டம், முதல்வர் மருத்துவக் காப்பீடு, பிரதமர் மருத்துவக் காப்பீடு, தொழிலாளி விபத்து நிவாரணம், ESI / PF போன்றவை.

இதுவும் அனுமதிக்கப்பட்ட காப்பீடுதான். ஏனெனில் இது ஓர் அரசு தன் குடிமக்களுக்கு வழங்கும் உரிமைகள் மற்றும் சலுகைகள். இதில் வட்டி, சூது இல்லை. 


3. வணிகக் காப்பீடு - Commercial Insurance (التأمين التجاري)

இதில் பல வகையுண்டு 

ஆயுள் காப்பீடு - Life Insurance (تأمين الحياة)

ஆயுள் காப்பீடு என்பது ஒரு நபர் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துடன் செய்யும் ஒப்பந்தம். அதன்படி, அந்த நபர் மாதம் / வருடம் ஒன்று ஒரு தொகையை (Premium) கட்டுவார். அவர் இறந்தால் அல்லது ஒப்பந்த காலத்தில் விபத்து / நோய் போன்ற ஏதாவது நடந்தால் காப்பீட்டுத் தொகை (Sum Assured) அவரது குடும்பத்தினருக்கு அல்லது முன் பதிவு செய்த வாரிசுக்கு (Nominee) வழங்கப்படும்.

சொத்து, தொழில் காப்பீடு Property / Business Insurance

கடை, நிறுவனம், கம்பனி, தொழிற்சாலை, வீடு, கட்டிடம் , களஞ்சியம்இவற்றுக்கு தீ, திருட்டு, விபத்து, இயற்கை பேரழிவு போன்ற இழப்பு ஏற்பட்டால் கிடைக்கும் காப்பீடு.

இவை இரண்டும் ஹராம். ஏனெனில் இதில் அடங்கியுள்ள அம்சங்கள் :

Interest – நாம் செலுத்தும் பிரீமியம் தொகைகளை வட்டி சார்ந்த தொழில்களில் முதலீடு செய்துதான் அதிலிருந்து நமக்கு இழப்பீடு தரப்படுகிறது.

Gambling - சூதாட்ட அமைப்பு. ஏதோ ஒரு இழப்பு நடந்தால் இவருக்கு அபரிமிதமான லாபம். அதுவும் செலுத்திய தொகையை விட அதிகம். இழப்பு இல்லையென்றால் இவர் செலுத்திய பிரீமியம் ஒன்றுமே கிடைக்காது. 

Uncertainty – நிச்சயமற்ற , தெளிவில்லாத பரிவர்த்தனை

தொகை கொடுத்து வைக்கிறவர் எவ்வளவு திரும்பப் பெறுவார் என்பது தெளிவாக இல்லை.


وَاَحَلَّ اللّٰهُ الْبَیْعَ وَحَرَّمَ الرِّبٰوا

அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான். (அல்குர்ஆன் 2:275)

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِنَّمَا الْخَمْرُ وَالْمَیْسِرُ وَالْاَنْصَابُ وَالْاَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّیْطٰنِ فَاجْتَنِبُوْهُ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ 

ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். (அல்குர்ஆன்:5:90)

نَهَى رَسُولُ اللَّهِ ﷺ عَنْ بَيْعِ الغَرَرِ)- صحيح مسلم

தெளிவில்லாத (நிச்சயமற்ற) விற்பனையை நபி ﷺ தடை செய்தார்கள். (முஸ்லிம்)

மருத்துவக் காப்பீடு - Health Insurance (التأمين الصحي)

மருத்தவக் காப்பீடைப் பொறுத்தவரை 2 வகை உள்ளது. ஒன்று நாம் ஏற்கனவே குறிப்பிட்ட அரசு மருத்தவக் காப்பீடு. இது அனுமதிக்கப்பட்டது. 

இன்னொன்று Commercial Health Insurance. பிற நிறுவனங்கள் நடத்தும் வணிக ரீதியிலான காப்பீடு. இதில் பிரீமியம் உண்டு. இது நாம் ஏற்கனவே குறிப்பிட்ட மூன்று ஹராமான அம்சங்கள் உள்ளதால் ஹராம் ஆகும்.


إذا كان التأمين تجارياً فهو محرّم، وإن كان تعاونياً أو حكومياً فهو جائز.”

 — قرار المجمع الفقهي، 140/15

  • சில நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து மாதம் மாதம் ஒரு சின்ன பிடித்தம் செய்து சேமித்து வருவார்கள்.

அந்த ஊழியருக்கு ஏதேனும் பாதிப்பு வரும்போது இழப்பீடு தருவார்கள். இது கூடும். 


வாகனக் காப்பீடு - Vehicle Insurance (تأمين المركبات)

இது இரண்டு வகை. 1. விரிவான காப்பீடு (Comprehensive Insurance) உங்கள் வாகனத்திற்கு சேதம் ஏற்பட்டால் அதற்கும் இழப்பீடு, உங்கள் வாகனத்தால் மூன்றாம் நபருக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவருக்கும் இழப்பீடு உண்டு. இந்த விரிவான காப்பீடு நம் நாட்டில் கட்டாயம் இல்லை. 

2. Third-Party Insurance (வாகனத்தால் மூன்றாம் நபருக்கு ஏற்படும் காயம், பொருட்சேதம், உயிரிழப்பு போன்றவைக்கான காப்பீடு மட்டும். இது சட்டரீதியான தேவையும் கூட) இந்திய மோட்டார் வாகனச் சட்டம், 1988-இன் படி, வாகனம் ஓட்ட மூன்றாம் தரப்பு காப்பீடு வைத்திருப்பது கட்டாயம்.

“الضَّرُورَاتُ تُبِيحُ المَحْظُورَاتِ 

நிர்பந்தங்கள், தடுக்கப்பட்டவைகளை ஆகுமாக்கும் என்ற ஃபிக்ஹ் சட்டவிதிப்படி இது கூடும். எது கட்டாயம் இல்லையோ அந்த வாகனக்காப்பீடு கூடாது.


-“ما أُلزم به الناس قانوناً يُرخَّص فيه بقدر الضرورة”

مجمع الفقه الإسلامي


சீட்டு (CHIT)

இன்று நடைமுறையில் பல சீட்டுக் குலுக்கல் முறைகள் உள்ளன. எது ஆகும்? எது ஆகாது?

 1. சமத்துவ சீட்டு (Equal Share)

அனைவரும் ஒரே அளவு பணம் தருவார்கள் 

ஒவ்வொருவரும் ஒருமுறை முழுத் தொகை பெறுவார்கள்

எந்தக் கட்டணமும் / கூடுதல் தொகையும் இல்லை

சீட்டுக் குலுக்கலால் வரிசை தீர்மானிக்கப்படும்


📌 உதாரணம்

10 பேர் × ₹10,000 = ₹1,00,000

ஒவ்வொரு மாதமும் ஒருவருக்குக் கொடுப்பது

யாருக்கும் கூடுதல் தொகையும் இல்லை குறைவும் இல்லை.

இது உலகம் முழுதும் பரவலாக (ROSCA) Rotating Savings and Credit Association என்று அறியப்படுகிறது.

இதன் சட்டம் என்ன? கூடும்.

هذه الجمعية التي يشترك فيها جماعة . يدفعون كل شهرٍ مبلغاً معيناً . ثم يأخذه واحدٌ منهم، ثم في الشهر الثاني يأخذه الثاني

 ليس فيها ربا ولا قمار، فهي جائزة إذا كانت بين مؤظفين موثوقين.-


2. ஏலச்சீட்டு (Bidding Chit)  

மொத்த தொகையை ஏலம் போடுவார்கள். 

ஒருவர் 90,000 கேட்கிறார். இன்னொருவர் 85,000 தந்தால் போதும் எனக்கு அவசரம் என்கிறார். யார் குறைவாகப் பெறத் தயாராக இருக்கிறார்களோ அவர்களுக்கு முன்னுரிமை.

மீதித் தொகையை சில பகுதிகளில் சீட்டு நடத்துனர் எடுத்துக் கொள்வார். சில பகுதிகளில் மற்ற உறுப்பினர்களுக்கு பகிர்ந்து கொடுப்பார். 

₹1,00,000க்கு பதிலாக ₹85,000 பெறுகிறார்

மீதமுள்ள ₹15,000 — மற்றவர்களுக்கு பகிரப்படும்

இதன் சட்டம் என்ன? ஹராம்.

ஏனெனில்

🔸 ஒருவன் நஷ்டம் அனுபவிக்கிறான்

🔸 மற்றவர்கள் அவன் நஷ்டத்தில் லாபம் பெறுகிறார்கள்

🔸 வட்டி / சூதாட்டம் போன்ற தன்மை

 

 3. நிர்வாகக் கட்டணச் சீட்டு commission Chit 

மாதாமாதம் ஒரு தொகையை சர்வீஸ் சார்ஜ் ஆக எடுத்துக்கொண்டு மீதியைத்தான் நிர்வாகி வழங்குவார். 

அந்த தொகையை நிர்வாகி வைத்துக்கொள்வார்.

பெரும்பாலான உலமாக்கள் இதை ஹராம் என்கின்றனர்.

சாதாரண சேவைக் கட்டணம் மட்டும் (உண்மையான செலவு அளவு) என்றால்

சில உலமாக்கள் கூடும் எனக் கூறுகிறார்கள். ஆனால் முன்பே அது ஷரத்தில் இருக்க வேண்டும்.


أما إذا كان ما يأخذه مقابل عملٍ يقوم به فلا بأس به.”

(ஒருவர் செய்யும் வேலையின் பேரில் சம்பளம் வாங்கினால் — அதில் பிரச்சனை இல்லை)


4. Lucky Prize Chit அதிர்ஷ்ட குலுக்கல் 

லாட்டரி, ஆன்லைன் ரம்மி போன்றவை.

மக்கள் பணம் செலுத்துகிறார்கள். சிலருக்கு மட்டும் பரிசு. மற்றவர்கள் இழக்கிறார்கள்

இது சூதாட்டம். எனவே ஹராம் என்பதில் எள்ளவும் ஐயமில்லை.


 5. வட்டி இணைந்த Finance Chit

நிறுவனம் உங்களுக்கு கடன் தருகிறது.அதன் மீது வட்டி / profit rate வசூல் செய்கிறது.

இதுவும் ஹராம்தான்.


கடன் (LOAN)

 1. வங்கிக் கடன் (Bank Loan)

வங்கி கடன் தரும் — திருப்பிச் செலுத்தும் போது வட்டி சேர்த்து தர வேண்டும்.

தீர்ப்பு: வட்டி அடங்கிய கடன் → ஹராம்.


﴿وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا﴾ 

அல்லாஹ் வணிகத்தை ஆகுமாக்கி, வட்டியைத் தடை செய்துள்ளான். (அல்குர்ஆன்-2:275)


لعن رسول الله آكل الربا ومؤكله وكاتبه وشاهديه - (مسلم)

வட்டி வாங்குபவர், கொடுப்பவர், அதை எழுதுபவர், அதற்கு சாட்சியாக இருப்பவர் அனைவரையும் நபி (ஸல்) சபித்தார்கள். (நூல்: முஸ்லிம்)


எனவே வங்கிக் கடன் அது எந்தப் பெயரில் இருந்தாலும் வட்டி கலந்திருப்பதால் ஹராம்.


2. தங்க நகைக் கடன் (Gold Loan)

தங்கம் அடகு வைக்கப்படுகிறது — பணம் பெறப்படுகிறது —

ஆனால் வட்டி வசூலிக்கப்படுகிறது. வட்டி இருந்தால் — ஹராம்

ஏன்?

«كل قرض جر منفعة فهو ربا»

(கடன் மூலம் கூடுதல் பயன் பெறும் ஒவ்வொன்றும் வட்டியாகும் )


மாற்று வழி :

  • Islamic Banking System இஸ்லாமிய வங்கி முறை. இது பல இஸ்லாமிய நாடுகளில் உள்ளது. நகை வைத்துக் கடன் பெறலாம். குறிப்பிட்ட தவணையில் அதே தொகை செலுத்தி நகையை மீட்கலாம். துளியளவு கூட வட்டி இல்லை. 
  • அல்லது பைத்துல் மால் அமைப்புகளை மார்க்க அறிஞர்களின் வழிகாட்டுதலில் நிறுவலாம்.  


3. வீடு – கார் லோன் (EMI with Interest)

 வங்கி / ஃபைனான்ஸ் நிறுவனம் வட்டி சேர்த்து கொடுக்கும். வட்டி இருப்பதால் — ஹராம்


من زاد أو استزاد فقد أربى - سنن النسائي

(கடனில் கூடுதல் தொகை கேட்டாலோ கொடுத்தாலோ வட்டிதான்)


இதற்கு ஹலாலான மாற்று வழி உண்டா? 

المرابحة Murabaha என்ற பெயர்களில் சில இஸ்லாமிய நாடுகளில் உள்ளது.

அதாவது வாடிக்கையாளர் ஒரு பொருள் வாங்க விரும்புகிறார்

(உதா: கார், வீட்டு உபகரணங்கள், பொருட்கள், மூலதன பொருட்கள்). வங்கி அந்தப் பொருளை நேரடியாகக் கொள்முதல் செய்கிறது. வங்கி அதை வாடிக்கையாளருக்கு அசல் விலை + முன்பே ஒப்பந்தமான லாபம் சேர்த்து தவணைகளில் விற்பனை செய்கிறது. வாடிக்கையாளர் அந்த மொத்த தொகையை பல தவணைகளில் செலுத்தலாம். அதுதான் முராபஹா .

முராபஹா ஹலால் ஆக இருக்க வேண்டுமானால் முக்கிய நிபந்தனைகள்:

✔ வங்கி உண்மையில் பொருளின் உரிமையாளராக வேண்டும்

✔ வாங்கிய விலை வெளிப்படையாக சொல்லப்பட வேண்டும்

✔ லாபம் முன்பே அறிவிக்கப்பட்டு ஒப்புக் கொள்ளப்பட வேண்டும்

✔ ஒப்பந்தம் விற்பனை ஒப்பந்தமாக இருக்க வேண்டும்

❌ செட்டில்மெண்ட் தாமதம் ஏற்பட்டாலும் லாப விகிதம் அதிகரிக்கக் கூடாது


வங்கிக் கடன் என்பது வங்கி பணமாக தரும். வட்டி போடும். முராபஹா என்பது வங்கி பொருள் தரும் விற்பனை விலை சேர்த்து. அதைப் பல தவணைகளில் செலுத்த அனுமதி தரும்.

 ஆதாரம் : AAOIFI Shariah Standard No. 8

(இஸ்லாமிய நிதி சர்வதேச வழிகாட்டல் எண் 8)

⚠ சில வங்கிகள் உண்மையான விற்பனை இல்லாமல் வட்டி கடனை “Murabaha” என்று பெயர் மாற்றம் செய்கின்றன. அது ஷரிஅத்துக்கு முரணானது

அதனால் நம்பகமான இஸ்லாமிய வங்கி/வழிகாட்டல் அவசியம்

இஸ்லாமிய பைத்துல் மால் வட்டியில்லா கடன் வழங்குகிறது. இதுவும் நல்ல நடைமுறை.


பின் குறிப்பு: 

இன்சூரன்ஸ் குறித்து தற்பொழுது எகிப்திய ஃபத்வா மன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பில் இன்சூரன்ஸின் அனைத்து வகைகளையும் தற்கால சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஆகுமாக்கி ஆர்வப்படுத்தியும் உள்ளது. அதுபோல நம் இந்தியாவின் சில ஃபத்வா குழுக்களும் இந்நாட்டில் தற்பொழுது சிறுபான்மை மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை ஆராய்ந்து இந்நாட்டில் அவசியத்திற்க்கு ஏற்ப ஒரு பாதுகாப்பிற்காக இன்சூரன்ஸ் செய்து கொள்ளலாம் என அனுமதி வழங்கியுள்ளது.

எனினும் மிகவும் பேணுதலோடு, சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளைக் கூட தவிர்ந்து கொண்டு, இஸ்லாம் ஆகுமாக்கி வைத்துள்ள மாற்று வழிகளைத் தேர்ந்தெடுக்கலாம். அவற்றையும் நாம் மேலே கூறியுள்ளோம். அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக.



25 டிசம்பர், 2025

இறைவனின் உதவியை இழுத்துக்கொண்டு வரும் இஸ்திகாரா - உணர்வூட்டும் உண்மை சம்வங்கள்

 இஸ்திகாரா தொழுகை மற்றும் துஆவின் மூலம் இறைவனிடம் நலவை நாடினால் ஆச்சரியமான முறையில் நம் தேவைகள் நிறைவேறும் .


எண்ணற்ற நடப்பு சம்பவங்கள் சான்றுகளாய் இருக்கின்றன 
அவற்றிலிருந்து சில உங்கள் பார்வைக்கு :

அரபு மூலமும் அதன் தமிழாக்கமும் தரப்பட்டுள்ளது :

سِرُ النَّجاح وَمِفْتَاحُ الْخَيْرِ وَالبَركَةِ وَالفَلَاحِ

( كَيفَ تكونُ ناجحاً في أعمالك )

الشيخ الدكتور محمد بن عبد العزيز المسنَد

-----

( هند ) طفلة كويتية ، أصيبت بأشد أمراض السرطان في إحدى ساقيها وقد أجريت لها فحوصات طيبة مكثفة في مركز ( حسين مكي جمعة ) لجراحة السرطان بالكويت ، كما تلقت علاجاً مكثفاً في مركز ( أجلستون ) التخصصي لمعالجة السرطان في مدينة ( أتلنتا ) بولاية جورجيا الأمركية ، وقد بلغت تكاليف العلاج حوالي نصف مليون دولار ، كما تعرضت لعمليات فحص وتشخيص حصيلتها ملف ضخم من التقارير ، وما يربو على مائتين وخمسين صورة أشعة تؤكد إصابتها بالمرض .

وفي أحدى مراحل العلاج ، وبعد تشخيص دقيق ، خضعت هند لمرحلة علاج كيماوي ( كيموثروبي ) لو يؤد إلى أي نتيجة ، في الوقت الذي ذكر فيه الأطباء المختصون في المركزين المذكورين أن هذه النوعية من العلاج يجب أن تؤدي إلى نتيجة رئيسة خلال ثلاثة أسابيع على أبعد تقدير .

وفي مرحلة ثالثة نصح الأطباء والدي هند ببتر ساقها مع احتمال ظهور خلايا السرطانية في أجزاء أخرى من الجسم في وقت لاحق لا يتعدى السنوات القليلة .

إحدى عناصر المأساة تمثلت في وجود عدد غير قليل من أقرباء هند مصابين بالمرض نفسه .

حالة الحزن والألم التي بدت على وجه الطفلة الصغيرة هند جعلت والدها يتعثر في برنامجه لتقديم أطروحة الدكتوراه في الكمبيوتر في إحدى الجامعات الأمريكية ، في حين كانت الليالي الطويلة تمر على والدة هند الجامعية وسط هاجس من الخوف والقلق على مستقبل ابنتها الصغيرة ، ولكن إيمانها بالله جعلها تسلّم بقضاء الله وقدره 

وفي ليلة من الليالي أوت أم هند إلى فراشها ؛ فسافر ذهنها بعيداً ، وأخذت تسبح في بحر من الأوهام والخيالات ، فتمثلت لها صورة ابنتها الصغيرة وهي تمشي على ساق واحدة وتتوكأ على عصا ، فانهمرت عيناها بالدموع حتى بلّلت الفراش ؛ فاستعاذت بالله من الشيطان الرجيم وأخذت تلهج بذكر الله - عز وجل - .

وفجأة ...

تذكرت أمُّ هندٍ شيئاً مهما قد نسيته .. إنها صلاة الاستخارة .. فقامت مسرعة وبادرت إلى أدآئها .

وفي الصباح كرهت أم هند جميع أنواع العلاجات والأدوية التي تقدم لابنتها ، وقررت عدم الإقدام على بتر ساق ابنتها ؛ فقد هداها الله إلى علاج آخر يختلف عن سائر الأدوية والعلاجات ... إنه القرآن الكريم الذي جعله الله شفاءً ورحمة للمؤمنين .

فقد ذُكر لها شيخ فاضل يعالج بالقرآن والرقى الشرعية فانطلقت بابنتها إليه ، وبعد عدة جلسات قام فيها الشيخ بالقراءة والنفث على ساق هند ودهنها بالزيت كانت المفاجأة .

فقد بدأ التحسن يطرأ على ساق هند ، وبدأ الشعر ينمو في رأسها بعد أن تساقط معظمه بسبب العلاج السابق ، ثم شفيت بإذن الله وعادت إلى حالتها الطبعية .

لقد كانت النتيجة مذهلة للجميع .. للطفلة التي عادت إليها الحيوية والنشاط ونضارة الطفولة .. ولذويها الذين كادوا أن يفقدوا الأمل في شفائها من هذا المرض العضال بعد أن أجمع الأطباء على أن لا علاج إلا البتر ، أما الشيخ فابتسم وهو يقول : إن الأمر غير مفاجئ له ؛ فمعجزات القرآن عادية لكل مؤمن ، وهي أكثر من أن تحصى ، وقد جعل الله آياته شفاءً لكل داء . . قال سبحانه : (( وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاء وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلاَ يَزِيدُ الظَّالِمِينَ إَلاَّ خَسَاراً )) ( الإسراء : 82) .

اختصاصي كبير في مستشفى ( أجلستون ) الأمريكي أكد أنه لا يستطيع تصديق التطور الذي طرأ على صحة هند حتى يرى الحالة على الطبيعة ، وعند ما علم أن هنداً تسطيع الركض الآن ، وأن الشعر برأسها وأجزاء جسمها الأخرى قد نما بعد سقوطه أصيب بحالة من الذهول ، وطلب رؤية هند بأية طريقة 


வெற்றியின் ரகசியம்! நன்மை, ஆசீர்வாதம், உயர்வு ஆகியவற்றின் திறவுகோல்

ஷைக் டாக்டர் முஹம்மது இப்னு அப்துல் அஸீஸ் அல் முஸ்னத் அவர்கள் எழுதிய அரபு நூலிலிருந்து தகவல்கள் எடுத்து தமிழாக்கம் செய்து தந்துள்ளேன் 

--------------------------------------------------------

1 - “ஹிந்த்” — குவைத் நாட்டைச் சேர்ந்த ஒரு சிறுமி.
அவளின் ஒரு காலில் மிகக் கடுமையான புற்றுநோய் தாக்கி விட்டது.

அவளுக்காக குவைத்தில் உள்ள
புற்றுநோய் அறுவை சிகிச்சை மையமான “ஹுசைன் மக்கி ஜும்ஆ”
மையத்தில் விரிவான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.

அதன் பிறகு
அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலம், அட்லாண்டா நகரத்தில் உள்ள
“எக்லெஸ்டன்” புற்றுநோய் சிகிச்சை மையத்தில்

அவள் தீவிர சிகிச்சை பெற்றாள்.

சிகிச்சை செலவு —
அரை மில்லியன் டாலர் (பாதி கோடி டாலர்) அளவிற்கு சென்றது.

அவளுக்காக தயார் செய்யப்பட்ட மருத்துவப் பதிவுகள் —
பெரிய கோப்பொன்றாக இருந்தது.
மேலும் —
250க்கு மேற்பட்ட எக்ஸ்ரே புகைப்படங்கள்
அவள் உண்மையாகவே அந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தின.

சிகிச்சையின் ஒரு கட்டத்தில் —
மிகத் துல்லியமான பரிசோதனைகளுக்குப் பிறகு —
ஹிந்த் **கீமோதெரபி (ரசாயன சிகிச்சை)**க்கு உட்படுத்தப்பட்டாள்.

ஆனால் —
இந்த சிகிச்சை எந்த விளைவையும் தரவில்லை.

இதே நேரத்தில் —
அந்த இரண்டு மருத்துவ மையங்களின் நிபுணர்கள் 
இந்த வகை சிகிச்சை அதிகபட்சம்
மூன்று வாரங்களுக்குள்
நிச்சயமாக ஒரு முக்கியமான முன்னேற்றத்தை காட்ட வேண்டும்
என்று கூறினார்கள்.

மூன்றாம் கட்டத்தில் —
மருத்துவர்கள் ஹிந்தின் பெற்றோருக்கு —

👉 அவளின் காலைக் கட்டாயம் வெட்ட வேண்டும் என்றும்
👉 அதற்குப் பிறகும் சில வருடங்களில்
புற்றுநோய் செல்கள் உடலின் பிற பகுதிகளிலும்
தோன்றும் வாய்ப்பு அதிகம் என்றும்
தெரிவித்தனர்.

இந்த துயரத்தின் இன்னொரு அம்சம் என்னவெனில் —
ஹிந்தின் பல நெருங்கிய உறவினர்களும்
அதே நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

சிறுமியான ஹிந்தின் முகத்தில் தெரிந்த
வருத்தமும் வேதனையும் —

அவளின் தந்தை —
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில்
கம்ப்யூட்டர் துறையில் டாக்டரேட் ஆய்வு செய்து கொண்டிருந்தார். அதைத் தொடர்வதிலும் தடையாக அமைந்தது.

இதற்கிடையில் —
ஹிந்தின் தாய் அவரும் ஒரு பல்கலைக்கழக படிப்பாளர்.

தன் மகளின் எதிர்காலம் குறித்து
பயம் மற்றும் கவலையுடன்
நீண்ட இரவுகளை கடத்தினாள்.

ஆனால் —
அவளின் அல்லாஹ்வின் மேல் உள்ள ஈமான்
அவளை —
அல்லாஹ்வின் விதிக்கு முழுமையாக ஒப்புக்கொள்வதற்குத் தூண்டியது.

ஒரு இரவு —

ஹிந்தின் தாய் தனது படுக்கைக்கு சென்றபோது —
அவளின் சிந்தனை தொலைதூரம் பறந்து சென்றது.
அவள் கற்பனைகளின் கடலில் மூழ்கிக் கொண்டாள்.

அவளின் மனக்கண்ணில் —
தன் சிறிய மகள் ஒரே ஒரு காலில் நடந்து
ஒரு குச்சியைத் தாங்கிக்கொண்டு செல்வது போல தோன்றியது.

அவளது கண்கள் கண்ணீரால் நிரம்பி —
படுக்கைத் துணியையே நனைத்துவிட்டது.

அவள் ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்வின் பாதுகாப்பை நாடி
அல்லாஹ்வை நிறைய நினைக்கத் தொடங்கினாள்.

திடீரென…

ஹிந்தின் தாய்க்கு —
தான் மறந்து போன ஒரு முக்கியமான விஷயம் நினைவுக்கு வந்தது.

அது — ஸலாதுல் இஸ்திகாரா (நலவை நாடி வேண்டும் தொழுகை).

அவள் உடனே எழுந்து —
அந்த தொழுகையை நிறைவேற்றினாள்.

காலை ஆனபோது —
ஹிந்தின் தாய் —
மகளுக்கு கொடுக்கப்படும்
எல்லா மருந்துகளையும் சிகிச்சைகளையும்
முழுவதும் வெறுக்கத் தொடங்கினாள்.

மேலும் —
தன் மகளின் காலைக் கட்டாயமாக வெட்டுவதற்கும்
ஒப்புக் கொள்ளாமல் இருப்பதாக முடிவு செய்தாள்.

அல்லாஹ் அவளுக்கு —
மருந்துகளுக்கும் சிகிச்சைகளுக்கும் மாறான
வேறு ஒரு மருத்துவத்தை உந்துதல் தந்திருந்தான்.

அது — குர்ஆன்!
அல்லாஹ் அதை விசுவாசிகளுக்கு
ஷிஃபா — கருணை யாக ஆக்கியிருக்கிறான்.

அவளுக்கு —
ஒரு நற்சாலைமிக்க ஷைக்
குர்ஆன் வாசிப்பும் சரியான ஓதிப் பார்த்தல் மூலம் சிகிச்சை செய்து வருகிறார் என்று கூறப்பட்டதால் —

ஹிந்தின் தாய் —
தன் மகளை அழைத்துக்கொண்டு அவரிடம் சென்றாள்.

சில அமர்வுகளில் — அந்த ஷைக் 
குர்ஆன் வாசித்து ஹிந்தின் காலில் ஊதி
எண்ணெய் தடவி சிகிச்சை செய்தார்.

அப்போது —
ஆச்சரியமான விளைவு தோன்றியது…

ஹிந்தின் காலில் —
மெல்ல நலம்பெறுதல் தென்பட்டது.

முந்தைய சிகிச்சையால் கொட்டித் தவறியிருந்த
அவளின் தலையில் —
மீண்டும் முடி முளைக்கத் தொடங்கியது.

இறுதியில் —
அல்லாஹ்வின் அனுமதி மூலம் —
அவள் முற்றிலும் குணமடைந்து —
முன் நிலைக்கு திரும்பினாள்.

இந்த முடிவு —
எல்லோருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது:

  • சிறுமியான ஹிந்துக்குத்
    குழந்தைத்தனத்தின் துள்ளலும் மகிழ்ச்சியும் திரும்பி வந்தன.

  • அவளின் குடும்பத்தாருக்குத்
    மருத்துவர்கள் காலைக் கட்டாயம் வெட்ட வேண்டும்
    என ஒருமித்த கருத்து தெரிவித்தபின்னரும்
    அவர்கள் இழந்து விட்ட நம்பிக்கை மீண்டும் வந்தது.

அந்த ஷைக் மட்டும்
அமைதியாக சிரித்தபடி கூறினார்:

“இது எனக்கு ஆச்சரியமல்ல.
குர்ஆனின் அதிசயங்கள்
ஒவ்வொரு விசுவாசிக்கும் வழக்கமானதே.
அவை எண்ணிக்க முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளன.
அல்லாஹ் தனது வசனங்களை
ஒவ்வொரு நோய்க்கும்
மருந்தாக ஆக்கி விட்டான்.”

பிறகு அவர் —
அல்லாஹ்வின் வசனத்தை குறிப்பிட்டார்:

“நாம் குர்ஆனில் இருந்து
விசுவாசிகளுக்கு
ஷிஃபாவாகவும் கருணையாகவும் இருப்பதை இறக்கி வைக்கிறோம்.
ஆனால் அநியாயக்காரர்களுக்கு
அது இழப்பையே அதிகரிக்கிறது.”

(இஸ்ரா — 82)

அமெரிக்காவின் “எக்லெஸ்டன்” மருத்துவமனையில் பணியாற்றும்

ஒரு மூத்த நிபுணர், ஹிந்தின் உடல்நிலையில் ஏற்பட்ட இந்த முன்னேற்றத்தை கண் முன்னே பார்த்தால்தான் நம்ப முடியும் என்று கூறினார்.

அவர் —
ஹிந்த் தற்போது ஓடவும் முடிகிறது,
மேலும் முந்தைய சிகிச்சையால் உதிர்ந்த
அவளின் தலைமுடியும்
உடலின் பிற பாகங்களிலும் உள்ள முடியும்
மீண்டும் வளர்ந்து விட்டன என்று அறிந்தபோது  அவர் மிகுந்த ஆச்சரியம் அடைந்தார்.

-----------


شاب عزم على الزواج من فتاة ، فاستخار الله - عز وجل - فلما أراد أن يتقدم لخطبتها رفض أخوه هذه الفتاة وطلب منه أن يبحث عن فتاة من أسرة أخرى !!

حاول هذا الشاب أن يقنع أخاه ولكنَّ محاولاته باءت بالفشل فلم يجد بداً من الرضا والاستسلام ؛ وتزوج من فتاة أخرى ، وبعد أيام معدودة توفيت الأولى فكان رفض أخيه لها عين الخيرة له .

(2) ஒரு இளைஞன் 

ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்தான்.

அவன் அல்லாஹ்விடம் இஸ்திகாரா (வழிகாட்டல் தொழுகை) செய்தான்.

அவன் திருமண நிச்சயம்  செய்ய முனைந்தபோது —
அவனது சகோதரன் அந்தப் பெண்ணை ஏற்க மறுத்து —
வேறு குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணைத் தேடு
என்று கூறினான்!

அந்த இளைஞன் —
சகோதரனை சம்மதிக்கச் செய்வதற்கு முயன்றான்;
ஆனால் அவனது முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன.

இறுதியில் —
அவன் சம்மதித்து ஒப்புக்கொண்டான்;
மற்றொரு பெண்ணைத் திருமணம் செய்தான்.

சில நாட்கள் கழித்து —
முன்பு அவன் திருமணம் செய்ய நினைத்த அந்தப் பெண்
மரணம் அடைந்தாள்.

அப்போது —
அவளை மறுத்த சகோதரனுடைய நடவடிக்கையே
அவனுக்கு உண்மையான நன்மையாக
மாறி இருந்தது.


شاب غافل كان يعمل في إحدى الشركات على ( فترتين ) ؛ صباحية ومسائية ، كان يقضي معظم وقته في العمل براتب زهيد لا يفي بمتطلبات الحياة المختلفة ..

ثم منّ الله عليه بالهداية ؛ فأحسّ بتقصيره الشديد تجاه ربه وخالقه ، وتاقت نفسه إلى الالتحاق بإحدى حلقات تحفيظ القرآن الكريم وحضور الدروس والمحاضرات التي تقام في المساجد لينهل من ينبوعها الصافي وسلسبيلها العذاب ، ولكنّ عمله لا يسمح له بذلك فقد استغرق معظم وقته عدا ساعات قليلة لا تكفي للجلوس مع الزوجة والأولاد ، وقضاء حوائج البيت الضرورية .

لقيته ذات يوم فشكا إليّ حاله طالباً المشورة ، وأخبرني بأنه منذ أن منّ الله عليه بالهداية وهو كاره لعمله في تلك الشركة ؛ وأنه يفكر في البحث عن عمل آخر حتى يتمكن من تعلّم القرآن وحضور مجالس العلم ولكن أين يذهب ؟!

قلت له : هل تعرف صلاة الاستخارة ؟ .. فأجاب بالنفي ، فعلمته إياها ؛ وطلبت منه أن يبادر إلى فعلها ويستخير الله في ترك ذلك العمل مع السعي للبحث عن عمل آخر .


(3)

ஒரு கவனக்குறைவாக வாழ்ந்து வந்த இளைஞன் —
ஒரு நிறுவனத்தில்
இரு வேளைகளில் (காலை / மாலை) வேலை செய்து கொண்டிருந்தான்.

அவனின் பெரும்பாலான நேரமும் வேலையிலேயே கழிந்தது. அவன் பெறும் சம்பளம் வாழ்க்கைத் தேவைகளுக்கு போதாது.

பின்னர் அல்லாஹ் அவனுக்கு வழிகாட்டினான் 

அவன் தன் இறைவனிடம் செய்த குற்றங்களை உணர்ந்தான்;
தன் தவறுகளை உணர்ந்து வருந்தினான்.

அவன் மனம் —
குர்ஆன் மனனம் செய்யும் வகுப்புகளில் சேரவும்,
பள்ளிவாசல்களில் நடைபெறும் சொற்பொழிவுகளில்
பங்கேற்கவும்
ஆர்வம் கொண்டது.

ஆனால் அவனின் வேலை அதற்கு எந்த வாய்ப்பும் தரவில்லை.

வேலை காரணமாக  அவனிடம் இருக்கும் சிறிதளவு நேரமும்
வீட்டுத் தேவைகள் மற்றும் மனைவியும் பிள்ளைகளுடனான நேரத்திற்கே
செலவாகிக் கொண்டிருந்தது.

ஒரு நாள் அவன் என்னைச் சந்தித்து தன் நிலையை கூறினான்.

அல்லாஹ் தந்த இந்த வழிகாட்டலுக்குப் பிறகு அதாவது கல்வியின் தேட்டத்தில் அந்த நிறுவன வேலையை மிகவும் வெறுப்பாக உணர்கிறான் என்றும், குர்ஆன் கற்கவும் இல்முக் கூட்டங்களில் பங்கேற்கவும் வாய்ப்புள்ள வேலையைத் தேடவேண்டும் என்றும் கூறினான்.

ஆனால் —
“வேலை எங்கே கிடைக்கும்?” என்று கவலைப்பட்டான்.

நான் அவனை கேட்டேன்:

“உனக்கு ஸலாதுல் இஸ்திகாரா தெரிகிறதா?”

அவன் சொன்னான்:

“இல்லை.”

அப்போது —
நான் அவனுக்கு அதை கற்றுக் கொடுத்தேன்.

மேலும் —
அவன் அந்த வேலையை விட்டு
மற்றொரு வேலையைத் தேடுவதற்கான விஷயத்தில்
அல்லாஹ்விடம் இஸ்திகாரா செய்யவும்
அதே சமயம்
புதிய வேலையைத் தேடும் முயற்சியை தொடரவும்
சொன்னேன்.

சில நாட்கள் கழித்து —
அவன் என்னை மகிழ்ச்சியுடன் சந்தித்து சொல்லினான்:

“அல்லாஹ் என்மீது தன் கருணையை அருளி விட்டான்.
எனக்கு புதிய வேலை கிடைத்துவிட்டது —
நேரம் குறைவாகவும், சம்பளம் அதிகமாகவும் உள்ளது.
இப்போது நான் என் நேரத்தை சீராக ஒழுங்குபடுத்தி —
உலக வாழ்க்கைப் பணிகளையும்
இஸ்லாமிய அறிவைக் கற்கும் முயற்சியையும்
இரண்டையும் சேர்த்து நடத்த முடிகிறது.”

பிறகு நான் கேட்டேன்:
“இது எப்படி நிகழ்ந்தது?”

அவன் இப்படிச் சொன்னான்:

“நான் ஒருமுறை ஒரு கூட்டத்தில் இருந்தேன். அங்கு இருந்தவர்களில்
ஒருவரான தொழிலதிபர் உரையாடலின் போது,
தனது நிறுவனத்தில் பணிபுரிய நம்பிக்கைக்குரிய ஒரு ஊழியர் தேவைப்படுகிறான்
என்று கூறினார். நான் அவரைச் சந்தித்தேன். எனக்கு நான் விரும்பியவாறு வேலை அமைந்தது.




ரஜப் மாதம் - நன்மைகளை அள்ளிக் குவிப்போம் வாருங்கள்!

 


📘 تبيين العجب بما ورد في شهر رجب

இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி (ரஹ்) அவர்களின் நூல் . இதில் ரஜப் பற்றிய தகவல்களை தொகுத்து வழங்கியுள்ளார்கள் :


1 🤲 ரஜப் மாதம் வந்தபோது சொல்ல வேண்டிய துஆ

அனஸ் (ர.அ) அவர்கள் அறிவிப்பது:

நபி  அவர்கள் ரஜப் வந்தபோது இவ்வாறு கூறினார்கள்:

அல்லாஹ்வே!
ரஜப் மற்றும் ஷஅபான் மாதங்களில் எங்களுக்கு அருள் செய்;
எங்களை ரமழானை அடையச் செய்.”

(அஹ்மத்பைஹகீ மற்றும் பிறர் அறிவிப்பு)


2 - சொர்க்கத்தில் ‘ரஜப்’ என்று அழைக்கப்படும் ஒரு நதி உள்ளது.

அதன் நீர் பாலை விட வெண்மையாகவும் தேனை விட இனிப்பாகவும் இருக்கும்.
ரஜப் மாதத்தில் ஒரு நாளாவது நோன்பு நோற்றவருக்கு —
அல்லாஹ் அந்த நதியிலிருந்து பானம் அருளுவான்.”


3️-  அபூ ஸயீத் அல்குத்ரி (.) அவரகளின் அறிவிப்பு : 

சொர்க்கத்தில் ‘ரஜப்’ என்று அழைக்கப்படும் ஒரு நதி உள்ளது.
அதன் நீர் மிக அரிய சுத்தமான பானமாகும்.
அதிலிருந்து ஒருவன் ஒரு முறை குடித்தால் இனி அவனுக்கு எந்தத் தாகமும் வராது.
இது ரஜப் நோன்பாளர்களுக்காக அல்லாஹ் தயார் செய்த நதி.”


4️-  அபூ ஸயீத் அல்குத்ரி  (.) அவர்கள் அறிவிப்பது:

நபி அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்விடம் வருடத்தின் மாதங்கள் பன்னிரண்டு; வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே அதுபோலவே அல்லாஹ்வின் பதிவேட்டில் எழுதப்பட்டுள்ளன.
அதில் நான்கு மாதங்கள் புனிதமானவை:
ரஜப் — இதற்கு மற்ற எந்த மாதமும் இணையாகாது
மேலும் தொடர்ச்சியாக வரும் மூன்று மாதங்கள்: துல் கஅ்தா, துல் ஹிஜ்ஜா, முஹர்ரம்.
நிச்சயமாக ரஜப் அல்லாஹ்வின் மாதம்;
ஷஅபான் என் மாதம்;
ரமழான் என் உம்மத்தின் மாதம்.”

பிறகு அவர் கூறினார்கள்:

  • ரஜப் மாதத்தில் ஒரு நாள் நோன்பு நோற்றால்
    அல்லாஹ்வின் மிகப் பெரிய திருப்தியை அடைவான்
    மேலும் பர்தவுஸ் உயர்ந்த சொர்க்கத்தில் இடம் பெறுவான்.
  • இரண்டு நாட்கள் நோற்றால்
    உலக மலைகளின் எடைக்கு ஒப்பான இரு மடங்கு நன்மை கிடைக்கும்.
  • மூன்று நாட்கள் நோற்றால்
    அவன் மற்றும் நரகம் இடையே
    ஒரு ஆண்டுக் கால பயண நீளமுள்ள பள்ளம் அமைத்து விடுவான்.
  • நான்கு நாட்கள் நோற்றால்
    பிளேக் நோய், குடிச்சிவப்பு, குஷ்டு, பித்தக்கோளாறு,
    தஜ்ஜாலின் சோதனை, கப்ரின் தண்டனை — இவையிலிருந்து பாதுகாக்கப்படுவான்.
  • ஐந்து நாட்கள் நோற்றால்
    கப்ர் தண்டனையிலிருந்து காப்பாற்றப்படுவான்.
  • ஆறு நாட்கள் நோற்றால்
    மறுமையில் அவன் முகம் பௌர்ணமி நிலவை விட ஒளிவிடும்.
  • ஏழு நாட்கள் நோற்றால்
    நரகத்துக்கு ஏழு கதவுகள் உள்ளன —
    ஒவ்வொரு நாளும் ஒரு கதவை அல்லாஹ் அவன் மீது மூடிவிடுவான்.
  • எட்டு நாட்கள் நோற்றால்
    சொர்க்கத்துக்கு எட்டு கதவுகள் உள்ளன —
    ஒவ்வொரு நாளும் அவன் மீது ஒரு கதவைத் திறந்து விடுவான்.
  • ஒன்பது நாட்கள் நோற்றால்
    அவன் கப்ரிலிருந்து “லா இலாஹ இல்லல்லாஹ்” என்று கூறிக்கொண்டு எழுவான் —
    சொர்க்கத்தைத் தவிர அவனுக்கு எந்தத் தடையும் இருக்காது.
  • பத்து நாட்கள் நோற்றால்
    சிறாத்தில் ஒவ்வொரு மைலுக்கும் ஓய்வெடுக்கும் படுக்கை அமைத்து விடுவான்.
  • பதினொரு நாட்கள் நோற்றால்
    மறுமையில் அவனைவிட சிறந்தவர் யாரும் இருக்கமாட்டார்கள்
    அதே மாதிரி அல்லது அதற்கு அதிகமாக நோற்றவர்களைத் தவிர.
  • பன்னிரண்டு நாட்கள் நோற்றால்
    அல்லாஹ் அவனுக்கு இரண்டு அங்கிகளைப் போர்த்துவான் —
    அதில் ஒவ்வொன்றும் உலகமும் அதில் உள்ளதையும் விட சிறந்தவை.
  • பதிமூன்று நாட்கள் நோற்றால்
    அர்ஷின் நிழலில் அவனுக்காக பட்டறை அமைத்து விடுவான்;
    மக்கள் கடும் துன்பத்தில் இருக்கும் நேரத்தில் அவன் அங்கே உண்பான்.
  • பதிநான்கு நாட்கள் நோற்றால்
    (
    மிகப் பெரிய நன்மை — கண்கள் காணாததும் காதுகள் கேளாததும்
    மனித மனதில் தோன்றாததும் அவருக்கு கொடுக்கப்படும்.)
  • பதினைந்து நாட்கள் நோற்றால்
    அல்லாஹ் அவனை மறுமையில் பயமில்லாதவர்களின் அணியில் நிறுத்துவான்.



5️ - பைஹகீ அவர்கள் கூட இப்படி அறிவிக்கிறார்கள்:

ரஜப் மாதத்தில் ஒரு இரவு உள்ளது —
அந்த இரவில் செய்யும் நற்பணிகள் 100 வருடம் செய்ததற்குச் சமமான பலன்.
அது ரஜப் மாதத்தின் கடைசி மூன்று இரவுகளில் ஒன்று.
அந்த இரவில் ஒருவர்:

  • 12 ரக்அத் தொழுகை தொழ வேண்டும்
  • ஒவ்வொரு ரக்அத்திலும் ஃபாதிஹா மற்றும் ஒரு ஸூரா ஓத வேண்டும்
  • ஒவ்வொரு இரண்டு ரக்அத்துக்கும் தஷஹ்ஹுத் செய்து இறுதியில் ஸலாம் சொல்ல வேண்டும்
  • அதன் பின்பு:
    • சுப்ஹானல்லாஹ், லா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர்’ — தலா 100 முறை
    • 100 முறை இஸ்திக்பார்
    • 100 முறை நபி மீது ஸலவாத்
  • பின்னர் தன் உலகிய மற்றும் மறுமை தேவைகளுக்காக துஆ செய்ய வேண்டும்
  • மறுநாள் நோன்பு நோற்க வேண்டும்

இவ்வாறு செய்தால் அல்லாஹ் அவன் துஆ அனைத்தையும் ஏற்றுக் கொள்வான் —
பாவத்துக்கான துஆ தவிர.


🟣 ரஜப் — புனிதமான மாதங்களில் ஒன்று

அல்லாஹ் கூறுகிறான்:

அல்லாஹ்விடத்தில் மாதங்கள் பன்னிரண்டு —
இதில் நான்கு புனிதமானவை.
ஆகவே அவற்றில் உங்களுக்கு நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள்.”
(
தௌபா: 36)

புனித மாதங்கள்:

  • முஹர்ரம்
  • ரஜப்
  • துல் கஅ்தா
  • துல் ஹிஜ்ஜா

நபி அவர்கள் கூறினார்கள்:

வருடம் பன்னிரண்டு மாதங்கள்.
அதில் நான்கு புனிதமானவை:
தொடர்ச்சியாக மூன்று — துல் கஅ்தா, துல் ஹிஜ்ஜா, முஹர்ரம் —
மேலும் ‘ஜுமாதா மற்றும் ஷஅபானுக்கு நடுவே இருக்கும் ரஜப்’.”

(புகாரி — 4662, முஸ்லிம் — 1679)

تبيين العجب بما ورد في شهر رجب للحافظ ابن حجر العسقلاني

 

عن أنس، أن النبي صلى الله عليه وسلم كان إذا دخل رجب قال: " اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان ".

 

"إن في الجنة نهرا يقال له رجب:

ماؤه أشد بياضا من اللبن، وأحلى من العسل: من صام يوم من رجب سقاه الله من ذلك النهر".

 

عن أبيه عن أبي سعيد الخدري، مرفوعا:

" إن في الجنة نهرا يقال له: رجب، ماؤه الرحيق، من شرب منه شربة لم يظمأ بعدها أبدا، أعده الله لصوام رجب ".

 

عن أبي سعيد الخدري، قال: قال رسول الله صلى الله عليه وسلم.

إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السموات والأرض منها أربعة حرم: رجب لا يقارنه من الأشهر أحد، ولذلك يقال له: شهر الله الأصم، وثلاثة أشهر متواليات: يعني ذا القعدة وذا الحجة والمحرم. إلا وإن رجبا شهر الله، وشعبان شهري، ورمضان شهر أمتي. فمن صام من رجب يوما إيمانا واحتسابا استوجب رضوان الله الأكبر، وأسكنه الفردوس الأعلى، ومن صام من رجب يومين فله من الأجر ضعفان، وزن لك ضعف مثل جبال الدنيا. ومن صام من رجب ثلاثة أيام جعل الله بينه وبين النار خندقا، طول مسيرة ذلك اليوم سنة. ومن صام من رجب أربعة أيام عوفي من البلاء، ومن الجذام، والجنون والبرص، ومن فتنة المسيح الدجال، ومن عذاب القبر. ومن صام من رجب خمسة أيام وقى عذاب القبر، ومن صام من رجب ستة أيام خرج من قبره ووجهه أضوأ من القمر ليلة البدر. ومن صام من رجب سبعة أيام فإن لجهنم سبعة أبواب، يغلق الله - تعالى - عنه بصوم كل يوم بابا من أبوابها. ومن صام من رجب ثمانية أيام فإن للجنة ثمانية أبواب، يفتح الله له بكل صوم يوم بابا من أبوابها. ومن صام من رجب تسعة أيام خرج من قبره وهو ينادي: لا إله إلا الله، فلا يرد وجهه دون الجنة، ومن صام من رجب عشرة أيام جعل الله له على كل ميل على الصراط فراشا يستريح عليه. ومن صام من رجب أحد عشر يوما لم يواف عبد يوم القيامة بأفضل منه إلا من صام مثله، أو زاد عليه. ومن صام من رجب اثني عشر يوما كساه الله يوم القيامة حلتين الحلة الواحدة خير من الدنيا وما فيها. ومن صام من رجب ثلاثة عشر يوما وضع له يوم القيامة مائدة في ظل العرش، فأكل عليها والناس في شدة شديدة. ومن صام من رجب أربعة يوما أعطاه الله من الثواب مالا عين رأت، ولا أذن سمعت، ولا خطر على قلب بشر. ومن صام من رجب خمسة عشر يوما وقفه الله يوم القيامة موقف الآمنين. وقال ابن ناصر: سقط من سماع ابن البطر وابن خيرون قوله: ومن صام من رجب خمسة أيام. والباقي سواء.

 

رواه البيهقي أيضاً من طريق عيسى غنجار، عن محمد بن المفضل بن عطية، " في رجب ليلة يكتب للعامل فيها حسنات مائة سنة، وذلك لثلاث بقين من رجب، فمن صلى فيها اثنتي عشرة ركعة، يقرأ في كل ركعة فاتحة الكتاب وسورة من القرآن، يتشهد في كل ركعتين، ويسلم في آخرهن، ثم يقول: سبحان الله ولا إله إلا الله، والله وأكبر، مائة مرة، ويستغفر مائة مرة، ويصلي على النبي صلى الله عليه وسلم مائة مرة ويدعو لنفسه بما شاء من أمر دنياه وآخرته، ويصبح صائماً، فإن الله يستجيب دعاءه كله، إلا أن يدعو في معصية".

رجب أحد الأشهر الحُرم

قال تعالى ( إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْراً فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ فَلا تَظْلِمُوا فِيهِنَّ أَنْفُسَكُمْ وَقَاتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ) (التوبة:36)

والأشهر الحرم هي محرم ورجب وذو القعدة وذو الحجة عن أبي بكرة  عن النبي  أنه قال

 ( إن الزمان قد استدار كهيئته يوم خلق الله السماوات والأرض السنة اثنا عشر شهرا منها أربعة حرم ثلاثة متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب شهر مضر الذي بين جمادى وشعبان ) رواه البخاري (4662) ومسلم ( 1679) .