Sathak Maslahi
சிந்தனைக்கு சில சிதறல்கள்
18 அக்டோபர், 2025
பெற்றோர் மறைந்த பிறகும், பிள்ளைகளின் கடமைகள்
30 செப்டம்பர், 2025
குறைந்த வார்த்தைகள் ! நிறைவான வெகுமதிகள்
مَن قَرَأَ بالآيَتَيْنِ [يعني : مَن قَرَأَ بالآيَتَيْنِ مِن آخِرِ
سُورَةِ البَقَرَةِ في لَيْلَةٍ كَفَتَاهُ]
الراوي : أبو مسعود المحدث : البخاري المصدر
: صحيح البخاري
الصفحة أو الرقم : 5008 التخريج : أخرجه مسلم (807) مطولاً باختلاف يسير
யார் சூரத்துல் பகராவின்
கடைசி இரண்டு வசனங்களை இரவில் ஓதுகிறாரோ, அவருக்கு அவையே போதுமானதாக இருக்கும்]
مَن قال:
سُبْحانَ اللَّهِ وبِحَمْدِهِ، في يَومٍ مِائَةَ مَرَّةٍ؛ حُطَّتْ خَطاياهُ وإنْ
كانَتْ مِثْلَ زَبَدِ البَحْرِ.
الراوي : أبو هريرة المحدث : البخاري المصدر
: صحيح البخاري
الصفحة أو الرقم : 6405 التخريج : أخرجه البخاري (6405) واللفظ له، ومسلم (2691) مطولاً
"சுப்ஹானல்லாஹி
வபிஹம்திஹி" என்று ஒரு நாளைக்கு நூறு முறை கூறுபவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும், அவை கடல் நுரை போல இருந்தாலும் கூட.
إذا مرَرتم برياضِ الجنَّةِ فارتَعوا قلتُ يا رسولَ اللهِ وما رياضُ الجنَّةِ قال المساجدُ قلتُ وما الرَّتْعُ يا رسولَ اللهِ قال سبحانَ اللهِ والحمدُ للهِ ولا إلهَ إلا اللهُ واللهُ أكبرُ
الراوي : أبو هريرة المحدث : ابن العربي المصدر
: عارضة الأحوذي
الصفحة أو الرقم : 7/59 التخريج : أخرجه الترمذي (3509)، والبزار (9311)
நீங்கள் சொர்க்கத்தின்
பூங்காக்களைக் கடந்து சென்றால், அவற்றில் மேய்ந்து கொள்ளுங்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே, சொர்க்கத்தின் பூங்காக்கள் எவை?” என்று கேட்டேன். “பள்ளிவாசல்கள்” என்று
கூறினார்கள். நான், “மேய்ச்சல் என்றால் என்ன” என்று கேட்டேன்.
“சுப்ஹானல்லாஹி
வல்ஹம்துலில்லாஹி வலாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்” என்று கூறுவதாகும். என்றார்கள்.
29 செப்டம்பர், 2025
இழந்தவனுக்கும் மாளிகை ! அடைந்தவனுக்கும் மாளிகை!!
வறுமை வந்தால் வாடாதே! வசதி வந்தால் ஆடாதே !!
حكاية: قال في العقائق أيضا:
أن ملكين نزلا من السماء أحدهما بالمشرق والآخر بالمغرب ثم رجعا إلى آخر النهار
فالتقيا في السماء فقال أحدهما لصاحبه أين كنت قال في المشرق أرسلي ربي إلى كنز رجل فخسف به الأرض
فقال الآخر وأنا أرسلني ربي بأمر عجيب أمرني أن اخرج الكنز من قرار الأرض وأجعله بدار رجل فقير بالمغرب ليس له درهم ولا دينار
فسمعهما رضوان خازن الجنة قال قصتي أعجب من ذلك إن الله تعالى أمرني أن أذهب إلى دار ذلك الفقير الذي صار الكنز في داره وأعد الكنز كم درهم وكم دينار ثم أمرني أن أبني قصورا في الجنة بعدد كل درهم ودينار لصاحب الكنز والفقير
فقال الملكان ربنا أطلعنا على هذه الكرامة التي كرمت بها صاحب الكنز والفقير
فقال الله تعالى لما خسف الكنز قال صاحبه الحمد لله الذي جعلني راضيا بقدره وأما الفقير فلم يفرح بالكنز بل قال إن في خزانته ما لا يحوجني إلى غيره
இரண்டு வானவர்கள் வானத்திலிருந்து இறங்கினர், ஒருவர் கிழக்கிலும் மற்றவர் மேற்கிலும். பின்னர் அவர்கள் நாள் முடிவில் திரும்பினர். அவர்கள் வானத்தில் சந்தித்தனர். அவர்களில் ஒருவர் தனது தோழரிடம், "நீ எங்கே இருந்தாய்?" என்று கேட்டார், அவர், "கிழக்கில், ஒரு மனிதனின் புதையலை நோக்கி என்னை இறைவன் அனுப்பினான். பூமி அந்தப் புதையலை விழுங்கியது.
மற்றவர், "என் இறைவன் என்னை ஒரு அற்புதமான கட்டளையுடன் அனுப்பினான். பூமியின் ஆழத்திலிருந்து புதையலைப் பிரித்தெடுத்து, மேற்கில் ஒரு திர்ஹமோ அல்லது ஒரு தினார் கூட இல்லாத ஒரு ஏழையின் வீட்டில் அந்தப் புதையலை வைக்க கட்டளையிட்டான்” என்றார்.
சொர்க்கத்தின் பாதுகாவலரான ரிள்வான் அவற்றைக் கேட்டு, "என் கதை அதை விட அற்புதமானது. மிக உயர்ந்த அல்லாஹ், புதையல் யாருடைய வீட்டில் இருக்கிறதோ அந்த ஏழையின் வீட்டிற்குச் செல்லும்படி எனக்குக் கட்டளையிட்டான். நான் புதையலை எண்ணினேன், அதில் எத்தனை திர்ஹம்கள் மற்றும் எத்தனை தினார்கள் உள்ளன.
பின்னர் அந்த எண்ணிக்கைக்கு சமமான மாளிகைகளை சொர்க்கத்தில் புதையலின் உரிமையாளருக்கும் ஏழைக்கும் கட்டும்படி எனக்குக் கட்டளையிட்டான்."
இரண்டு வானவர்களும் ஆச்சரியத்தில், "எங்கள் இறைவா, புதையலின் உரிமையாளருக்கும் ஏழைக்கும் நீர் அளித்த இந்த அற்புதத்தை எங்களுக்கு விளக்கு" என்று கூறினர்.
அல்லாஹ் கூறினான்: "புதையல் விழுங்கப்பட்டபோது, அதன் உரிமையாளர் என்னைப் பழிக்கவில்லை, 'தன் விதி குறித்து என்னைத் திருப்தி கொள்ள வைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்' என்று கூறினார்.
ஏழை மனிதனைப் பொறுத்தவரை, அவர் திடீரென புதையல் வந்ததால் ஆனந்த கூத்தாடவில்லை; மாறாக, இதுவரைக்கும் அவனல்லாத வேறு யாரிடத்திலும் என்னை தேவையாகாமல் வைத்திருக்கிறானே அதுவே அவனது பெரிய கருவூலம் தான் என்று எனக்கு நன்றி சொன்னார்.
—--
எனவே இருவருக்கும் மறுமையில் சொர்க்கத்தில் அந்த தீனார் திர்ஹம் எத்தனையோ அத்தனை அளவுக்கு வசந்த மாளிகை !
26 செப்டம்பர், 2025
ஸலவாத்து சிறப்புகள் - ஆதாரங்கள் - அனுபவங்கள்
فضائل الصلاة على النبي ﷺ - بالأدلة والتجارب
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் மீது ஸலவாத்து கூறுவதின் சிறப்புகள் -
ஆதாரங்கள் மற்றும் அனுபவ நிகழ்வுகள்.1- புனித குர்ஆனிலிருந்து
சர்வவல்லமையுள்ள அல்லாஹ் கூறுகிறான்:
“நிச்சயமாக, அல்லாஹ்வும் அவனது வானவர்களாகிய அமரர்களும் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து பொழிகின்றனர். விசுவாசிகளே நீங்களும் அவர் மீது ஸலவாத்தும் ஸலாமும் கூறுங்கள், (அல்-அஹ்ஸாப்: 56)
ஹதீஸ்களில்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “யார் என் மீது ஒரு முறை ஸலவாத்து மொழிகிறாரோ, அல்லாஹ் அவர் மீது பத்து மடங்கு அருள்புரிகிறான் . அவரிடமிருந்து பத்து பாவங்களை அழித்து, அவரது அந்தஸ்தில் பத்து பதவிகளை உயர்த்துவான்.” (அல்-நஸாயி 1297)
"உயிர்த்தெழுதல் நாளில் உங்களில் எனக்கு மிக நெருக்கமானவர் என் மீது அதிக சலவாத்து உரைப்பவர் ஆவார்." (திர்மிதி 484)
உபை இப்னு கஅப் ( ரலி) அவர்கள், நாயகமே உங்கள் மீது ஸலவாத்து ஓதுவதில் என் நேரம் முழுவதையும் அர்ப்பணிக்கட்டுமா? என்று என்று ஆர்வத்துடன் கேட்ட பொழுது,
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நீ அவ்வாறு செய்தால் உங்கள் கவலைகள் தீர்க்கப்படும், உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படும்." (திர்மிதி 2457)
2- மேதைகளின் அறிக்கைகள், வாக்குமூலங்கள் :
இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தி (அல்லாஹ் அவர் மீது கருணை காட்டட்டும்) அவர்கள் கூறினார்கள்:
" எனது தேவைகளை நிறைவேற்றுகிற ஒரு மந்திர திறவுகோலாக நபியின் மீது ஸலவாத்து சொல்லுவதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.”
“எனக்கு எந்த ஒரு நெருக்கடி பிரச்சினை என்றாலும் ஸலவாத்து சொல்வதை வழக்கமாக்கினேன் என்றால் உடனடி தீர்வு கிடைக்காமல் இருந்ததில்லை.”
இமாம் அஷ்-ஷாஃபிஈ (ரஹ்) அவர்களின் கவிதைகள்:
இவ்வுலகில் எனக்கு ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டால், நான் உடனே செல்வது ஸலவாத்து தான்.
3- சமகால அனுபவங்கள் (உண்மை நிகழ்வுகள்)
சிரியாவிலிருந்து ஒரு மூதாட்டியின் வாக்குமூலம்:
85 வயதுடைய நல்லொழுக்கமுள்ள ஒரு பாட்டி. அந்த பாட்டியிடம் ஒரு சகோதரி பேட்டி எடுத்தாள்:
நீங்கள் 85 வயதை அடைந்த பிறகும் உங்களிடம் சில அதிசயங்களை பார்க்கிறோம்.
நீங்கள் கண்ணாடி அணியாமலே குர்ஆனை சரளமாக ஓதுகிறீர்கள். மற்றவரின் உதவி இல்லாமலேயே உங்கள் அனைத்து தேவைகளையும் நீங்களாகவே பூர்த்தி செய்கிறீர்கள். உங்கள் முகத்தில் ஒரு ஆச்சரியமான பிரகாசம் தென்படுகிறது இதன் ரகசியம் என்ன?
அவள் பதிலளித்தாள்:
நான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீது இந்த வார்த்தைகளை வைத்து ஸலவாத்து அதிகம் அதிகம் ஓதுகிறேன்:
“இறைவனே, நீ திருப்தி படுகிற அளவுக்கு, வானங்கள் பூமி நிறைய, உன் தூதர் முஹம்மது நபி ﷺ அவர்கள் மீது ஸலவாத்தும் சாந்தியும் நிரப்புவாயாக!”
நான் அதை பல முறை மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.
நான் ஒவ்வொரு நாளும் சூரா யாசீன், சூரா அல்-பகரா மற்றும் சூரா அத்-துகான் ஆகியவற்றை ஓதி வருகிறேன்.
அதன் அபிவிருத்தி தான் நீங்கள் பார்க்கிற அதிசயம் என்றாள் அந்த மூதாட்டி.
2- கடனில் மூழ்கிய ஒரு நபர்:
நபி (ஸல்) அவர்கள் மீது தினமும் 1,000 ஸலவாத்துகளை தவறாமல் சமர்ப்பணம் செய்தார். ஆச்சரியமான முறையில் அவரது கடன்களெல்லாம் தீருகிற அளவுக்கு இறைவன் அவருக்கு வசதி அளித்தான்.
(சில இஸ்லாமிய பத்திரிகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.)
3- விமானப் பயணி:
விமானம் பழுதடைந்தபோது, மற்ற பயணிகள் எல்லாம் பதற்றத்தில் கத்திக் கதறிக் கொண்டிருந்த பொழுது இந்த பயணி மாத்திரம் பதட்டம் இல்லாமல் அமைதியாக அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அதிகமான சலவாத்துகளை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்.
சிறிது நேரத்தில் பழுது தானாகவே சரியாகி பத்திரமாக தர இறங்கியது.
4- புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்:
மருத்துவ சிகிச்சைகள் பெரிய பலனைத் தராமல் மருத்துவர்கள் கைவிட்ட பொழுது அவர் நம்பிக்கை இழக்காமல், மனவலிமையுடன் நபி (ஸல்) அவர்கள் மீது தினமும் 1,000 ஸலவாத்துகளை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தார், ஆச்சரியமான முறையில் அவரது நிலை மேம்பட்டது. அதன் பிறகு டெஸ்ட் செய்து பார்த்த பொழுது இயல்பு நிலை திரும்பி இருந்தது.
(நவீன தஃவா ஏடுகளில் வந்த உண்மை தகவல்)
6- மினாவில் தொலைந்து போன யாத்ரீகர் ஒருவர் லட்சக்கணக்கான கூட்டத்திற்கு மத்தியில் தன் கூட்டத்தை தேடி அலைந்தார். உடனே ஸலவாத்தை கையில் எடுத்தார். தொடர்ந்து ஓதிக் கொண்டே இருந்தார் திடீரென யாரோ ஒருத்தர் வந்து அவரை அழைத்துச் சென்று அவருடைய கூட்டத்தாருடன் சேர்த்து விட்டு மறைந்து விட்டார்.
6- வேலை தேடுபவர்: அவர் நபி (ஸல்) அவர்களிடம் தினமும் 100 ஸலவாத்து ஓதுவதை வழக்கமாக கொண்டார் அவர் எதிர்பார்த்த நல்ல வேலை வாய்ப்பு கிடைத்த அனுபவத்தை அவர் சொல்லுகிறார்.
சுருக்கமாக:
ஸலவாத்து ஓதினால்,
- பாவங்கள் மன்னிக்கப்படும்
- கவலைகள் நீங்கும்
- கஷ்டங்கள் மாறும்
- அந்தஸ்து உயரும்
- அல்லாஹ்வுடைய பிரத்திகமான அருள் அவருக்கு கிடைக்கும் என்கிற கருத்து குர்ஆன் வசனங்களிலும் ஹதீஸ் நபி மொழிகளிலும் ஆதாரத்துடன் கிடைக்கின்றன.
நடப்பு நிகழ்வுகளும் அனுபவபூர்வமான உண்மைகளும் அரபு பத்திரிகைகளிலும் இணையதளங்களிலும் ஆயிரக்கணக்கில் கொட்டி கிடக்கின்றன. அதில் ஒரு சில நிகழ்வுகளை மாத்திரம் இங்கு மொழிபெயர்த்து சொல்லப்பட்டிருக்கிறது.
மேற்கூறிய குறிப்புகள் அனைத்திற்குமான அரபு மூலம்
١- الأدلة من القرآن الكريم والحديث الشريف
قال الله تعالى:
﴿إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ ۚ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا﴾ (الأحزاب: 56)
ومن الأحاديث:
قال النبي ﷺ: «من صلّى عليّ صلاةً واحدة صلّى الله عليه بها عشرًا، وحطّ عنه عشر خطيئات، ورفع له عشر درجات» (رواه النسائي 1297).
«إنَّ أقربَكم منِّي يومَ القيامةِ أكثَرُكم عليَّ صلاةً»
(رواه الترمذي، رقم 484
: أبي بن كعب
وقال ﷺ: «إذًا تُكفى همّك ويُغفر لك ذنبك» (رواه الترمذي 2457).
٢- أقوال العلماء
قال الإمام جلال الدين السيوطي رحمه الله في بعض رسائله:
«جرَّبتُ الصلاة على النبي ﷺ فوجدتُها مفتاحًا لقضاء الحوائج، وما لازمتُها في أمرٍ إلا ورأيتُ الفرجَ عاجلًا
شعر الإمام الشافعي رحمه الله
قال الإمام محمد بن إدريس الشافعي رحمه الله في أبيات مشهورة:
إذا ضاقتْ بي الدنيا وما رحُبتْ
ناديتُ: يا سيِّدي يا خيرَ مَبعوثِ
فصلِّ يا ربِّ على المختارِ ما بَلَغَتْ
حَياتيَ الروحُ أو أبقى بتنفيسِ
٣- تجارب معاصرة (قصص واقعية)
قصة في فضل الصلاة على النبي صلى الله عليه وسلم من سوريا
١- أخت فاضلة عمرها 85 عام
سألتها أحد الأخوات ما هو سر هذا النور في وجهك ، وأنك بلغتي من العمر ما بلغتي
وأنت تقرأين القرآن بدون الحاجة إلى نظارات وتقضي حوائجك دون حاجة أحد
فأجابتها وقالت :
أني أصلي على رسول الله صلى الله عليه وسلم بهذه الصيغة :
(اللهم صل وسلم على نبينا محمد ملء السموات والأرض حتى يرضى الله)
وأكثر منها بأعداد كبيرة ، وأقرأ سورة يس كل يوم ، وسورة البقرة والدخان
هذه بركات الصلاة على حبيبنا محمد صلى الله عليه وسلم فأكثروا من الصلاة عليه
٢- رجل غارق في الديون: بعد المداومة على 1000 صلاة على النبي ﷺ يوميًا، فتح الله له أبواب الرزق حتى سدد دينه. (ذكر في بعض المجلات الإسلامية).
٣- مسافر في طائرة: عندما تعطلت الطائرة أخذ يكثر من الصلاة على النبي ﷺ حتى هبطت بسلام. (قصص مروية في خطب ودروس معاصرة).
٤ - امرأة مريضة بالسرطان: لازمت 1,000 صلاة على النبي ﷺ يوميًا، ثم تحسنت حالتها وظهرت نتائج الفحوصات سليمة. (مذكور في نشرات دعوية حديثة).
٥ - حاج تائه في منى: قرأ الصلاة على النبي ﷺ حتى دلّه رجل غريب على مكان حملته، فلما التفت لم يجده. (قصة منتشرة بين الحجاج، نُشرت في مجلات دعوية).
٦ - باحث عن عمل: واظب على 100 صلاة على النبي ﷺ يوميًا، فجاءه عرض عمل لم يكن في حسبانه. (قصص منتشرة في كتب الرقائق المعاصرة).
21 செப்டம்பர், 2025
வாதம் அடித்த பாதம் கூட உயிர்த்தெழுந்த உண்மை நிகழ்வு
📝 ஷைக் முஹம்மது ஹஸ்ஸான் அவர்கள் விவரித்த ஒரு வியப்பான நிகழ்வு. அவர் கூறுகிறார்:
நான் மக்காவில் ஒரு சொற்பொழிவாற்றத் தொடங்கினேன். நான் பேசுவதற்கு முன்பு, ஒரு மனிதர் என்னிடம், "ஷைக் முஹம்மது, நீங்கள் உறையாற்றும் முன்பு சிறிது என் வார்த்தைகளை கொஞ்சம் கேளுங்கள்" என்றார்.
நான் அவரிடம், "உள்ளே வாருங்கள் வாருங்கள் தந்தையே! அமருங்கள். உங்கள் நிகழ்வு என்ன கூறுங்கள்" என்றேன். அவர் என் அருகில் அமர்ந்தார்.
அவர் ஒரு செல்வந்தர். நிறைய செழிப்பும் செல்வாக்கும் நிறைந்த வணிகர், ஆனால் அவர் வாதத்தால் முற்றிலும் முடங்கிப்போயிருந்தார்.
அவர் கூறுகிறார், "நான் லண்டனுக்குச் சென்றேன், உயர்ந்த சிகிச்சை செய்தேன். பலனில்லை. நான் பிரான்சுக்குச் சென்றேன், ஆனால் இறைவன் எனக்கு ஒரு சிகிச்சையைத் தரவில்லை. நான் அமெரிக்காவுக்குச் சென்றேன், அங்கும் பெரிய அளவில் செலவு செய்தும் சிகிச்சை பலன் தரவில்லை.."
"ஒரு நாள், நான் தொலைக்காட்சியின் முன் அமர்ந்திருந்தபோது, மக்காவின் புனித இறையில்லத்திலிருந்து தொழுகையும் பிரார்த்தனையும் ஒளிபரப்புவதைக் கண்டேன். நான் அதைக் கவனித்துக் கொண்டிருந்தபோது என்னையும் அறியாமல் உணர்ச்சிகள் பொங்கி அழுதேன், பின்னர் என் பிள்ளைகளிடம் , "மக்களே! நான் ராஜாவின் வீட்டிற்குச் செல்ல விரும்புகிறேன்" என்று சொன்னேன். அவர்கள், "ராஜா யார், தந்தையே?" என்றனர்.
"நான் உம்ராவுக்குச் செல்ல விரும்புகிறேன்" என்றேன்.
"என்ன உம்ராவா? முற்றிலும் முடங்கிப் போயிருக்கிற உங்களால் நடக்க இயலுமா ?"
நான், "என் பணத்தில் எனக்காக ஒரு தனி விமானத்தை வாடகைக்கு எடுததாவது உம்ராவிற்கு செல்வேன்..." என்றேன்.
பிள்ளைகள் தனி விமானம் ஏற்பாடு செய்து அழைத்து சென்றனர்.
அங்கிருந்து காரிலும் பின்னர் சக்கர நாற்காலியிலும் தூக்கி தூக்கி வைத்து கஃபாவின் அருகே கொண்டு சென்றனர்.
புனித கஃபாவின் அருகில் உணர்ச்சி பொங்க நாதழுதழுக்க நான் இந்த வார்த்தைகளால் மட்டுமே பிரார்த்தனை செய்தேன்
والله ما انا طالع من بيتك إلا على رجليه أو على المقابر"
"இறைவன் மீது ஆணையாக, நான் இந்த இல்லத்திலிருந்து ஒன்று என் கால்களால் நடந்து செல்ல வேண்டும் இல்லையெனில் கப்ருக்கு செல்லவேண்டும்” என்று திரும்ப திரும்ப ஒருமணி நேரம் சொல்லிக் கொண்டு இருந்திருப்பேன் . அப்படியே என்னையும் அறியாமல் நாற்காலியிலேயே அயர்ந்து தூங்கிவிட்டேன். திடீரென ஒரு அசரீரி போல எனக்கு கேட்டது
قم إمش .. قم إمش .. قم إمش...
'எழுந்திரு, நட... எழுந்திரு, நட' என்று சொல்வதைக் கேட்டேன். அது மூன்றாவது முறையாக, "எழுந்திரு, நட..." என்று கூறியது.
“எழுந்திரு…”
நான் எழுந்தேன்.
“நட..” நடந்தேன்.
சில அடிகளுக்குப் பிறகு, நான் உணர்ந்தேன். நாம் முடங்கிப் போயல்லவா இருந்தோம். இப்போது எப்படி? !
அதனால் நான் கத்தினேன், “இறைவா நீ என்னைக் கைவிடவில்லை.
والله ما خيبت من لجأ إليك
உன்னிடம் அடைக்கலம் தேடுபவரை நீ கைவிட மாட்டாய்!
ادعوني استجب لكم " مجيب لكل عباد.
ولم يشترط ان تكون طائع او عاصي
استجاب لابليس عندما دعا قال " ربي فانظرني"
قال" انك من المنظرين" افلا يستجيب لك انت؟!
ஆம்!! "என்னை அழையுங்கள் , நான் உங்களுக்குப் பதிலளிப்பேன்" என்று உன் திருமறையில் நீ கூறுகிறாய்.
"என் இறைவனே, எனக்கு அவகாசம் வழங்கு" என்று ஷைத்தான் அழைத்தபோது கூட அவனுக்கும் செவிசாய்த்து
"நீ அவகாசம் வழங்கப்படுபவர்களில் ஒருவன்" என்று அவர் கூறினாய்.
சபிக்கப்பட்ட அவனுக்கே நீ செவிசாய்த்தாயே.. எங்களுக்கும் பதிலளிக்க மாட்டாயா? நிச்சயம் எங்கள் வேண்டுகோளை நிறைவேற்றுவாய்.
" ان الله حيي كريم يستحي ان يرفع العبد اليه يديه فيردهما صفرا خائبتين "
நபி (ஸல்) அவர்கள், "நிச்சயமாக, அல்லாஹ் தாராள மனப்பான்மை கொண்டவன். ஒரு அடியான் தன் கைகளை தன்னிடம் உயர்த்தினால், அவற்றை வெறுமையாகவும் ஏமாற்றமாகவும் திருப்பி அனுப்ப அவன் மிகவும் வெட்கப்படுகிறான்" என்று கூறினார்கள்.
குர்ஆன் வசனம் ஒன்று :
"أَمَّن يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ"
"அல்லது துன்பப்படுபவர் தன்னை அழைக்கும்போது அவருக்கு பதிலளித்து தீமையை நீக்குபவர் யார்?"
“அதனாலே யா ஷைக்.. என் வாழ்வில் நடந்த இந்த அதிசய நிகழ்வை எல்லோருக்கும் சொல்லுங்கள்.
மக்கள் நிராசை அடையாமல் விரக்தி அடையாமல் தொடர்ந்து வேண்டுகோள் வைத்தால் இறைவன் நிச்சயம் நிறைவேற்றுவான் என்று மக்களுக்கு அறிவியுங்கள்!
16 செப்டம்பர், 2025
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்..?
13 செப்டம்பர், 2025
நேபாளம் ஆடம்பர ஆட்சியாளர்கள் Vs இஸ்லாமிய கலீபாக்கள்
இன்று நேபாளத்தில் அதிரடியாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.
மாணவர்களின் திடீர் புரட்சியால் கிளர்ச்சி ஏற்பட்டு ஜனாதிபதி தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் அமைச்சர்கள் பதவிகளை இழந்து இருக்கிறார்கள். ஆட்சியாளர்கள் வீட்டை விட்டு துரத்தப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த கிளர்ச்சியின் பின்னணியில் நிறைய காரணங்கள் இருக்கின்றன அதற்குள் நாம் செல்லவில்லை.
ஆனால் எல்லோரும் சொல்லுகிற பொதுவான ஒரு காரணம் அதுவும் இருக்கிறது. அது என்ன ?
ஆட்சியாளர்களும் அவர்களது குடும்பங்களும் ஆடம்பரமாக வாழ்ந்த நிகழ்வு.
மக்களில் நிறைய பேர் வேலையின்மை, பசி பட்டினி, பொருளாதார சீரழிவு என்று வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது ஆட்சியாளர்களும் அவரது குடும்பத்தினர்களும் ஆடம்பரமாக வாழுகிற காட்சிகள் இணையத்தில் நிறைய பரப்பப்பட்டன.
அதனால் மக்கள் வெகுண்டு எழுந்து இப்படி ஒரு கிளர்ச்சியை உண்டாக்கி இருக்கிரார்கள் என்று பொதுவான காரணம் சொல்லப்படுகிறது.
(இந்த போராட்டத்தை வேறு சில தீய சக்திகள் தவறாகவும் பயன்படுத்தின என்பது வேறு விஷயம்.)
ஆனால் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் ஜனாதிபதிகள் குறிப்பாக கலீபாக்கள் குடிமக்களின் உரிமைகளையும் கடமைகளையும் எவ்வளவு தூரம் மதித்து நடந்தார்கள் களத்தில் இறங்கி பணியாற்றினார்கள்.
ஏழைகளின் குடிசைகளுக்கே சென்று தினசரி பணிவிடை செய்தார்கள் என்று பார்க்கிறோம்.
இதோ உதாரணத்திற்கு சில நிகழ்வுகள்:
«ومن كان في حاجة أخيه كان الله في حاجته»
١- أبو بكر الصديق رضي الله عنه
: كان عند أطراف المدينة عجوز عمياء ليس لها أحد، فكان أبو بكر يذهب كل صباح قبل أن ينشغل بالخلافة،
فيكنس بيتها housekeeping،
ويعجن عجينها،
ويهيئ طعامها cooking .
فلما رآه عمر رضي الله عنه قال:
"لقد أتعبتَ مَن بعدك يا أبا بكر."
١- அபூபக்கர் சித்தீக் (ரலி):
மதீனாவின் எல்லையில், யாருமற்ற ஒரு பார்வையற்ற வயதான பெண்மணி இருந்தார். அபூபக்கர் (ரலி) அவர்கள் கலீஃபாவின் பணிகளில் ஈடுபடுவதற்கு முன்பு, ஒவ்வொரு காலையிலும் அவரிடம் செல்வார்கள்.
* அவரது வீட்டை சுத்தம் செய்வார்கள் (housekeeping),
* அவருக்காக மாவு பிசைந்து கொடுப்பார்கள்,
* அவருக்காக உணவு தயாரித்துக் கொடுப்பார்கள் (cooking).
இதனை உமர் (ரலி) அவர்கள் பார்த்தபோது, "அபூபக்கரே! உங்களுக்குப் பின் வருபவர்களுக்கு (இந்த நற்செயல்களில்) நீங்கள் பெரும் சுமையை ஏற்படுத்திவிட்டீர்கள்" என்று கூறினார்கள்.
அதாவது ஜனாதிபதி என்பவர் இந்த அளவுக்கு இறங்கி வேலை பார்க்க வேண்டும் என்கிற ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தியதன் மூலம் உங்களுக்கு பின்னால் வரும் ஜனாதிபதிகளுக்கு ஒரு சிரமத்தை ஏற்படுத்தி விட்டீர்கள். இது பெரிய தியாகம் தான்" என்ற கருத்துப்பட சொன்னார்கள்.
٤- عمر بن الخطاب رضي الله عنه
كان يتفقد الناس ليلًا. فدخل على بيتٍ فيه امرأة وأولادها يبكون من الجوع، والقدر على النار فيها ماء فقط!
فبكى عمر، وذهب مسرعًا إلى بيت المال، وحمل كيس الدقيق على ظهره، فقال له خادمه: "دعني أحمله عنك."
فقال عمر: "أتحمل عني وزري يوم القيامة؟!"
ثم جلس يطبخ لهم حتى شبعوا.
- உமர் இப்னுல் கத்தாப் (ரலி):
அவர்கள் ஜனாதிபதியாக இருந்த பொழுது இரவில் மக்களைப் பார்வையிடச் செல்வார். ஒரு வீட்டிற்குள் நுழைந்தபோது, அங்கே ஒரு பெண்ணும் அவளுடைய பிள்ளைகளும் பசியால் அழுதுகொண்டிருந்தனர். அடுப்பில் இருந்த பாத்திரத்தில் தண்ணீரைத் தவிர வேறு எதுவும் இல்லை!
இதைக் கண்டு உமர் (ரலி) அழுதார்கள். விரைவாக பைத்துல்மாலுக்கு (அரச கருவூலம்) சென்று, மாவு மூட்டையைத் தன் முதுகில் சுமந்து வந்தார்கள். அவருடைய வேலையாள், "நான் உங்களிடமிருந்து இதைச் சுமந்து கொள்கிறேன்" என்றார்.
அதற்கு உமர் (ரலி), "மறுமை நாளில் என் சுமையை நீர் சுமப்பீரா?!" என்று கேட்டார்கள்.
பிறகு, அவர்கள் வயிறு நிரம்பும் வரை அவர்களுக்காக அமர்ந்து சமைத்துக் கொடுத்தார்கள்.
«ومن كان في حاجة أخيه كان الله في حاجته»
«யார் தன் சகோதரனின் தேவையை நிறைவேற்றுகிறாரோ, அல்லாஹ் அவருடைய தேவையை நிறைவேற்றுவான்»
عبد الله بن عمر رضي الله عنهما
كان ابن عمر إذا أحبَّ شيئًا من طعامه أو شرابه قال:
"اذهبوا به إلى فلان؛ فإنه يحب هذا."
وكان يقول: "إني لأسمع حاجتي عند أخي فأبادره قبل أن يسألني."
فكان يقضي حاجة الناس حتى من غير أن يطلبوا
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)
இப்னு உமர் (ரலி) அவர்களுக்குத் தங்களின் உணவு அல்லது பானத்தில் ஏதேனும் ஒன்று மிகவும் பிடித்திருந்தால், "இதை இன்னாரிடம் கொண்டு செல்லுங்கள்; ஏனெனில் அவர் இதை விரும்புகிறார்" என்று கூறுவார்கள்.
மேலும், "என் சகோதரரிடம் ஒரு தேவை இருப்பதை நான் அறிந்தால், அவர் என்னிடம் கேட்பதற்கு முன்பே நான் அதை நிறைவேற்ற விரைந்து செல்வேன்" என்றும் கூறுவார்கள்.
இவ்வாறு, மக்கள் கேட்காமலேயே அவர்களின் தேவைகளை அவர் நிறைவேற்றி வந்தார்.
عثمان بن عفان رضي الله عنه
في عام الرمادة حين اشتد القحط في المدينة، جاءت قافلة كبيرة لعثمان رضي الله عنه، فقال له التجار: نشتري منك وتعطينا أرباحًا كثيرة.
فقال: "كم تربحونني؟"
قالوا: عشرة في المئة.
قال: "قد زادني."
قالوا: نعطيك مئتين في المئة.
قال: "قد زادني."
قالوا: لا نعلم أحدًا يزيدك!
قال: "الله أعطاني بكل درهم عشرة. أشهد أن هذه القافلة صدقة على فقراء المسلمين."
فكان يقضي حاجة آلاف من المسلمين
உஸ்மான் (ரலி):
மதீனாவில் கடும் பஞ்சம் நிலவியது. அப்போது உஸ்மான் (ரலி) அவர்களுக்கு ஒரு பெரிய வணிகக் கூட்டம் (قافلة) வந்தது.
வியாபாரிகள் அவரிடம், "நாங்கள் உங்களிடமிருந்து இதை வாங்கிக்கொள்கிறோம், எங்களுக்கு அதிக லாபம் தாருங்கள்" என்றனர்.
அதற்கு அவர், "எனக்கு எவ்வளவு லாபம் தருவீர்கள்?" என்று கேட்டார்.
அவர்கள், "பத்து சதவீதம்" என்றனர்.
அவர், "எனக்கு இதைவிட அதிகமாகக் கிடைத்துள்ளது" என்றார்.
அவர்கள், "நாங்கள் உங்களுக்கு இருநூறு சதவீதம் தருகிறோம்" என்றனர்.
அவர், "எனக்கு இதைவிட அதிகமாகக் கிடைத்துள்ளது" என்றார்.
அவர்கள், "உங்களுக்கு இதைவிட அதிகமாகத் தருபவர் எவரும் இருப்பதாக நாங்கள் அறியவில்லை!" என்றனர்.
அதற்கு அவர், "அல்லாஹ் ஒவ்வொரு திர்ஹத்திற்கும் எனக்குப் பத்து மடங்கு தருவதாக வாக்களித்துள்ளான். இந்த வணிகக் கூட்டம் முஸ்லிம்களில் உள்ள ஏழைகளுக்கு தர்மம் (ஸதகா) என நான் சாட்சி கூறுகிறேன்" என்றார்.
இவ்வாறு, ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் தேவையை அவர் நிறைவேற்றினார்.
📌 இவை நபித்தோழர்களின் வாழ்வில் நடந்த மாபெரும் நிகழ்வுகள். மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் அவர்கள் எவ்வாறு விரைந்து செயல்பட்டார்கள் என்பதை இது காட்டுகிறது.
அதனால்தான் அண்ணல் காந்தியடிகள் சொன்னார்
"இந்தியாவில் ஜனாதிபதி உமர் அவர்களின் ஆட்சியைப் போல வந்தால் இந்தியா சுபிட்சம் அடையும்."
இந்தியா நேபாளம் மாத்திரமல்ல உலகத்தின் நாடுகளில் எல்லாம் இஸ்லாமிய கலீபாக்களின் நேர்மையான ஆட்சியைப் போல வந்தால் எளிமையான ஆட்சியாளர்கள்; செழிப்பான குடிமக்கள் நிம்மதியான பாதுகாப்பான வாழ்க்கை வாழ்வார்கள் என்பதில் ஐயமில்லை
-
1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும் ? அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் ( 16:98) மற்றும் ப...
-
முந்தைய பதிவுகள்: திருக்குர்ஆன் வினாடி வினா 1-40 திருக்குர்ஆன் வினாடி வினா 41-80 81) திருக்குர்ஆனுக்கு முந்தைய வேதங்கள் எவை ? ...
-
இதுவரை அடியேனின் பார்வையில் பட்ட தளங்கள்.! இன்னும் இருந்தால் அதை கருத்துரையில் தெரிவித்தால் அவசியம் சேர்த்துக்கொள்கிறேன் இன்ஷா அல்லாஹ். ...



